Skip to main content

Posts

வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், ஶ்ரீமத் பாகவதம் ஏன், யாருக்காக, எதற்காக ,எழுதப்பட்டது ?

  ஆரம்பத்தில் ஒரே ஒரு வேதம் மட்டும் இருந்தது . அதைப் படிக்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை . ஒரு முறை குருவிடம் கேட்ட மாத்திரமே புரிந்துகொள்ளக் கூடிய புத்தி கூர்மையும் நினைவாற்றலும் மக்களுக்கு இருந்தன . முழுக் கருத்தையும் நொடியில் புரிந்து கொள்வார்கள் . ஆனால் 5,000 ஆண்டுகட்கு முன்னர் , கலியுக மக்களின் வசதிக்காக வியாசதேவர் வேதங்களை எழுத்தில் வடித்தார் . நாளடைவில் மக்களின் வாழ்நாள் குன்றி , நினைவாற்றல் குறைந்து , புத்தி மழுங்கிப் போய் விடுமென்பதை அறிந்திருந்த வியாசர் வேத ஞானத்தை எழுத்தில் வடித்துவிடுவது நல்லதென்று எண்ணினார் . அவர் வேதங்களை நான்காகப் பிரித்தார் : ரிக் , சாம , யஜுர் , அதர்வ , பின்னர் இந்த வேதங்களைத் தனது பல்வேறு சீடர்களிடம் ஒப்படைத்தார் . பிறகு , புத்தியில் குறைந்தவர்களான ஸ்த்ரி , சூத்திரர் , த்விஜ - பந்து ஆகியோரைப் பற்றி எண்ணினார் . பெண்கள் , தொழிலாளிகளான சூத்திரர்கள் , உயர் குடியில் பிறந்தும் உரிய தகுதிகளைப் பெறாத த்விஜ - பந்துக்களையும் பற்றி அவர் எண்ணினார் . பிராமண குலத்தில் பிறந்தும் பிராமணர்...

சாதுக்களை வீட்டில், வரவேற்று உபசரிக்கும் வழிமுறைகள்

 பதம் 10 அதனா அபி தே தன்யா: ஸாதவோ க்ருஹ - மேதின: யத் க்ருஹா ஹி அர்ஹ - வர்யாம்பு - த்ருண - பூமீஸ்வரா வரா: மொழிபெயர்ப்பு குடும்ப வாழ்க்கையில் பற்றுடையவன், பெரிய செல்வந்தனாக இல்லாது இருந்தபோதும் அவனது இல்லத்திற்கு தெய்வீக அருளாளர்கள் விஜயம் செய்தால் அவன் மிகவும் பெருமையுடையவனாகிறான். அவ்வருளாளர்களுக்கு நீரும், அமர்வதற்கான ஆசனமும், உபசாரப் பொருட்களும் வழங்கும் அந்த வீட்டின் எஜமானனும் பணியாட்களும் பெருமையடைகின்றனர். ஏன் அவனது இல்லமே பெருமையடைகின்றது. பொருளுரை இந்த உலகத்தில் ஒருவனிடம் பணம் இல்லையென்றால் அவன் பெருமையடைவது இல்லை, இல்லற வாழ்வில் மிகவும் ஈடுபாடுடைய ஒருவனுக்கு ஆன்மீக உலகில் பெருமைகள் இல்லை. ஆனால் பௌதீக அருளாளர்கள் ஓர் ஏழையின் குடிசைக்கோ அல்லது இல்லறத்தில் அதிக ஈடுபாடுடையவனிடமோ வருகை தருவதற்குத் தயாராகவே இருக்கின்றார்கள். இவ்வாறு நேரும் பொழுது அவ்வீட்டின் எஜமானும் அவனது பணியாட்களும் அப்பெரியவர்களின் பாதங்களைச் சுத்தம் செய்வதற்குத் தண்ணீரும் அமர்வதற்கு இருக்கைகளும் தந்து உபசரிப்பதினால் அவர்களும் பெருமை பெறுகின்றனர். முடிவாக நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் ஒரு சாதாரண மனிதன் கூ...

விருந்தாவனத்தில் வசிப்பது என்றால் என்ன ?

கிருஷ்ண பக்தர்கள் எப்போதும் விருந்தாவனத்தில் வசிக்க விரும்புகிறார்கள். ஆனால் விருந்தாவனத்தில் வாழ்வது என்றால் என்ன? மேலும் அணைவரும் விருந்தாவனத்தில்  வாழ்வது சாத்தியமா ? என்பதை இனி விளக்கமாக கான்போம் விருந்தாவனத்தில் வசிப்பது என்றால் என்ன ? விருந்தாவனத்தில் வசிப்பது என்பது அங்கு உடல் ரீதியாக இருப்பது மட்டும் அல்ல. ஒருவன் விருந்தாவனத்தில் உடல் ரீதியாக தங்கியிருந்தாலும், பக்தியில் ஈடுபடாமல், பாவச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், அவன் உண்மையில் விருந்தாவனத்தில் வசித்து என்ன பயன் ? இப்படிப்பட்ட மனிதர்கள் உண்மையில் விருந்தாவணத்தில் வசிக்கவில்லை. ஆனால் ஒருவன் விருந்தாவனத்திருக்கு வெளியே எப்போதும் கிருஷ்ணரின் நாமங்களை உச்சரித்துக்கொண்டும், பல்வேறு கிருஷ்ண உணர்வு செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பானாயின், அவன் உண்மையில் விருந்தாவனத்தில் வசிக்கிறான். ஸ்ரீல பிரபுபாதர் கூறுகிறார், "ஒரு தூய பக்தன் தனது பக்தித் தொண்டினால் , விருந்தாவனத்தின் சூழலை எங்கு வேண்டுமானாலும் உருவாக்க முடியும்." இங்கே பிரபுபாதர் பக்தி தொண்டின் முக்கியத்துவத்தையும், நாம் தொடர்ந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டிருந்தால்,...

