Skip to main content

Posts

பாரிஜாத மலரின் கதை

  சத்தியபாமா ,  துவாரகையிலுள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முக்கிய ராணிகளுள் ஒருத்தி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனைக் கொன்றபின் , அவருடைய அரண்மனையைக் காண சத்தியபாமாவுடன் சென்றார் . சக்தியபாமாவுடன் அவர் இந்திரலோகத்திற்கும் சென்றார் . அங்கு சசிதேவி அவளை வரவேற்று தேவர்களின் தாயான அதிதிக்கு அறிமுகம் செய்து வைத்தாள் . சக்தியபாமாவிடம் மிகவும் திருப்தியடைந்த அதிதி , பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூமியில் இருக்கும்வரை மாறாத இளமையோடு இருக்கும் வரத்தை அவளுக்கு அளித்தாள் . பிறகு ஸ்வர்கலோகங்களில் உள்ள , தேவர்களுக்கே உரிய தனிப்பட்ட உரிமைகளைக் காட்டுவதற்காக அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள் . சத்தியபாமா பாரிஜாத மலரைக் கண்டதும் , அச்செடியை துவாரகையிலுள்ள தன் அரண்மனையில் வைத்து அலங்கரிக்க விரும்பினாள் . பிறகு துவாரகைக்குத் திரும்பியதும் , பாரிஜாத மலரைப் பற்றிய தமது விருப்பத்தை கணவனிடம் தெரிவித்தாள் . சத்தியபாமாவின் அரண்மனை முக்கியமாக அரிய நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது . இதனால் மிகவும் உஷ்ணமான கோடைக் காலத்திலும் க...

பக்தி தொண்டு

 

பக்தி தொண்டு

 

பக்தி தொண்டு

 

பிரகலாத மகாராஜனின் பிரார்த்தனைகள்

 

பிரகலாத மகாராஜனின் பிரார்த்தனைகள்

 

விருந்தினரை வரவேற்கும் முறை

ஓர் எதிரியை வீட்டிற்கு வரவேற்பதென்றாலும் அதை மரியாதையுடன் செய்யவேண்டுமென்பது வேதக் கட்டளையாகும். எதிரியின் வீட்டிலிருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படாத வண்ணம் அவரை நன்கு உபசரிக்க வேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுடனும், பீமனுடனும் மகத ராஜனான ஜராசந்தனை அணுகியபோது, மதிப்பிற்குரிய எதிரிகளை ஜராசந்தன் ராஜ மரியாதையுடன் வரவேற்றான். எதிரி விருந்தினராக இருந்த பீமன் ஜராசந்தனுடன் சண்டை செய்வதாக இருந்தது. இருப்பினும் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவில் அவர்கள் நண்பர்களைப் போலவும், விருந்தினர்களைப் போலவும் ஒன்றாக அமர்ந்திருப்பது வழக்கம். பகலிலோ வாழ்வா, சாவா என்ற ஆபத்தான சூழ்நிலையுடன் அவர்கள் போர் செய்தனர். அதுதான் உபசரணை விதியாகும். ஒருவன் பரம ஏழையாக இருந்தாலும், குறைந்தது ஒரு புல்லாசனம், குடிப்பதற்கு சிறிது நீர் மற்றும் இனிய வார்த்தைகள் ஆகியவற்றையாவது தன் விருந்தினருக்கு அளிக்க வேண்டும் என்பது உபசரணை விதி. எனவே ஒரு விருந்தினர் நண்பராகவோ அல்லது எதிரியாகவோ இருந்தாலும் அவரை வரவேற்று உபசரிப்பதில் எந்த செலவும் இல்லை. நற்பண்புதான் இதற்குத் தேவை.  ( ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம்...