Skip to main content

Posts

ஹரே கிருஷ்ண மந்திர ஜபத்தின் வலிமை

    நெருப்பானது , ஒன்றுமறியாத ஒரு குழந்தையால் கையாளப்பட்டாலோ அல்லது அதன் சக்திகளை நன்கறிந்த ஒருவனால் கையாளப்பட்டாலோ அது செயற்படவே செய்யும் . உதாரணமாக , காய்ந்த வைக்கோல் அல்லது புல் உள்ள ஒரு வயலில் , நெருப்பின் சக்தியை அறிந்த ஒரு முதியவர் தீ வைத்தாலோ அல்லது ஒன்று ம்  மறியாத ஒரு குழந்தை தீ வைத்தாலோ அது எரிந்து சாம்பலாகிவிடும் என்பது நிச்சயம் . அதுபோலவே , ஹரே கிருஷ்ண மந்திர ஜபத்தின் வலிமையை ஒருவன் அறிந்தோ அல்லது அறியாமலோ இருக்கக் கூடும் . ஆனால் அப்புனித நாமத்தை ஒருவன் ஜபித்தால் , எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் அவன் விடுபடுவான் . ஒரு குறிப்பிட்ட மருந்தின் நல்ல பலனளிக்கும் சக்தியை அறியாத ஒருவன் , அந்த மருந்தை உட்கொண்டால் , அல்லது வலுக்கட்டாயமாக உட்கொள்ளச் செய்யப்பட்டால் கூட , அவனுக்குத் தெரியாமலேயே அது செயற்படுகிறது . ஏனெனில் , அதன் ஆற்றல் நோயாளிக்குத் தெரியுமா , தெரியாதா என்பதைப் பொறுத்ததல்ல . அதுபோலவே , பகவானின் புனித நாம ஜபத்தின் மகிமையை ஒருவன் அறிந்திருக்கவில்லை என்றாலும் , அறிந்தோ , அறிய...

ஸ்ரீ மாயாபுரைக் கண்டுபிடித்தல்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்த மாயாபுர் அல்லது நவத்வீபம் எனப்படும் ஊரானது கிபி 1800ம் ஆண்டுவாக்கில் கிட்டத்தட்ட மறைந்து போய்விட்டது. மேலும், பகவான் சைதன்யரின் தத்துவங்களை முறையாக அறிந்தவர்கள் வெகு சிலரே இருந்தனர். அம்மாதிரியான நபர்களில் ஒருவர்தான் பிரபுபாதரின் ஆன்மீக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரின் தந்தையான ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஆவார். ஸ்ரீல பக்திவினோத தாகூர் முறையான சீட பரம்பரையில் பகவான் சைதன்யரின் உபதேசங்களை ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜரிடமிருந்து பெற்றிருந்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை உண்மையாகப் பின்பற்றுபவர் என்ற வகையில், ஸ்ரீல பக்திவினோத தாகூர் பகவான் ஸ்ரீ சைதன்யர் அவதரித்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நவத்வீபம் என்ற பெயரில் அப்போது அறியப்பட்ட ஊர் சுமார் நூறு ஆண்டுகள் மட்டுமே பழமையானது என்பதை அறிந்து, ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஆச்சரியம் அடைந்தார். ஏனெனில், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்த நவத்வீபம் நிச்சயம் மிகவும் பழமையானதாக இருந்திருக்க வேண்டும். எனவே, மஹாபிரபு அவதரித்த அன்றைய நவத்வீபமும் மக்கள் கூறும் நவத்வீபமும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்...

கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!...

  கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... ***********     5000 ஆண்டுகளுக்குமுன்பே கூறிய முன்னோர்கள் நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள். பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன.      5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும். ஆச்சரியப்பட தயாராக இருங்கள்!... 1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும்.   [பாகவத புராணம் 12.2.1] 2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும் மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை. மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அட...

