Skip to main content

Posts

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுள் யார் சிறந்தவர் ?

  முன்பொரு சமயம் , சரஸ்வதி நதிக்கரையில் அநேக ரிஷிகள் சேர்ந்து ஒரு ஸ்ரயாகம் செய்தார்கள் . அப்பொழுது பிரம்மா , விஷ்ணு , சிவன் ஆகிய மும்மூர்த்திகளுள் யார் சிறந்தவர் என்ற விவாதம் எழுந்தது . இவ்விஷயத்தை அறிந்து வருவதற்காக அவர்கள் பிருகு முனிவரை அனுப்பி வைத்தனர் . பொறுமை என்பது உயர்வைக் குறிக்கும் நிச்சயமான ஓர் அறிகுறி என்பதால் , அதைக் கொண்டே மும்மூர்த்திகளையும் சோதிப்பதென அவர் முடிவு செய்தார் . முதலில் அவர் தம் தந்தையான பிரம்மதேவரின் சபைக்குச் சென்று அவரை வணங்காமலிருந்தார் . இதனால் பிரம்மா அதிக கோபமடைந்தார் . ஆனால் பிருகு தன் புத்திரன் என்பதால் தன் கோபத்தை அவர் தனித்துக் கொண்டார் . அடுத்து பிருகு , தன் தமையனான சிவபெருமானிடம் சென்றார் . அவரும் தம் தம்பியை தழுவிக் கொள்ள அவரது ஆசனத்திலிருந்து எழுந்தார் . ஆனால் நீ ஆசாரத்திலிருந்து நழுவியவன் என்று கூறி , அவரது ஆலிங்கனத்தை பிருகு ஏற்க மறுத்துவிட்டார் . இதனால் கோபங்கொண்ட சிவன் தன் கணவரைத் தடுத்து அவரை சமாதானப்படுத்தினாள் . பிறகு பிருகுமுனி பகவான் நாராயணரை ...

பகவான் அனைவருடைய இதயத்திலும் சாட்சியாக அமர்ந்திருக்கிறார்

  பகவான் அனைவருடைய இதயத்திலும் சாட்சியாக அமர்ந்திருக்கிறார் என்பதை பகவத்கீதை உறுதி செய்கிறது . இதனால் அவரே உத்தரவிடும் பரம வழிகாட்டியாவார் . செயலின் பலன்களை அனுபவிப்பவர் வழிகாட்டியல்ல . ஏனெனில் பகவானின் உத்தரவு இல்லாமல் ஒருவரும் அனுபவிக்க முடியாது . உதாரணமாக , குடிப் பழக்கத்திற்கு அடிமையானவன் , தடை விதிக்கப்பட்ட ஒரிடத்தில் குடிப்பதற்கு . நிர்வாகியிடம் மனு செய்கிறான் , நிர்வாகியும் அவனுடைய நிலையை கருத்திற்கொண்டு , ஒரு குறிப்பிட்ட அளவு மதுவை மட்டுமே அருந்த வேண்டும் என்ற விதியுடன் அவனை அனுமதிக்கிறார் . அதைப் போலவே , ஜட உலகம் முழுவதும் குடிப்பழக்கமுள்ளவர்களால் நிரப்ப்பட்டுள்ளது . அதாவது ஒவ்வொரு ஜீவராசிக்கும் அவனுடைய மனதில் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது . தங்களுடைய ஆசைகள் நிறைவேற வேண்டுமென்று ஒவ்வொருவரும் தீவிர விருப்பம் கொண்டுள்ளனர் . தந்தை மகனிடம் அன்பு கொண்டிருப்பதைப் போல் , சர்வல்லமை பொருந்திய பகவான் , ஜீவராசிகளிடம் உள்ள அன்பினால் அவர்களின் குழந்தைத்தனமான திருப்திக்காக அவர்களுடைய ஆசைகளை கொண்டுள்ள ஜீவரா...