கிருஷ்ண பக்தியை எளிதாக மேற்கொள்வது எவ்வாறு?

கிருஷ்ணர் கூறுகிறார், அன்புடனும் பக்தியுடனும் ஒருவன் எனக்கு இலையோ, பூவோ, பழமோ, நீரோ அளித்தால் அதனை நான் ஏற்கின்றேன்.(பகவத் கீதை 9.26) பகவத் கீதை 9.26 ல் எவ்வாறு  கிருஷ்ண பக்தியை, எளிதாக பயிற்சி செய்து அதன் மூலம் கிருஷ்ணரை எவ்வாறு அடைவது என்பதை விளக்குகிறது. இந்த ஸ்லோகத்தில் கொடுக்கப்பட்ட செயல்முறை மிகவும் எளிமையானது மற்றும் இதை யார் வேண்டுமானாலும் பயிற்சி செய்ய முடியும். அது எவ்வாறு என்று மேலும் விவரமாக காண்போம் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் நமது செயலின் நோக்கத்தைக் மட்டுமே காண்கிறார் பிரபஞ்சம் முழுவதும் அணைத்தையும் படைத்த பரம புருஷ பகவானான கிருஷ்ணருக்கு நாம் பூரணமாக எதையும் அளிக்க முடியாது. ஏனெனில் அணைத்தும் நாம் அவரிடம் இருந்து பெற்றுள்ளோம். அதனால் நாம் அர்ப்பணிக்கின்ற பொருட்கள் மற்றும் அதன் மதிபை பற்றி அவர் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை, ஆனால் நாம் எந்த நோக்கத்துடன் அந்தப் பொருட்களை அவருக்கு வழங்குகிறோம் என்பதில் அவர் ஆர்வம் காட்டுகிறார். கிருஷ்ணர் பரம புருஷர். முழு படைப்பிலும் உள்ள அனைத்தையும் அவர் சொந்தமாக வைத்திருக்கிறார். அவர் தன்னிறைவு பெற்றவர். எனவே, அவருக்கு நம்மிடம் உள்ள எதுவும் த...

தனிப்பட்ட உணர்விற்கும் பரம உணர்விற்கும் இடையிலான வேறுபாடு

  யதா ப்ரகாஷ யத் - யேக :  க்ருத்ஸ்னம் லோகம் இமம் ரவி : க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா க்ருத்ஸ்னம்   ப்ரகாஷ யதி பாரத பரதனின் மைந்தனே, ஒரே ஒரு சூரியன் இந்த பிரபஞ்சம் முழுவதையும் பிரகாசமாக்குவதைப் போல, உடலினுள் இருக்கும் ஆத்மா, தனது உணர்வினால் உடல் முழுவதையும் பிரகாசப்படுத்துகின்றான். பொருளுரை: உணர்வைப் பற்றி பல்வேறு கொள்கைகள் இருக்கின்றன. இங்கே பகவத் கீதையில் சூரியனும் சூரியக் கதிர்களும் உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஓரிடத்தில் அமைந்துள்ள சூரியன் அகிலம் முழுவதையும் பிரகாசப்படுத்துவதைப் போல, சிறு துகளாகிய ஆன்மீக ஆத்மா, உடலின் இதயத்தில் அமைந்திருந்தாலும் உணர்வின் மூலம் உடல் முழுவதையும் பிரகாசப்படுத்துகின்றது. எனவே, சூரியக்கதிர் அல்லது வெளிச்சமானது சூரியன் இருப்பதற்கு சாட்சியாக விளங்குவதைப் போல, உணர்வானது ஆத்மா இருப்பதற்கு சாட்சியாக விளங்குகின்றது. உடலில் ஆத்மா இருக்கும்பொழுது உணர்வானது உடல் முழுவதும் காணப்படு கின்றது, ஆத்மா உடலிலிருந்து நீங்கியவுடனேயே உணர்வு எதுவும் இருப்ப தில்லை. அறிவுள்ள எந்த மனிதனாலும் இதனை எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும். எனவே, உணர்வு என்பது ஜ...

பௌதிக வாழ்வின் துன்பத்தை தொடரச் செய்வது அறியாமையாகும்

 

அறிவை பக்குவப்படுத்துவதில் பதினெட்டு முறைகள்