Skip to main content

Posts

நாரத முனிவரின் அடிச்சுவடுகளை பின்பற்றி ஹரி நாம சங்கீர்த்தனம்

  ஸ்வர - ப்ரஹ்மணி நிர்பாத - ஹ்ரிஷீகேச - பதாம்புஜே அகண்டம் சித்தம் ஆவேஸ்ய லோகான் அனுசரன் முனி: மொழிபெயர்ப்பு இசையின் ஏழு சப்த ஸ்வரங்களான ஸ,ரி,க,ம,ப,த,நி என்பவை இசைக் கருவிகளில் உபயோகிக்கப்படுகின்றன. ஆனால் சாம வேதத்திலிருந்து தான் முதன்முதலாக அவை வந்தன. மாமுனிவரான நாரதர் பரமபுருஷரின் லீலைகளை விவரித்து சப்தங்களை எழுப்புகிறார். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே / ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்பது போன்ற திவ்யமான ஓசைகளின் மூலமாக, அவர் தமது மனதை பகவானின் தாமரைப் பாதங்களில் பதியச் செய்கிறார். இவ்விதமாக அவர் புலன்களின் நாயகரான ரிஷிகேசரை நேருக்கு நேராக தரிசிக்கிறார். ஹர்யஸ்வர்களைக் கடைத்தேற்றிய பிறகு, நாரத முனிவர், பகவானின் தாமரைப் பாதங்களில் எப்பொழுதும் மனதைப் பதித்தவராய், எல்லாக் கிரக அமைப்புக்களிலும் தொடர்ந்து சஞ்சரிக்கலானார். பொருளுரை மாமுனிவரான நாரதரின் மகிமை இங்கு விவரிக்கப்படுகிறது. அவர் பகவானின் லீலைகளைப் பற்றி எப்பொழுதும் பாடியபடி, இழிவடைந்த ஆத்மாக்களை மீட்டு பரமபுருஷரிடம் கொண்டு சேர்க்கிறார். இது தொடர்பாக, ஸ்ரீல பக்தி விநோத தாகுரர் பின்வருமாறு பாடியுள்ள...

அங்கீகரிக்கப்பட்ட குரு சீட பரம்பரை மூலம் வரும் நான்கு சம்பிரதாயங்களின் முக்கியத்துவம்

  பாகவத தர்மம், மிகவும் இரகசியமான சமயக் கோட்பாடாகும் (ஸர்வ - குஹ்யதமம், குஹ்யாத், குஹ்யதரம்) என்று பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகிறார், “நீ எனக்குப் பிரிய நண்பன் என்பதால், மிகவும் இரகசியமான சமயத்தை உனக்கு நான் விளக்கிக் கொண்டிருக்கிறேன்.” ஸர்வ - தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ: மற்றெல்லாக் கடமைகளையும் விட்டுவிட்டு என்னிடம் சரணடைவாயாக.” இக்கோட்பாட்டைப் புரிந்து கொள்வது மிகவும் அரிது என்றால், இதனால் என்ன பயன்? என்று ஒருவர் கேட்கக் கூடும். இதற்கு யமராஜன் பின்வருமாறு பதிலளித்தார். பிரம்ம தேவர், சிவ பெருமான், நான்கு குமாரர்கள் முதலானவர்களின் பரம்பரா முறையைப் பின்பற்றுபவனால் இந்த சமயக் கோட்பாட்டைப் புரிந்துகொள்ள முடியும். நான்கு சீடப் பரம்பரைகள் உள்ளன: ஒன்று பிரம்ம தேவரிலிருந்து வருகிறது, இரண்டாவது சிவபெருமானிலிருந்து வருகிறது, மூன்றாவது லக்ஷ்மி தேவியிலிருந்து வருகிறது, நான்காவது குமாரர்களிடமிருந்து வருகிறது. பிரம்ம தேவரிலிருந்து வரும் சீடப்பரம்பரை பிரம்ம - சம்பிரதாயம் என்றும், சிவ பெருமானிலிருந்து வருவது ருத்ர - சம்பிரதாய...

நேர்மையான செயல் எப்போதும் பக்திக்கு சாதகமானதாகும்

  பணத்தைத் திரட்டுவதன் மூலமாக , ஜட உலகில் ஒருவன் திமிர் பிடித்தவனாகாமல் , தனது வாழ்க்கைத் தேவையை சுலபமாகவும் , நேர்வையுடனும் சம்பாதிக்க வேண்டும் . பொய் புரட்டுகளின் மூலமாய் சமுதாயத்தில் ஒரு பெரிய மனிதனாவதை விட , நேர்மையான வாழ்க்கைத் தேவைக்காக ஒரு கூலியாக இருப்பது சிறந்தது . நேர்மையான உழைப்பால் உலகிலேயே மிகப் பெரிய செல்வந்தனாக ஆவதில் குற்றமில்லை . ஆனால் செல்வம் திரட்டுவதற்காக , வாழ்க்கைக்குரிய நேர்மையான வழியை ஒருவன்தியாகம் செய்து விடக் கூடாது . இத்தகைய முயற்சி பக்தித் தொண்டிற்கு தீங்கிழைப்பதாகும் . 

எவ்வாறு துன்பக் கடலை கடப்பது

  பந்தப்பட்ட வாழ்வில் இருப்பதென்பது கடல் நடுவே ஒரு படகை ஓட்டுவதற்கு ஒப்பாகும் . சூழ்நிலை நன்றாக இருந்தால் , படகு மிகச் சுலபமாக ஓடும் . ஆனால் அங்கு புயல் காற்றோ , மூடுபனியோ , வீசும் காற்றோ அல்லது மேகமோ இருக்கு மானால் , கடலில் மூழ்கிவிடுவதற்கும் வாய்ப்புண்டு . எவ்வளவு நன்றாக ஆயத்தபபடுத்தப்பட்டு இருந்தாலும் , கடலில் திடீர் மாற்றத்தை ஒருவராலும் கட்டுப்படுத்த முடியாது . கப்பலால் கடல்களைக் கடந்துள்ளவனுக்கு , கடலின் தயவை எதிர்பார்த்திருக்க வேண்டி உள்ளது . ஆனால் பகவானின் கருணையால் ஜட வாழ்வெனும் கடலை ஒருவனால் மிகவும் சுலபமாகச் கடந்து விட முடியும் . புயல் காற்றுக்கோ அல்லது மூடுபனிக்கோ அவன் அஞ்ச வேண்டியதில்லை . இதல்லாம் பகவானின் விருப்பத்தைப் பொறுத்ததாகும் ; பந்தப்பட்ட வாழ்வில் சில துரதிர்ஷடமான ஆபத்து விளையுமானால் ஒருவராலும் உதவி செய்ய முடியாது . ஆனால் பகவத் பக்தர்கள் , கவலைப்படாமல் ஜட இருப்பெனும் கடலைக் கடந்து விடுகின்றனர் , ஏனெனில் தூய பக்தரொருவர் எப்பொழுதுமே பகவானால் பாதுகாக்கப்படுகிறார் ( பகவத் கீதை 9.13). பௌ...