ய : ஷா ஸ்த்ர – விதி ம் உத்ஸ்ருஜ்ய வர்ததே காம – காரத : ந ஸ ஸித் தி ம் அவாப்னோதி ந ஸுக ம் ந பராம் க திம் சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து தனது மனம்போன போக்கில் செயல்படுபவன் , பக்குவத்தையோ சுகத்தையோ பரம இலக்கையோ அடைவதில்லை . பொருளுரை : முன்பே விவரிக்கப்பட்டபடி , சாஸ்திரங்களின் விதிகள் மனித சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் நிலைகளுக்கும் கொடுக்கப் பட்டுள்ளன . ஒவ்வொருவரும் இந்த சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டு மென்று எதிர்பார்க்கப்படுகின்றனர் . இவற்றைப் பின்பற்றாமல் தனது மனம்போன போக்கில் காமம் , கோபம் , மற்றும் பேராசையின்படி ஒருவன் செயல்பட்டால் , அவன் தனது வாழ்வில் என்றுமே பக்குவமடைய முடியாது . வேறு விதமாகக் கூறினால் , ஒரு மனிதன் இவ்வெல்லா விஷயங்களையும் கொள்கையளவில் அறிந்தவனாக இருந்தாலும் , தனது சொந்த வாழ்வில் இவற்றை ஈடுபடுத்தாத வரை அவன் மனித இனத்தின் கடைநிலையைச் சேர்ந்தவனாகவே அறியப்படுகின்றான் . மனித வாழ்வில் உள்ள உயிர்வாழி , வாழ்வை உன்னத தளத்திற்கு உயர்த்துவதற்காகக் கொடுக்கப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்ற...