'ரகுநந்தனா, நானும் பதினான்கு ஆண்டுகள் வரை சடைகள் தாங்கி, மரவுரி தரித்து, பழங்களையும், கிழங்குகளையும் உண்டு, உங்களது வருகையை எதிர்நோக்கி நகரத்துக்கு வெளியே வாழ்வேன். எதிரியைப் பொசுக்குபவரே! அவ்வளவு நாட்களுக்கும் இந்த அரசை நடத்தும் பொறுப்பு இப்பாதுகைகளிடமே இருக்கும். ரகுகுல ஏந்தலே! பதினான்கு ஆண்டுகள் நிறைவுற்றவுடனே அதே நாளில் உங்களது தர்சனம் கிடைக்கப் பெறவில்லை என்றால் நான் எரியும் நெருப்பில் புகுந்துவிடுவேன்!' என்று சூளுரைத்தார். பரதன் கூறிய இச்சூளுரையைக் கேட்ட பகவான் மகிழ்ச்சி யுடன் அதை ஏற்றுக்கொண்டார். பிறகு பரதனிடமும், தம்பி சத்ருக்னனிடமும், தாயான கைகேயினிடமும் நல்லமுறையில் நடந்துகொள்ளச் சொல்லி அறிவுறுத்தினார். இருவரையும் மார்புறத் தழுவிக்கொண்டார். விடையும் கொடுத்தார். அப்போது பரதனின் பிரிவைத் தாங்காமல் ஸ்ரீராமனுடைய கண்களில் கண்ணீர் நிரம்பிற்று. ditative இதற்கப்பால் பரதன் பகவானுடைய பாதுகைகளைத் தம் தலைமேல் ஏந்தியவாறு, மிக்க மனநிறைவோடு தேரேறினார். வழியில் பரத்வாஜ முனிவரைச் அனைத்தையும் உரைத்து. சந்தித்து, நடந்தவை அவரிடம் அனுமதி பெற்று சிருங்கபேரபுரம் வழியாக அயோத்தி வந்தடைந்தார்....