பகவானைப் பற்றிய உன்னத அறிவை பகவான் தாமாக அறிவிக்கவில்லை என்றால் அதைத் தெரிந்து கொள்ள முடியாது என்பதே இதன் பொருள் . மிகப் பெரிய பௌதிக சிந்தனையாளர்களின் மனக்கற்பனையால் பரமபுருஷரை அறிய முடியாது . அவர்களால் அருவ பிரம்ம உணர்வு வரை செல்லவியலும் . ஆனால் உண்மையில் உன்னதத்தைப் பற்றிய பூரண அறிவு . அருவ பிரம்மத்தின் அறிவிற்கு அப்பாற்பட்டதாகும் . ஆகவே இது பரம இரகசியமான ஞானம் என்றழைக்கப்படுகிறது . முக்தியடைந்த ஆத்மாக்கள் பலரில் , யாதேனும் ஒருவர் முழுமுதற் கடவுளை அறியும் தகுதி பெற்றிருக்கக்கூடும் . பல நூற்றுக்கணக்கான , ஆயிரக்கணக்கான மக்களில் யாரேனும் ஓருவன் மனித வாழ்வின் பூரணத்துவத்தை அடைய முயலக்கூடும் பல முக்தியடைந்த ஆத்மாக்களில் யாதேனும் ஒருவன் மட்டுமே பகவானை உள்ளபடி அறிகிறான் என்று பகவத் கீதையிலும் கூறப்பட்டுள்ளது . எனவே பக்தித் தொண்டால் மட்டுமே பரமபுருஷரைப் பற்றிய அறிவை அடைய முடியும் . ரஹஸ்யம் என்றால் பக்தித் தொண்டு என்பதாகும் . அர்ஜுனன் ஒரு பக்தரும் நண்பருமாக இருந்ததால் அவருக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்...