சித - விசிக - ஹதோ விசீர்ண - தம்ச : க்ஷதஜ - பரிப்லுத ஆததாயினோ மே ப்ரஸபம் அபிஸஸார மத் - வதார்தம் ஸ பவது மே பகவான் கதிர் முகுந்த : மொழிபெயர்ப்பு முக்தி அளிப்பவரான , அந்த பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எனது முடிவான இலக்காக இருப்பாராக , எனது கூரிய அம்புகளால் ஏற்பட்ட காயங்களினால் கோபமடைந்ததைப் போல் , போர்க்களத்தில் என்னை அவர் திடீரென்று தாக்க முற்பட்டார் . அவரது கேடயம் சிதறிப் போயிருந்தது . மேலும் காயங்களினால் அவரது உடலில் இரத்தம் தோய்ந்திருந்தது . பொருளுரை கிருஷ்ணரும் , பீஷ்மரும் போர்க்களத்தில் நடந்து கொண்ட முறை கவனத்தைக் கவர்வதாக இருந்தது . ஏனெனில் , கிருஷ்ணரின் செயல் அர்ஜுனனுக்குச் சாதகமாகவும் , பீஷ்மருக்கு பாதகமாகவும் இருந்ததைப் போல் காணப்பட்டது ; ஆனால் உண்மையில் சிறந்த பக்தரான பீஷ்மதேவருக்கு விசேஷ அன்பைக் காட்டுவதற்காகவே இவ்வளவும் நிகழ்ந்தன . ஓரெதிரியைப் போல் நடந்துகொள்வதாலும் பக்தரால் பகவானை மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்பதே இத்தகைய விவகாரங்களின் பிரமிக்கச் செய்யும் அம்சமாகும் . பகவான் பரிபூரண...