Skip to main content

Posts

பரம இரகசியமான ஞானம்

பகவானைப் பற்றிய உன்னத அறிவை பகவான் தாமாக அறிவிக்கவில்லை என்றால் அதைத் தெரிந்து கொள்ள முடியாது என்பதே இதன் பொருள் . மிகப் பெரிய பௌதிக சிந்தனையாளர்களின் மனக்கற்பனையால் பரமபுருஷரை அறிய முடியாது . அவர்களால் அருவ பிரம்ம உணர்வு வரை செல்லவியலும் . ஆனால் உண்மையில் உன்னதத்தைப் பற்றிய பூரண அறிவு . அருவ பிரம்மத்தின் அறிவிற்கு அப்பாற்பட்டதாகும் . ஆகவே இது பரம இரகசியமான ஞானம் என்றழைக்கப்படுகிறது . முக்தியடைந்த ஆத்மாக்கள் பலரில் , யாதேனும் ஒருவர் முழுமுதற் கடவுளை அறியும் தகுதி பெற்றிருக்கக்கூடும் . பல நூற்றுக்கணக்கான , ஆயிரக்கணக்கான மக்களில் யாரேனும் ஓருவன் மனித வாழ்வின் பூரணத்துவத்தை அடைய முயலக்கூடும் பல முக்தியடைந்த ஆத்மாக்களில் யாதேனும் ஒருவன் மட்டுமே பகவானை உள்ளபடி அறிகிறான் என்று பகவத் கீதையிலும் கூறப்பட்டுள்ளது . எனவே பக்தித் தொண்டால் மட்டுமே பரமபுருஷரைப் பற்றிய அறிவை அடைய முடியும் . ரஹஸ்யம் என்றால் பக்தித் தொண்டு என்பதாகும் . அர்ஜுனன் ஒரு பக்தரும் நண்பருமாக இருந்ததால் அவருக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்...

பகவான் ஶ்ரீ ராமரின் அவதாரம்

  முழுமுதற் கடவுளாகிய ஸ்ரீ ராமர் ஒரு மானிட ரூபத்தை ஏற்று பூமியில் அவதரித்தார் . பிரபஞ்ச ஒழுசைகக் காப்பாற்றி , அதன் மூலமாக பிரபஞ்ச ஆட்சிப் பொறுப்பில் உள்ள தேவர்களை மகிழ்விப்பதற்காகவே சில அமானுஷ்யமான செயல்களை அவர் புரிந்தார் . சில சமயங்களில் இராவணனையும் , ஹிரண்யகசிபுவையும் போன்ற பெரும் அசுரர்களும் , நாஸ்திகர்களும் மிகவும் பிரபலமடைகின்றனர் . பகவானால் ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்குமுறையை எதிர்க்கும் மனோநிலையுடன் , பௌதிக விஞ்ஞானத்தின் உதவியால் அவர்கள் பெறும் பௌதிக முன்னேற்றமே இதற்குக் காரணமாகும் . உதாரணமாக , பௌதிகமான வழிகளின் மூலமாக மற்ற கிரகங்களுக்குச் செல்லும் முயற்சியானது , ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்கு முறைக்கு எதிரான ஒரு செயலாகும் . ஒவ்வொரு கிரகத்தின் சூழ்நிலையும் வேறுபட்டதாக உள்ளது . பகவானின் திட்டப்படி வேறுபட்ட பிரிவுகளைச் சேர்ந்த மனிதர்களுக்கு அக்கிரகங்களில் இடமளிக்கப்பட்டுள்ளது . ஆனால் , பௌதிக முன்னேற்றத்தின் சிறு வெற்றியால் திமிர் பிடித்தவர்களாக மாறிவிட்ட இறை உணர்வற்ற பௌதிகவாதிகள் சில சமயங்களில் இறைவனே இல்லை என்க...