Skip to main content

கருணாமூர்த்தி



பகவத்கீதையில் (9.29) பகவான் கூறுகிறார்:


ஸமோ ‘ஹம் ஸர்வ - பூதேஷு ந மே த்வேஷ்யோ ‘ஸ்தி ந ப்ரிய:

யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாபி அஹம்


“நான் யாரிடமும் பொறாமை கொள்வதோ அல்லது பட்சபாதம் காட்டுவதோ இல்லை. அனைவரிடமும் நான் சமமாகவே நடந்து கொள்கிறேன். ஆனால் பக்தியுடன் எனக்குச் சேவை செய்பவன் யாராயினும் அவன் என் நண்பனாவான். அவன் என்னில் இருக்கிறான், நானும் அவனிடம் ஒரு நண்பனாக இருக்கிறேன்.” பரமபுருஷ பகவான் அனைத்து ஜீவராசிகளிடமும் நிச்சயமாக சமமாகத்தான் இருக்கிறார். ஆனால் பகவானின் தாமரைப் பாதங்களில் முழுமையாக சரணடையும் பக்தரொருவர் பக்தரல்லாதவரிடமிருந்து வேறுபட்டவராவார். அதாவது, பகவானிடமிருந்து சமமான ஆசீர்வாதங்களைப் பெற்று மகிழ அனைவரும் அவரது திருவடிகளில் புகலிடம் கொள்ளலாம். ஆனால் பக்தரல்லாதவர்கள் அவ்வாறு செய்வதில்லை. இதனால் ஜட சக்தியால் உண்டாக்கப்பட்ட விளைவுகளால் அவர்கள் துன்புறுகின்றனர். ஒரு சாதாரண உதாரணத்தால், இவ்வுண்மையை நம்மால் புரிந்துகொள் முடியும். அரசர் அல்லது அரசாங்கம் எல்லாப் பிரஜைகளிடமும் சமமாக இருக்கிறது. ஆகவே, பிரஜை ஒருவர் அரசாங்கத்திடமிருந்து விசேஷ ஆதரவுகளைப் பெறும் தகுதி படைத்தவராக இருந்தால் அவருக்கு அத்தகைய ஆதரவுகள் அளிக்கப்படுகின்றன. அரசாங்கம் பாரபட்சம் கொண்டுள்ளது என்பதை இது குறிக்காது. அதிகாரியிடமிருந்து ஆதரவைப் பெறும் வழியை அறிந்திருப்பவரால் அதைப் பெறமுடியும்.அறியாதவர்கள் இத்தகைய ஆதரவை அலட்சியப்படுத்துவதால், இதை அவர்கள் பெறுவதில்லை. இரு வகையான மனிதர்கள் உள்ளனர் - அசுரர்கள் மற்றும் தேவர்கள். தேவர்கள் பகவானின் நிலையை நன்கு அறிந்திருப்பதால், அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றனர். ஆனால் பகவானின் உயர்வை அசுரர்கள் அறிந்திருந்தாலும், வேண்டுமென்றே பகவானின் அதிகாரத்தை அவர்கள் எதிர்க்கின்றனர். ஆகவே, ஜீவராசியின் மனோபாவத்திற்கேற்ப பகவான் வேறுபாடுகளைக் காண்கிறார். இல்லையெனில் அனைவருக்கும் அவர் சமமானவர்தான். தன்னிடம் புகலிடம் கொள்பவரின் விருப்பங்களை பகவான் ஒரு கற்பக விருட்சத்தைப் போல் நிறைவேற்றுகிறார். ஆனால் புகலிடம் கொள்ளாதவர் சரணடைந்துள்ள ஆத்மாவிலிருந்து வேறுபட்டவராவார். பகவானின் மலர்ப்பாதங்களில் புகலிடம் கொள்பவன் ஓர் அசுரனாகவோ அல்லது பக்தனாகவோ இருந்தாலும் பகவான் அவருக்கு ஆதரவளிக்கிறார்.


ஶ்ரீமத் பாகவதம் 8.23.8 / பொருளுரை


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...