புத்தி என்பது, விஷயங்களை அதன் முறையான கண்ணோட்டத்தில் ஆராய்ந்து அறியும் சக்தியைக் குறிக்கும். ஞானம் (அறிவு) என்பது, ஜடம் என்றால் என்ன, ஆன்மா என்றால் என்ன, என்பதைப் புரிந்துகொள்வதைக் குறிக்கும். பல்கலைக்கழகத்தில் பெறப்படும் சாதாரண அறிவு, ஜடத்துடன் மட்டுமே தொடர்புடையதாக உள்ளது. அதனால் அஃது இங்கே ஞானமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஞானம் என்றால் ஜடத்திற்கும் ஆன்மாவிற்கும் உள்ள வேறுபாட்டை அறிவதாகும். நவீனக் கல்வி முறையில் ஆத்மாவைப் பற்றிய அறிவுஇல்லை, ஜடப் பொருள்களிலும் உடல் தேவைகளிலும் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். எனவே பல்கலைக்கழகத்தின் அறிவு முழுமையானது அல்ல. அஸம்மோஹ, ஐயம் மற்றும் மயக்கத்திலிருந்து விடுதலை, ஒருவன் சந்தேகங்களைத் தாண்டி திவ்யமான தத்துவத்தைப் புரிந்துகொள்ளும் போது இந்நிலை அடையப்படுகின்றது. மெதுவாக, ஆனால் நிச்சயமாக அவன் மயக்கத்திலிருந்து விடுபடுகிறான். எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. அனைத்தையும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். பகவத் கீதை உண்மையுருவில்10.4-5 / பொருளுரை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிரு...