உயிர்வாழிகள் எவ்வாறு ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலிற்கு மாற்றமடைகின்றனர் என்பதைப் பற்றி அறிந்துகொள்வதில் இந்தப் மிகவும் முக்கியமானதாகும். இரண்டாம் அத்தியாயத்தில், ஆடையை ஒருவன் மாற்றிக் கொள்வதுபோல, உயிர்வாழி ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலிற்கு மாற்றமடைகின்றான் என்று விளக்கப்பட்டது. ஜட வாழ்வின் மீதான அவனது பற்றுதலே இந்த உடை மாற்றத்திற்கு காரணம். இந்த பொய்யான தோற்றத்தினால் அவன் கவரப்பட்டுள்ள வரை, ஓர் உடலி லிருந்து மற்றொரு உடலிற்கு மாறுவதை அவன் தொடரத்தான் வேண்டும். ஜட இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான அவனது விருப்பத் தினால் அவன் இத்தகு விரும்பத்தகாத சூழ்நிலைகளில் வைக்கப்படு கின்றான் . பௌதிக ஆசைகளின் காரணத்தினால், ஆத்மா சில சமயம் தேவனாக, சில சமயம் மனிதனாக, சில சமயம் மிருகமாக, சில சமயம் பறவையாக, சில சமயம் புழுவாக, சில சமயம் நீர்வாழியாக, சில சமயம் புனிதமான மனிதனாக, சில சமயம் பூச்சியாகவும் பிறக்கின்றான். இது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இவ்வெல்லா நிலைகளிலும் உயிர்வாழி தன்னையே தனது சூழ்நிலைகளின் தலைவனாக எண்ணிக் கொள்கின்றான், இருப்பினும் அவன் ஜட இயற்கையின் ஆதிக்கத்திற்குக் கீழ்ப்பட்ட...