Skip to main content

பரம இரகசியமான ஞானம்



பகவானைப் பற்றிய உன்னத அறிவை பகவான் தாமாக அறிவிக்கவில்லை என்றால் அதைத் தெரிந்து கொள்ள முடியாது என்பதே இதன் பொருள். மிகப் பெரிய பௌதிக சிந்தனையாளர்களின் மனக்கற்பனையால் பரமபுருஷரை அறிய முடியாது. அவர்களால் அருவ பிரம்ம உணர்வு வரை செல்லவியலும். ஆனால் உண்மையில் உன்னதத்தைப் பற்றிய பூரண அறிவு. அருவ பிரம்மத்தின் அறிவிற்கு அப்பாற்பட்டதாகும். ஆகவே இது பரம இரகசியமான ஞானம் என்றழைக்கப்படுகிறது. முக்தியடைந்த ஆத்மாக்கள் பலரில், யாதேனும் ஒருவர் முழுமுதற் கடவுளை அறியும் தகுதி பெற்றிருக்கக்கூடும். பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்களில் யாரேனும் ஓருவன் மனித வாழ்வின் பூரணத்துவத்தை அடைய முயலக்கூடும் பல முக்தியடைந்த ஆத்மாக்களில் யாதேனும் ஒருவன் மட்டுமே பகவானை உள்ளபடி அறிகிறான் என்று பகவத் கீதையிலும் கூறப்பட்டுள்ளது. எனவே பக்தித் தொண்டால் மட்டுமே பரமபுருஷரைப் பற்றிய அறிவை அடைய முடியும். ரஹஸ்யம் என்றால் பக்தித் தொண்டு என்பதாகும். அர்ஜுனன் ஒரு பக்தரும் நண்பருமாக இருந்ததால் அவருக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசித்தார். அத்தகைய தகுதிகளைப் பெறாமல், பகவத் கீதையின் பரம இரகசியத்தினுள் ஒருவரால் நுழைய முடியாது. எனவே, ஒருவன் பக்தனாகி பக்தித் தொண்டை நிறைவேற்றினால் அல்லாது அவனால் முழுமுதற் கடவுளைப் புரிந்து கொள்ள முடியாது. இந்த மறைபொருள் கிருஷ்ணப் பிரேமையாகும். அதில் தான் முழுமுதற் கடவுளைப் பற்றிய பரம இரகசியத்தை அறிவதற் குரிய முக்கிய தகுதி இருக்கிறது. உன்னதமான கிருஷ்ணப் பிரேமை எனும் நிலையை அடைய, பக்தித் தொண்டின் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்ற வேண்டும். இக்கட்டுப்பாட்டு விதிகள் விதி-பக்தி, (பகவானின் பக்தித்தொண்டு) என்று அழைக்கப்படுகின்றன. பக்குவமடையாத பக்தனொருவன் தற்பொழுதுள்ள அவனுடைய புலன்களால் அவற்றைப் பயிற்சி செய்ய முடியும். இத்தகைய ஒழுக்க விதிகள் முக்கியமாக பகவானின் புகழைக் கேட்பதையும், அவற்றைப் பாடுவதையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இத்தகைய கேட்டலும், பாடலும் பகதர்களின் சகவாசத்தில் மட்டுமே சாத்தியமாகக் கூடும் எனவே பகவானின் பக்தித் தொண்டில் பக்குமடைய ஜந்து முக்கியமான கொள்கைகளை பகவான் ஸ்ரீ சைதன்யர் சிபார்சு செய்துள்ளார். ஒன்று, பக்தர்களுடனான சகவாசம் (செவியுறுதல்); இரண்டு, பகவானின் புகழைப் பாடுதல்; மூன்று, தூய பக்தரிட மிருந்து ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்பது; நான்கு, பகவானோடு சம்பந்தப்பட்டுள்ள ஒரு புனித இடத்தில் வசிப்பது; ஜந்து பகவானின் விக்கிரகத்தை பக்தியுடன் வழிபடுவது. இத்தகைய சட்டதிட்டங்கள் பக்தித் தொண்டின் பகுதிகளாகும்


( ஶ்ரீமத் பாகவதம் 2.9.31 / பொருளுரை 


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...