அஹம் ச காயம்ஸ் தத் - வித்வான் ஸ்த்ரீபி : பரிவ்ருதோ கத : ஞாத்வா விஸ்வ - ஸ்ருஜஸ் தன் மே ஹேலனம் சேபுர் ஓஜஸா யாஹி த்வம் சூத்ரதாம் ஆக நஷ்ட - ஸ்ரீ : க்ருத - ஹேலன : மொழிபெயர்ப்பு நாரதமுனிவர் தொடர்ந்து கூறினார் : அவ்விழாவிற்கு அழைக்கப்பட்டதால் நானும் அதில் கலந்து கொண்டேன் . நான் பெண்களால் சூழப்பட்டபடி தேவர்களின் பெருமைகளை வாத்தியத்துடன் பாட ஆரம்பித்தேன் . இதனால் பிரபஞ்ச விவகாரங்களின் பொறுப்பாளிகளான பிரஜபாதிகள் ( சக்தி வாய்ந்த தேவர்கள் ), “ நீ இக்குற்றத்தைப் புரிந்ததனால் , அழகை இழந்து உடனே ஒரு சூத்திரனாக ஆகக் கடவாய் ” என்ற சொற்களால் என்னைச் சபித்தனர் . பொருளுரை ஒருவன் பரமபுருஷரின் மகிமைகளையும் , அவரது புனித நாமத்தையும் பாட வேண்டும் ( ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ :) என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன . அதாவது , ஒருவன் பகவான் விஷ்ணுவைப் பற்றியும் , அவரது மகிமைகளைப் பற்றியும் பாட வேண்டும் , தேவர்களின் மகிமைகளை அல்ல . துரதிர்ஷ்டவசமாக சில முட்டாள்கள் தேவர்களின் பெயர்களைத் தொகுத்து கீர்த்தனமாகப் பாடும் முறையைக் கண்டு ...