Skip to main content

Posts

வஸுதேவ-ஸத்வம்

  மனம் சத்வ குணத்துக்குச் சொந்தமானதாக இருப்பதால் அது தேவமயம், அல்லது தெய்வீகமானது என்றழைக்கப்படுகிறது. தான் பகவானின் நித்தியத் தொண்டன் எனும் திடமான நம்பிக்கையில் ஒருவன் நிலை பெற்றிருக்கும் பொழுது பரிபூரண மனத்தூய்மை சாத்தியமாகிறது. எனவே சாதாரண நற்குணத்தைப் பெற்றிருப்பதும் பௌதிகமானதே ஆகும். பௌதிக நற்குணம் என்ற இந்நிலையைக் கடந்து, தூய நற்குணம் அல்லது வஸுதேக-ஸத்வம் என்ற நிலையை ஒருவன் அடைய வேண்டும். பகவானின் இராஜ்யத்திற்குள் நுழைவதற்கு இந்த வஸுதேவ-ஸத்வம் உதவுகிறது. ஶ்ரீமத் பாகவதம்  2.2.30 / பொருளுரை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண🙏 🍁🍁🍁🍁🍁🍁🍁 மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். சுத்த   பக்தி   வாட்ஸப்   க்ரூப்   சுத்த   பக்தி   டெலிகிராம்   க்ரூப்   உத்வேக   கதைகள் டெலிகிராம் க்ரூப்   https://www.suddhabhaktitamil.com

தூய அன்பு

 

பகவானின் விஷேச பாசம்

 

எளிதாகவும், விரைவாகவும், கிருஷ்ணரின் இராஜ்யத்திற்குத் திரும்பிச் செல்லும் வழி

 

பகவான் ஏன் ஒரு மனிதனைப் போல் பிறவி எடுப்பவராக காணப்பட்டுகிறார்

  பகவான் ஏன் ஒரு பௌதிக உருவினால் மூடப்பட்டவராக , அல்லது ஒரு மனிதனைப் போல் பிறவி எடுப்பவராக காணப்பட்டுகிறார் என்பதற்கு , அக்ரூரர் இங்கு இரு காரணங்களைக் குறிப்பிடுகிறார் . முதல் காரணம் , பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தம் லீலைகளை நிகழ்த்தும்பொழுது , அவரிடம் அன்புபூண்ட பக்தர்கள் அவரைத் தங்களது அன்புக் குழந்தையாகவோ அல்லது நண்பராகவோ அல்லது காதலராகவோ அல்லது வேறுமாதிரியாவோ நினைக்கின்றனர் . இந்த அன்புப் பரிமாற்றத்தின் பரவசத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை அவர்கள் கடவுளாக நினைப்பதில்லை . உதாரணமாக , கிருஷ்ணரிடமுள்ள அசாதாரணமான அன்பின் காரணத்தால் வனத்தில் அவருக்குத் தீங்கு ஏற்பட்டு விடும் என்று தாய் யாசோதை கவலைப்படுகிறாள் . அவள் இவ்வாறு உணர வேண்டுமென்பது பகவானின் விருப்பமாகும் . இது இங்கு நிகாம : எனும் சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளது . பகவான் பௌதிகமானவராக காணப்படக் கூடும் என்பதற்கான இரண்டாவது காரணம் , அவி வேக : எனும் சொல்லால் சுட்டிக் காட்டப்படுகிறது : அறியாமையின் காரணத்தால் , பரமபுருஷரின் நிலையை ஒருவன் தவறாக புரிந்து கொள் ளக்கூடும் . ப...

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், அர்ஜுனனும் துவாரகையைச் சேர்ந்த ஒரு பிராமணரின் இறந்த புத்திரிகளை மீட்டிய லீலை

  ஒருசமையம் துவாரகையில் ஒரு பிராமணரின் மனைவிக்குக் குழந்தை பிறந்து உடனே இறந்துவிட்டது . பிராமணரும் உயிரற்ற தன் மகனை மன்னர் மகாசேனரின் சபைக்கு எடுத்துச் சென்று , அரசரைப் பின்வருமாறு திட்டினார் . பீராமணர்களைப் பகைப்பவனும் , வஞ்சகனுமான இவன் தன் கடமைகளை சரியாக நிறைவேற்றத் தவறியதால் தான் என் மகன் இறந்து போனான் . அந்த பிராமணரின் இந்த துர்பாக்கியமான நிலை தொடர்ந்து கொண்டே இருந்தது . பிராமணர் ஒவ்வொரு முறையும் தன் இறந்த குழந்தையை அரச சபைக்குக் கொண்டு வந்து போட்டு முன்போலவே அரசரைத் திட்டினார் . அம்மாதிரியே அவரது ஒன்பதாவது குழந்தையும் இறந்து போய் , அவரது புலம்பலைக் கேட்க நேர்ந்த அர்ஜுனன் பிராமணரே இனி உண்டாகும் உமது குழந்தையை நான் காப்பாற்றுவேன் . இதை நான் செய்யத் தவறினால் , அக்கினிப் பிரவேசம் செய்து அதனால் என் பாவத்தைப் போக்கிக் கொள்வேன் என்று கூறினார் . சில காலத்திற்க்குப் பிறகு அந்த பிராமணரின் மனைவி பத்தாவது குழந்தையை ஈன்றெடுக்கும் தறுவாயிலிருந்தாள் . அதைக் கேள்விப்பட்ட அர்ஜுனன் , பிரசவ அறைக்குச் சென...