முழுமுதற் கடவுளாகிய ஸ்ரீ ராமர் ஒரு மானிட ரூபத்தை ஏற்று பூமியில் அவதரித்தார் . பிரபஞ்ச ஒழுசைகக் காப்பாற்றி , அதன் மூலமாக பிரபஞ்ச ஆட்சிப் பொறுப்பில் உள்ள தேவர்களை மகிழ்விப்பதற்காகவே சில அமானுஷ்யமான செயல்களை அவர் புரிந்தார் . சில சமயங்களில் இராவணனையும் , ஹிரண்யகசிபுவையும் போன்ற பெரும் அசுரர்களும் , நாஸ்திகர்களும் மிகவும் பிரபலமடைகின்றனர் . பகவானால் ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்குமுறையை எதிர்க்கும் மனோநிலையுடன் , பௌதிக விஞ்ஞானத்தின் உதவியால் அவர்கள் பெறும் பௌதிக முன்னேற்றமே இதற்குக் காரணமாகும் . உதாரணமாக , பௌதிகமான வழிகளின் மூலமாக மற்ற கிரகங்களுக்குச் செல்லும் முயற்சியானது , ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்கு முறைக்கு எதிரான ஒரு செயலாகும் . ஒவ்வொரு கிரகத்தின் சூழ்நிலையும் வேறுபட்டதாக உள்ளது . பகவானின் திட்டப்படி வேறுபட்ட பிரிவுகளைச் சேர்ந்த மனிதர்களுக்கு அக்கிரகங்களில் இடமளிக்கப்பட்டுள்ளது . ஆனால் , பௌதிக முன்னேற்றத்தின் சிறு வெற்றியால் திமிர் பிடித்தவர்களாக மாறிவிட்ட இறை உணர்வற்ற பௌதிகவாதிகள் சில சமயங்களில் இறைவனே இல்லை என்க...