Skip to main content

Posts

பகவான் ஶ்ரீ ராமரின் அவதாரம்

  முழுமுதற் கடவுளாகிய ஸ்ரீ ராமர் ஒரு மானிட ரூபத்தை ஏற்று பூமியில் அவதரித்தார் . பிரபஞ்ச ஒழுசைகக் காப்பாற்றி , அதன் மூலமாக பிரபஞ்ச ஆட்சிப் பொறுப்பில் உள்ள தேவர்களை மகிழ்விப்பதற்காகவே சில அமானுஷ்யமான செயல்களை அவர் புரிந்தார் . சில சமயங்களில் இராவணனையும் , ஹிரண்யகசிபுவையும் போன்ற பெரும் அசுரர்களும் , நாஸ்திகர்களும் மிகவும் பிரபலமடைகின்றனர் . பகவானால் ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்குமுறையை எதிர்க்கும் மனோநிலையுடன் , பௌதிக விஞ்ஞானத்தின் உதவியால் அவர்கள் பெறும் பௌதிக முன்னேற்றமே இதற்குக் காரணமாகும் . உதாரணமாக , பௌதிகமான வழிகளின் மூலமாக மற்ற கிரகங்களுக்குச் செல்லும் முயற்சியானது , ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்கு முறைக்கு எதிரான ஒரு செயலாகும் . ஒவ்வொரு கிரகத்தின் சூழ்நிலையும் வேறுபட்டதாக உள்ளது . பகவானின் திட்டப்படி வேறுபட்ட பிரிவுகளைச் சேர்ந்த மனிதர்களுக்கு அக்கிரகங்களில் இடமளிக்கப்பட்டுள்ளது . ஆனால் , பௌதிக முன்னேற்றத்தின் சிறு வெற்றியால் திமிர் பிடித்தவர்களாக மாறிவிட்ட இறை உணர்வற்ற பௌதிகவாதிகள் சில சமயங்களில் இறைவனே இல்லை என்க...

நாரத முனிவரின் அடிச்சுவடுகளை பின்பற்றி ஹரி நாம சங்கீர்த்தனம்

  ஸ்வர - ப்ரஹ்மணி நிர்பாத - ஹ்ரிஷீகேச - பதாம்புஜே அகண்டம் சித்தம் ஆவேஸ்ய லோகான் அனுசரன் முனி: மொழிபெயர்ப்பு இசையின் ஏழு சப்த ஸ்வரங்களான ஸ,ரி,க,ம,ப,த,நி என்பவை இசைக் கருவிகளில் உபயோகிக்கப்படுகின்றன. ஆனால் சாம வேதத்திலிருந்து தான் முதன்முதலாக அவை வந்தன. மாமுனிவரான நாரதர் பரமபுருஷரின் லீலைகளை விவரித்து சப்தங்களை எழுப்புகிறார். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே / ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்பது போன்ற திவ்யமான ஓசைகளின் மூலமாக, அவர் தமது மனதை பகவானின் தாமரைப் பாதங்களில் பதியச் செய்கிறார். இவ்விதமாக அவர் புலன்களின் நாயகரான ரிஷிகேசரை நேருக்கு நேராக தரிசிக்கிறார். ஹர்யஸ்வர்களைக் கடைத்தேற்றிய பிறகு, நாரத முனிவர், பகவானின் தாமரைப் பாதங்களில் எப்பொழுதும் மனதைப் பதித்தவராய், எல்லாக் கிரக அமைப்புக்களிலும் தொடர்ந்து சஞ்சரிக்கலானார். பொருளுரை மாமுனிவரான நாரதரின் மகிமை இங்கு விவரிக்கப்படுகிறது. அவர் பகவானின் லீலைகளைப் பற்றி எப்பொழுதும் பாடியபடி, இழிவடைந்த ஆத்மாக்களை மீட்டு பரமபுருஷரிடம் கொண்டு சேர்க்கிறார். இது தொடர்பாக, ஸ்ரீல பக்தி விநோத தாகுரர் பின்வருமாறு பாடியுள்ள...

அங்கீகரிக்கப்பட்ட குரு சீட பரம்பரை மூலம் வரும் நான்கு சம்பிரதாயங்களின் முக்கியத்துவம்

  பாகவத தர்மம், மிகவும் இரகசியமான சமயக் கோட்பாடாகும் (ஸர்வ - குஹ்யதமம், குஹ்யாத், குஹ்யதரம்) என்று பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகிறார், “நீ எனக்குப் பிரிய நண்பன் என்பதால், மிகவும் இரகசியமான சமயத்தை உனக்கு நான் விளக்கிக் கொண்டிருக்கிறேன்.” ஸர்வ - தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ: மற்றெல்லாக் கடமைகளையும் விட்டுவிட்டு என்னிடம் சரணடைவாயாக.” இக்கோட்பாட்டைப் புரிந்து கொள்வது மிகவும் அரிது என்றால், இதனால் என்ன பயன்? என்று ஒருவர் கேட்கக் கூடும். இதற்கு யமராஜன் பின்வருமாறு பதிலளித்தார். பிரம்ம தேவர், சிவ பெருமான், நான்கு குமாரர்கள் முதலானவர்களின் பரம்பரா முறையைப் பின்பற்றுபவனால் இந்த சமயக் கோட்பாட்டைப் புரிந்துகொள்ள முடியும். நான்கு சீடப் பரம்பரைகள் உள்ளன: ஒன்று பிரம்ம தேவரிலிருந்து வருகிறது, இரண்டாவது சிவபெருமானிலிருந்து வருகிறது, மூன்றாவது லக்ஷ்மி தேவியிலிருந்து வருகிறது, நான்காவது குமாரர்களிடமிருந்து வருகிறது. பிரம்ம தேவரிலிருந்து வரும் சீடப்பரம்பரை பிரம்ம - சம்பிரதாயம் என்றும், சிவ பெருமானிலிருந்து வருவது ருத்ர - சம்பிரதாய...