Skip to main content

Posts

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ண சைதன்யர்

  புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ண சைதன்யர் வழங்கியவர் :- தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி பரம்பொருளான முழுமுதற் கடவுள் தனது நித்தியமான திவ்ய ஸ்வரூபத்தில் அவ்வப்போது இப்பிரபஞ்சத்தில் அவதரிக்கின்றார். அவ்வாறு வருவதற்கு எந்த கட்டாயத்திற்கும் அவர் உட்பட்டவரல்ல என்றபோதிலும், அவரைப் பற்றிய அறிவை இழந்து இப்பௌதிக உலகில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை தாழ்ந்த கட்டுண்ட ஆத்மாக்களின் நன்மைக்காக அவர் வருகிறார். பகவானின் அவதாரம் லௌகீகத்தில் மூழ்கியுள்ளவர்களுக்கு மிகப்பெரிய புதிராகும். கடவுளைப் பற்றிய குறுகிய கருத்தைக் கொண்டுள்ள பெரும்பாலான ஆன்மீகவாதிகள்கூட, கடவுள் எவ்வாறு இவ்வுலகத்திற்கு தனிப்பட்ட முறையில் வர இயலும் என்று சந்தேகம் கொள்கின்றனர். ஆனால் தான் விரும்பும் எதையும் முழுமுதற் கடவுளால் செய்ய இயலும்; தனது திவ்யமான லீலைகளை அரங்கேற்றுவதற்காகவும் தனது பக்தர்களைக் காப்பாற்றுவதற்காகவும் பிரபஞ்சத்தை உய்விப்பதற்காகவும் இவ்வுலகில் தோன்றுவதில் அவர் மகிழ்ச்சியடைகிறார் என்று வேத இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. பிரிக்கவியலாத ஒரே நபராக இருப்பினும், அவர் பல்வேறு ரூபங்களை ஏற்றுக் க...

“வைஷ்ணவானாம் யதா ஸம்பு:”

 

சிவபெருமான்

 

சிவபெருமான்

 

சிவபெருமானின் கருணையால் விஷ்ணு பக்தியை பெற்ற பிரசேதர்கள்

  வயம்து ஸாக்ஷாத் பகவன் பவஸ்ய ப்ரியஸ்ய ஸக்யு: க்ஷண-ஸங்கமேன ஸூதுஸ் சிகித்ஸ்யஸ்ய பவஸ்ய ம்ருத்யோர் பிஷக்தமமம் த்வாத்ய கதிம் கதா: ஸ்ம மொழிபெயர்ப்பு உமக்கு மிகவும் பிரியமானவரும், உமது நெருங்கிய நண்பராகவும் இருக்கும் சிவபெருமானுடன் ஒரு கணநேரம் தொடர்பு கொண்டதால் உம்மைக்காணும் பேறு பெற்றோம். வாழ்க்கையென்னும் தீராத நோயைக் கூடத் தீர்க்கும் தேர்ந்த மருத்துவர் நீர். எங்களது நல்வினைப்பயனால் உமது திருவடித்தாமரைகளைச் சரண்புக எங்களால் முடிந்தது. பொருளுரை “ஹரிம் வினா ஸ்ருதிம் தரந்தி” என்று சொல்லப்பட்டிருக்கிறது. முழுமுதற்கடவுளின் திருவடித் தாமரைகளைச் சரணடையாது. பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு போன்றவற்றை மீண்டும் மீண்டும் அளிக்கும் மாயையின் பிடியிலிருந்து ஒருவனால் விடுதலை பெற முடியாது. பிரசேதார்கள், சிவபெருமானின் கருணையினாலேயே முழுமுதற்கடவுளைச் சரணடைந்தனர். சிவபெருமான் முழுமுதற் கடவுளான பகவான் விஷ்ணுவின் பரமபக்தன் ஆவார். “வைஷ்ணவானாம் யதா ஸம்பு:” சிவபெருமானே மிகச் சிறந்த வைணவராவர். அவரது உண்மையான பக்தர்கள் அவரது அறிவுரையினைப் பின்பற்றி பகவான் விஷ்ணுவின் தாமரைத் திருவடிகளைச் சரணடைகின்றனர். உலகத்துச் செல...

ஹரியும் சிவனும் ஒன்றா? அறியாதவன் வாயில் மண்ணா?

ஹரியும் சிவனும் ஒன்றா? அறியாதவன் வாயில் மண்ணா? வழங்கியவர்கள்: ஸ்ரீ கிரிதாரி தாஸ், ஜீவன கௌரஹரி தாஸ் சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் இடையிலான அபிப்பிராய பேதங்களும் சண்டை சச்சரவுகளும் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. சிலர் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்றும், வேறு சிலர் விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்றும் கூறி, சிவனையும் விஷ்ணுவையும் வெவ்வேறு துருவங்களாக வழிபடுகின்றனர். இவர்களுக்கு மத்தியில், ஹரியும் சிவனும் ஒன்று, அறியாதவன் வாயில் மண்ணு” என்று கூறி, இருவரையும் சமாதானப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இவர்களின் வாதங்கள் ஒருபுறம் இருக்க, சாஸ்திரங்களின் அடிப்படையில் மக்களிடம் உள்ள தவறான கருத்துகளை தெளிவுபடுத்தும் இந்த ஞானவாள் பகுதியில், இதனைச் சற்று ஆராய்ந்து பார்ப்போம். சிவபெருமானை உணர்வது எளிதல்ல கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்பதை பல்வேறு சாஸ்திரங்களைக் கொண்டு பகவத் தரிசனத்தில் பலமுறை விளக்கியிருப்பதால், இங்கே சிவபெருமானுக்கும் விஷ்ணுவிற்கும் உள்ள உறவையும், அவர்கள் இருவரும் ஒருவரா என்பதை அறிவதிலும் கவனம் செலுத்தலாம். சிவபெருமானின் நி...