அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் மொழிபெயர்ப்பு மற்றும் பொருளுரையிலிருந்து எடுக்கப்பட்டது. 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 சுமார் ஐந்நூறுவருடங்களுக்கு முன்பு பிரதாபருத்ரர் என்னும் மன்னர் ஒரிசா மாகாணத்தை ஆண்டு வந்தார். அவர் பரம புருஷ பகவானான ஸ்ரீ கிருஷ்ணரின் சிறந்த பக்தர். ஜகந்நாத பூரியிலுள்ள ஸ்ரீ ஜகந்நாதரை அவர் வழிபட்டு வந்தார். பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பூரியிலே வசிப்பதைக் கேள்விப்பட்டு. அவரை தரிசிப்பதற்கு ஆவல் கொண்டார். ஆனால் கிருஷ்ணருக்கான தூய பக்தித் தொண்டை பிரச்சாரம் செய்வதற்காகத் துறவறம்மேற்கொண்டிருந்த ஸ்ரீசைதன்ய மஹாபிரபு. சந்நியாச வாழ்விற்கான அனைத்து விதிமுறைகளையும் தீவிரமாகப் பின்பற்றியதால், பெளதிக விஷயங்களில் ஈடுபட்டுள்ள மன்னர் பிரதாபருத்ரரைப் போன்றவர்களைச் சந்திப்பதை அவர் விரும்பவில்லை. பகவான் சைதன்யர் பண்டிதரான சர்வபௌம் பட்டாசாரியரின் இல்லத்தில் தங்கியிருப்பதை அறிந்த ம...