சரணாகதியின் ஆறு அறிகுறிகள்

  சரணாகதியின் ஆறு அறிகுறிகள்  ********** ஆனுகூல்யஸ்ய ஸங்கல்ப:  ப்ராதிகூல்யஸ்ய வர்ஜனம் ரக்ஷிஷ்யதீதி விஷ்வாஸோ  கோப்த்ருத்வே வரணம் ததா ஆத்ம-நிகே்ஷப-கார்பண்யே  ஷட்-விதா ஷரணாகதி: -  (1) கிருஷ்ண உணர்விற்கு சாதகமான விஷயங்களை ஏற்றல்,  (2) கிருஷ்ண உணர்விற்கு எதிரான அல்லது பாதகமான விஷயங்களைக் கைவிடுதல், (3) கிருஷ்ணர் தனது பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பைத் தருவார் என்று பூரண நம்பிக்கை வைத்தல்,  (4) கிருஷ்ணரை தனது பாதுகாவலராக ஏற்றல்,  (5) ஆத்மாவை அர்ப்பணம் செய்தல்,  (6) எப்போதும் தன்னை மிகத் தாழ்வாக வைத்து பணிவுடன் நடந்து கொள்ளுதல். (ஹரி-பக்தி-விலாஸம்  (11.676)) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண   கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,   ராம ராம, ஹரே ஹரே 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண🙏 🍁🍁🍁🍁🍁🍁🍁 மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 Telegram 🍁🍁🍁🍁🍁 ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்...

கிருஷ்ண தரிசனம்

  கிருஷ்ண தரிசனம் ******* கிருஷ்ணரின் அழகான உருவத்தால் ஒருவன் கவரப்பட வேண்டும். அவர் எல்லாரையும் கவரக்கூடியவர் என்பதால், அவருக்கு கிருஷ்ணர் என்று பெயர். கிருஷ்ணருடைய அழகான, வலிமை நிறைந்த, சக்தி வாய்ந்த தரிசனத்தால் கவரப்படுபவன் மிகவும் அதிர்ஷ்டசாலி. பல்வேறு விதமான ஆன்மீகவாதிகள் இருக்கின்றனர்—அவர்களில் சிலர் அருவ பிரம்மனின் தரிசனத்தில் பற்றுக் கொண்டவர்கள், வேறு சிலர் பரமாத்மாவினால் கவரப்படுகின்றனர்; ஆனால், பரம புருஷ பகவானின் உருவத்தினால் கவரப்படுபவர்கள், அதிலும் சிறப்பாக, பரம புருஷ பகவான் கிருஷ்ணரிடம் கவரப்படுபவர்கள், ஆன்மீகவாதிகளில் மிகமிகப் பக்குவமானவர்கள்.  (ஶ்ரீல பிரபுபாதர் / பொருளுரை/ பகவத் கீதை உண்மையுருவில் / அத்தியாயம் பதினெட்டு / பதம் 66) ஹரே கிருஷ்ண🙏 🍁🍁🍁🍁🍁🍁🍁 மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 Telegram 🍁🍁🍁🍁🍁 ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇 https://t.me/suddhabhaktitamil ஆன்மீக கதைகளை படிக்க 👇 https://t.me/ud...

பகவத்கீதைதயை ஏதோ ஒரு கட்டுக்கதையாகப் பாவித்து அதைத் திரித்துக் கூறுவது இன்றைய புலவர்களுக்கும், அரதியல்வாதிகளுக்கும் ஒரு நாகரீகமாகிவிட்டது.

  பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணர் நேரடியாகத் தோன்றி, மனித சமூகத்தின் நன்மைக்காக அவரது உபதேசங்களை விட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவரை ஒரு சாதாரண மனிதனென்று நினைக்கும் மூடர்களும், அயோக்கியர்களும், தங்களது புலன் திருப்திக்காக பகவத்கீதையின் உபதேசங்களைத் திரித்துக் கூறுகின்றனர். பகவத்கீதைதயை ஏதோ ஒரு கட்டுக்கதையாகப் பாவித்து அதைத் திரித்துக் கூறுவது இன்றைய புலவர்களுக்கும், அரதியல்வாதிகளுக்கும் ஒரு  நாகரீக மாகிவிட்டது இத்தகைய தப்பான கருத்துரைக்களால், தங்களுடைய வாழ்வை மட் டுமல்லாமல், பிறருடைய வாழ்வையும் இவர்கள் நாசமாக்கிவிடுகின்றனர். ஆனால் கிருஷ்ணர் உண்மையானவர் அல்ல, குருட்சேத்திர யுத்தமும் உண்மையல்ல மற்றும் பகவத்கீதையிலுள்ள விஷயங்களும் உண்மையல்ல என்ற இந்த எதிர் வாதத்தை கிருஷ்ணபக்தி இயக்கம் எதிர்த்து வருகிறது. விஷயம என்னவாக இருப்பினும், வாழ்வில் வெற்றிபெற விரும்புபவர், பகவத்கீதை உண்மையுருவில் என்ற நூலைப் படிப்பதால் அதை அடைய முடியும். குறிப்பாக ஸ்ரீ சைதன்ய மகாபிரபு பகவத்கீதையின் உபதேசங்களை வலியுறுத்தியுள்ளார்; யாரே தேக, தாரே கஹ, ‘கிருஷ்ண’ -உபதேச. வாழ்வில் மிகவுயர்ந்த...

அக்ஷௌணி என்றால் என்ன?

  ஓர் அக்ஷௌணி என்பது, 21,870 தேர் மற்றும் யானைகளையும், 109,350 காலாப்படை வீரர்களையும், மற்றும் 65,610 குதிரைகளையும் கொண்டதொரு படையின் அணிவகுப்பைக் குறிக்கிறது. இதைப்பற்றிய சரியான விவரம் மகாபாரதத்தில், ஆதி பர்வத்தின் இரண்டாம் அத்தியாயத்தில் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது: ஏகோ ரதோ கஜஸ் சைக: நரா: பஞ்ச பதாதய: த்ரயஸ் ச துரகாஸ் தஜ்-ஜ்ஞை: பத்திர் இதி அபிதீயதே பத்திம் து த்ரிகுணாம் ஏதாம் விது: ஸேணாமுகம் புதா: த்ரீணி ஸேனாமுகானி ஏகோ குல்ம இதி அதிதீயதே த்ரயோ குல்மா கணோ நாம வாஹினீ து கணாஸ் த்ரய: ஸ்ருதாஸ் திஸ்ரஸ் து வாஹின்ய: பருத்னேதி விசக்ஷணை: சமூஸ் து ப்ருதனாஸ் திஸ்ரஸ் சம்வஸ் திஸ்ரஸ் து அனீகினீ அனீகினீம் தச-குணாம் ஆஹுர் அக்ஷௌஹிணீம் புதா: அக்ஷௌஹிண்யஸ் து ஸங்க்யாதா ரதானாம் த்விஜ-ஸத்தமா: ஸங்க்யா-கணித-தத்வக்ஞை: ஸஹஸ்ராணி ஏக-விம்சதி சதானி உபரி சாஷ்டௌ ச பூயஸ் ததா ச ஸப்ததி: கஜானாம் து பரீமாணம் தாவத் ஏவாத்ர நிர்திசேத் ஞேயம் சத-ஸஹஸ்ரம் து ஸஹஸ்ராணி ததா நவ நராணாம் அதி பஞ்சாசச் சதானி த்ரீணி சானுகா: பஞ்ச-ஷஷ்டி-ஸஹஸ்ராணி ததாஸ்வானாம் ச தானி ச தசோத்தராணி ஷட் சாஹுர் யதாவத் அபிஸங்க்யயா ஏதாம் அக்ஷௌஹிணீம் ப்ராஹ...