Skip to main content

Posts

பக்தி தொண்டு

 

பக்குவமான கிருஷ்ண உணர்வு

  சேதஸா ஸர்வ – கர்மாணி மயி ஸன்ன்யஸ்ய மத் – பர : பு த் தி – யோக ம் உபாஷ் ரித்ய மச் – சித்த : ஸததம் ப வ மொழிபெயர்ப்பு எல்லாச் செயல்களிலும் என்னையே சார்ந்து , எனது பாதுகாப்பின் கீழ் எப்போதும் செயல்படுவாயாக . இத்தகு பக்தித் தொண்டில் என்னைப் பற்றிய உணர்வில் ஆழ்ந்துவிடு . பொருளுரை :  கிருஷ்ண உணர்வில் செயல்படுபவன் , உலகின் எஜமான னைப் போன்று செயல்படுவதில்லை . அவன் ஒரு சேவகனைப் போன்று , பரம புருஷரின் முழுமையான வழிகாட்டுதலின் கீழ் செயல்பட வேண்டும் . சேவகனுக்குத் தனிப்பட்ட சுதந்திரம் ஏதும் கிடையாது . அவன் எஜமானரின் கட்டளைப்படி மட்டுமே செயல்படுகின்றான் . உன்னத எஜமானருக்காகத் தொண்டு செய்யும் சேவகன் , இலாப நஷ்டங்களினால் பாதிக்கப்படுவ தில்லை . அவன் தனது கடமையை பகவானது கட்டளையின்படி நம்பிக்கை யுடன் நிறைவேற்றுகிறான் . அர்ஜுனன் கிருஷ்ணருடைய சொந்த வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருந்தான் , ஆனால் கிருஷ்ணர் இல்லாதபோது ஒருவன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தற்போது விவாதிக்கலாம் . இந்தப் புத்தகத்தில் கிருஷ்ணரால் ...

நமது கிருஷ்ண பக்தி இயக்கத்தில் அனுமதிக்கப்படாத அல்லது தூய பக்தர்களால் பாடப்படாத பாடல்களை நாம் அனுமதிப்பதில்லை. ஆலயத்தில் சினிமாப் பாடல்களைப் பாடுவதற்கு நாம் அனுமதிக்க முடியாது.

  பகவானை நாம் காண நேர்ந்தாலும், அவரை நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் போகக்கூடும். கிருஷ்ணர் பூமியில் தோன்றிய போது பலர் அவரைக் கண்டனர். ஆனால் அவர்தான் முழுமுதற்கடவுள் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவஜானந்தி மாம் மூடா மானுஷீம் தனும் ஆஸ்ரிதம். மூடர்களும், அயோக்கியர்களும் கிருஷ்ணரை நேரடியாகக் கண்டனர் என்றபோதிலும், அவர்தான் முழுமுதற்கடவுள் என்பதை அவர்களால் அறிய முடியவில்லை. பகவானை நேராகக் கண்ட பிறகும், துரதிர்ஷ்டசாலி ஒருவனால் அவரைப் புரிந்துகொள்ள முடியாது. ஆகவே பகவான் அல்லது கிருஷ்ணரைப் பற்றி நாம் நம்பத்தகுந்த வேத இலக்கியத்திலிருந்தோ அல்லது வேதத்தை முறையாக அறிந்தவர்களிடம் இருந்தோ கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முன் பிரம்மா முழுமுதற்கடவுளைக் கண்டதில்லை என்றாலும், பகவான் ஸ்வேதத்வீபத்தில் இருக்கிறார் என்பதில் அவர் நம்பிக்கைக் கொண்டிருந்தார். இவ்வாறாக அங்கு செல்லும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, பகவானிடம் அவர் பிரார்த்தனைகளைச் செய்தார். இவை சாதாரண, கற்பனையான பிரார்த்தனைகளல்ல. இப்பதத்தில் தைவீபிர் கீர்பி: எனும் சொற்களால் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல், பிரார்த்தனைகள்...

இறையுணர்வு கொண்ட பிரிவினர் எப்பொழுதும் மகிழ்ச்சியும், வெற்றியும் உடையவர்களாகத் திகழ்கின்றார்கள்.

  அரசியல், அரசியல் தந்திரம், ஏமாற்றும் தன்மை, மற்றும் இரு பிரிவுகளுக்கு இடையிலான தனிநபர் அல்லது சமூக பேச்சு வார்த்தை ஆகியவை இவ்வுலகில் இருப்பதை நாம் காண்கிறோம். இவை உயர்கிரக அமைப்புக்களிலும் உள்ளன என்பது இச்சுலோகத்திலிருந்து தெளிவாகிறது. தேவர்கள் அமிர்தத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் பலி மகாராஜனிடம் சென்றனர். ஆனால், தேவர்கள் ஏற்கனவே பலவீனம் அடைந்துள்ளதால், அமிர்தம் உற்பத்தியானதும் அதை தேவர்களிடமிருந்து பறித்துக் கொண்டு, தங்களது சுய நோக்கங்களுக்காக அதை உபயோகித்துக் கொள்ளலாம் என்றெண்ணிய அசுரர்கள் உடனே அதற்கு சம்மதம் தெரிவித்தனர். உண்மையில் தேவர்களுக்கும் அதே எண்ணம் தான் இருந்தது. தேவர்கள் முழுமுதற் கடவுளாகிய பகவான் விஷ்ணுவின் பக்தர்களாக இருந்தனர். ஆனால் அசுரர்களோ பகவான் விஷ்ணுவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இதனால் பகவான் விஷ்ணு தேவர்களுக்குத் துணையாக இருந்தார். இதுவே இவர்களுக்கிடையிலுள்ள ஒரே வேறுபாடாகும். பிரபஞ்சம் முழுவதிலும் இரு பிரிவினர் உள்ளனர் விஷ்ணு குழுவினர், அல்லது இறையுணர்வு கொண்ட குழுவினர் ஒரு பிரிவும், நாஸ்திகர்கள் மற்ற பிரிவுமாவார். நாஸ்திக பிரிவினர் சந்தோஷம...