Skip to main content

Posts

நமது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால், பொய் அகங்காரம் பிறக்கிறது.

  தொடக்கத்தில் , பரிசுத்த உணர்வு நிலை அல்லது கிருஷ்ணர் பற்றிய தூய உணர்வு எனும் நிலையிலிருந்து முதல் மாசு தோன்றியது . இது    பொய் அகங்காரம்    அல்லது உடலைத் தானாக எண்ணிக்கொள்ளுதல் ஆகிய   தவறு என்று அழைக்கப்படும் . உயிரினம் கிருஷ்ணர் பற்றிய உணர்வின் இயல்பான நிலையில் உள்ளது . ஆனால் உயிர்களுக்கு அளவோடு கூடிய சுதந்திரமும் உள்ளது . இது தான் கிருஷ்ண உணர்வினை மறக்கச் செய்கிறது . அதாவது உண்மையில் , தூய கிருஷ்ணர் பற்றிய உணர்வு இருக்கிறது ; ஆனால் அளவோடு கூடிய சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் , கிருஷ்ணரை மறக்கும் வாய்ப்பும் உள்ளது . இது உண்மையான வாழ்வில் காட்டப்படுகிறது ; கிருஷ்ணர் பற்றிய உணர்வில் உள்ள சிலர் திடீரென்று மாறுவது போன்ற நிகழ்ச்சிகள் நிறையவே உள்ளன . அதனால் , ஆன்மீக உணர்தலுக்கான வழி கூர்மையான முனையினை உடைய கக்தி போன்றது என்று உபநிஷத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது . இந்தச் சான்று மிகச் சரியானது . ஒருவர் தன் கன்னங்களைக் கூர்மையான கத்தி கொண்டு மிகவும் நன்றாக மழிக்கிறார் . ஆனா...
 

ஸ்ரீ கிருஷ்ணர்

 

ஜடவுலக்கத்திற்கும் ஆன்மீக உலகத்திற்கும் என்ன வித்தியாசம் ?

 

வர்ணாசிரம அமைப்பின் நோக்கம்

 

வர்ணாசிரம அமைப்பின் நோக்கம்

 

வேத சடங்குகளை விட ஹரி நாம சங்கீர்த்தனம் முக்கியமானது.

  பகவானின் புனித நாமத்தை ஜபிப்பதாலேயே மிகவுயர்ந்த வெற்றியைச் சுலபமாக ஒருவனால் அடைந்துவிட முடியும் என்பதால், பல வேதக் கிரியைகள் இருப்பதும் அவற்றால் மக்கள் கவரப்படுவதும் ஏன் என்று ஒருவர் கேட்கக்கூடும்.  பகவத்கீதை (15.15) பின்வருமாறு கூறுகிறது, வேதைஸ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை அணுகுவதே வேதக் கல்வியின் உண்மையான நோக்கமாகும். துரதிர்ஷ்டவசமாக, வேத யக்ஞங்களின் பகட்டில் மதிமயங்கியுள்ள அறிவிலிகள், ஆடம்பரமாக யாகங்கள் செய்யப்படுவதைக் காண விரும்புகின்றனர். வேத மந்திரங்கள் ஓதப்படுவதையும், இத்தகைய சடங்குகளுக்கு ஏராளமான பொருள் செலவிடப்படுவதையும் இவர்கள் விரும்புகின்றனர். சில சமயங்களில் இத்தகைய புத்தியற்ற மனிதர்களை திருப்திப்படுத்துவதற்காக நாம் வேதக் கிரியைகளை அணுஷ்டிக்க வேண்டியுள்ளது. பிருந்தாவனத்தில், பெரிய கிருஷ்ண பலராமர் ஆலயம் ஒன்றை சமீபகாலத்தில் நாம் நிறுவினோம். அப்பொழுது உள்ளூர் பிராமணர்களால் நடத்தப்பட்ட வேதக் கிரியைகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டது. ஏனெனில் பிருந்தாவன வாசிகள், குறிப்பாக ஸ்மார்த்த - பிராமணர்கள் ஐரோப்பியர்களையும், அமெரிக...