Skip to main content

Posts

தடங்கல் இல்லாமல் பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும்

  ஒரு சாமியாரின் ஆசிரமத்துக்கு அவர் நண்பர் ஒருவர் வந்தார்..!! அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய *"சாமியார்",* தான் வளர்த்த குரங்கைப் பார்த்து இலை போடு என்றார்.. குரங்கு வாழை இலை எடுத்து வந்து போட்டது..  உடனே சாமியார் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்து சாதம் போடு என்றார்..!! குரங்கு சாதம் கொண்டு வந்து பரிமாறியது.. திரும்பவும் தலையில் அடித்தார்..!! அவர் சொன்னதை எல்லாம் குரங்கு சரியாகச் செய்தாலும் அடி விழுந்து கொண்டே இருந்தது... நண்பருக்கு மனம் பொறுக்கவில்லை.. சாமி குரங்கு தான் நீங்கள் சொன்னதை எல்லாம் சரியாகச் செய்கின்றதே..?? அந்த வாயில்லாச் ஜீவனை ஏன் அடித்துத் துன்புறுத்துகிறீர்கள் என்று கேட்டார்..!! சாமியார் எதுவும் பேசவில்லை.. சிரித்து விட்டுப் பிரம்பை தானிருந்த பாயின் கீழே ஒளித்து வைத்தார்... சற்று நேரத்தில் குரங்கு தாவிப் பாய்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் தோளில் ஏறி இருந்தது.. காதைப் பிடித்து இழுத்தது.. தலை மயிரைப் பிரித்துப் பேன் பார்த்தது... சாப்பிட்ட இலையில் வாலைத் தொங்க விட்டு ஆட்டியது.. உடனே சாமியார் நண்பர், ஐயோ சாமி இந்தக் குரங்கின் தொ...

அதிதி பூஜை

சூத கோஸ்வாமி கூறினார்.மா முனிவர்களே, உலகில் அனைத்து பூஜைகளிலும் சிறந்தது அதிதி பூஜை. அளவற்ற நற்பலனைத் தரக் கூடியது. தன்னிடமுள்ளவற்றால், வந்த அதிதியை திருப்திப்படுத்துகிறவர்கள் உத்தமலோகங்களை அடைவார்கள். மகனீஸ்யர்களாவார்கள். தன் வீட்டுக்கு வந்தவர்களை நாராயண ஸ்வரூபமாக நினைத்து பூஜிப்பவர்கள் மகா நரகங்களை வென்று திவ்ய வைகுண்டத்திற்குச் செல்வார்கள். அதிதி பூஜை செய்து புண்ணிய லோகங்களை அடைந்தவர்கள் பலர். அதற்கு உதாரணமாக ஒரு கதை கூறுகிறேன் கேளுங்கள்  முன்பு கங்கை நதிக்கரையில் ஒரு பிராமணக் குடும்பம் வாழ்ந்து வந்தது. தாய், தந்தை, மகன், மருமகள் என்னும் நால்வர்தான் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள். இவர்கள் யாரிடமும் யாசகம் கேளாமல் வயல்களில் இரைந்து கிடக்கும் ஈரமான தானியமணிகளை சேகரித்துக் கொண்டு வந்து காயவைத்து, இடித்து, நான்கு உருண்டைகளாக்கி நால்வரும் சாப்பிட்டு நாட்களை கழித்து வந்தனர். அவர்கள் மகா பக்தர்கள். அவர்களின் இந்த சேவையால் மகிழ்ச்சியடைந்த பகவான் ஶ்ரீமன் நாராயணன் அவர்களிடம் லீலை புரிய எண்ணி ஒரு கிழப் பிராமணர் உருவத்தில் பசியால் துடிப்பவரைப் போல் கண்களை மேல் சொருகிக் கொள்ள, வாயால் மூச...

கிருஷ்ணரின் கருணை

 

அறிவோம் கௌரங்க மஹாபிரபுவை

 

புனித நாமம்

 

கிருஷ்ண பக்தியை குழந்தை பருவத்திலேயே மனதில் விதைக்க வேண்டும்

 

புஷ்ப அபிஷேகம்