Skip to main content

Posts

பக்தர்கள் சங்கத்தின்-முக்கியத்துவம்

  பதம் 25 ஸதாம் ப்ரஸங்கான் மம வீர்ய ஸம்விதோ பவந்தி ஹ்ருத் கர்ணரஸாயனா : கதா : தஜ் ஜோஷணாத் ஆஸூ அபவர்க வர்த்மனி ச்ரத்தாரதிர்பக்திர் அனுக்ரமிஷ்யதி மொழிபெயர்ப்பு தூய பக்தர்களின் தொடர்பில் , பரம புருஷ பகவானின் செயல்கள் மற்றும் லீலைகள் பற்றிக் கலந்துரையாடுவது காதுக்கும் மனதிற்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் தருவதாகும் . அந்த அறிவு பதியவைக்கப்படுவதால் ஒருவர் படிப்படியாக முக்திக்கான வழியில் முன்னேறுகிறார் , அதன் பின்னர் , அவர் விடுதலையடைகிறார் , அவர் கவனம் நிலைபெறுகிறது . பின்னர் உண்மை பக்தியும் பக்தித் தொண்டும் தொடங்குகின்றன . பொருளுரை கிருஷ்ண உணர்விலும் பக்தித் தொண்டிலும் முன்னேறுவதன் முறை இங்கு வர்ணிக்கப்படுகிறது . முதல் கருத்து என்னவென்றால் ஒருவர் கிருஷ்ண உணர்வில் இருப்பவர்கள் மற்றும் பக்தித் தொண்டில் ஈடுபடுபவர்களின் தொடர்பை விரும்புதல் வேண்டும் . அம்மாதிரித் தொடர்பு இன்றி ஒருவர் முன்னேற்றம் அடைய இயலாது என்பதாகும் . புத்தக அறிவு அல்லது படிப்பு இவற்றால் மட்டும் ஒருவர் போற்றத்தக்க வகையில் முன்னேற்றம்...

ஸனாதன தர்மம்

  சதுர் யுகாந்தே காலேன க்ரஸ்தான் ச்ருதி - கணான் யதா தபஸா ரிஷயோ ‘பஸ்யன் யதோ தர்ம: ஸனாதன: மொழிபெயர்ப்பு ஒவ்வொரு சதுர்யுகங்களின் முடிவிலும், பெரும் முனிவர்கள், மனிதகுலத்தின் நித்தியமான வர்ணாஸ்ரம கடமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் கண்டு, மதக் கொள்கைகளை மீண்டும் ஸ்தாபிக்கின்றனர். பொருளுரை இச்சுலோகத்தில், தர்ம: மற்றும் ஸனாதன: எனும் சொற்கள் மிகவும் முக்கியமானவை ஆகும். ஸனாதன என்றால் “நித்தியமான” என்றும், ‘தர்ம’ என்றால் “வர்ணாஸ்ரம கடமைகள்” என்றும் பொருள்படும். சத்திய யுகத்திலிருந்து கலியுகம் வரை, மதக் கொள்கைகளும், வர்ணாஸ்ரம கடமைகளும் படிப்படியாக சீரழிந்து போகின்றன. சத்திய யுகத்தில் மதக் கொள்கைள் வழி பிறழாமல், முழுமையாக பின்பற்றப்படுகின்றன. ஆனால் திரேகாயுகத்தில், இக்கொள்கைகள் எப்படியோ அலட்சியம் செய்யப்பட்டு, மதக் கடமைகளில் முக்கால் பகுதி மட்டுமே தொடர்கிறது. துவாபர யுகத்தில், மதக் கொள்கைகளில் பாதி பாகம் மட்டுமே தொடர்கின்றது. மேலும் கலியுகத்தில், மதக் கொள்கைகளில் கால் பகுதி மட்டுமே தொடர்கிறது. இவும் படிப்படியாக மறைந்து வருகிறது. கலியுகத்தின் இறுதியில், மதக் கொள்கைகள், அல்லது மனித குல...
 

மகிழ்ச்சி இருக்கும் இடம்

 

மகிழ்ச்சி இருக்கும் இடம்

  முன்னுரை: இந்த ஶ்லோகம், நமக்குள் இருக்கும் மகிழ்ச்சியை அறியாமல்,  ஜட உலகில்   அதைத் தேடும் மனிதனின் நிலையை எளிமையாக விளக்குகிறது. எப்படி ஒரு மான் கானல் நீரை உண்மை நீராக எண்ணி ஓடுகிறது, அதுபோல் நாமும் உண்மையான மகிழ்ச்சியைத் தவறான இடங்களில் தேடுகிறோம். உண்மையான மகிழ்ச்சி ஜலம் தத்-உத்பவைஸ் சன்னம் ஹித்வாக்ஞோ ஜல-காம்யயா ம்ருகத்ருஷ்ணாம் உபாதாவேத் ததான்யத்ரார்த்த-த்ருக் ஸ்வத: ஜலம்-நீர்; தத்-உத்பவை:-அந்த நீரிலிருந்து வளர்ந்த புல்லால்; சன்னம்-மூடப்பட்டுள்ள; ஹித்வா-விட்டுவிட்டு; அக்ஞ:-அறிவில்லாத ஒரு மிருகம்; ஜல-காம்யயா-நீரைப் பருக விரும்பி; ம்ருகத்ருஷ்ணாம்-கானல் நீரை; உபாதாவேத்-தேடிச் செல்கிறது; ததா-அதுபோலவே; அன்யத்ர-வேறெங்கோ; அர்த்த-த்ருக்-தன்னலத்தில் ஈடுபட்டு; ஸ்வத:-தனக்குள். மொழிபெயர்ப்பு அறியாமையின் காரணத்தால், புல்லால் மூடப்பட்டுள்ள கிணற்றுக்குள் இருக்கும் நீரைக் காண முடியாமல் ஒரு மான் நீரைத் தேடி வேறு எங்கோ ஓடுகிறது. அதுபோலவே, ஜட உடலால் மூடப்பட்டுள்ள ஜீவராசி தனக்குள் இருக்கும் மகிழ்ச்சியை காண முடியாமல், ஜட உலகில் மகிழ்ச்சியைத் தேடி அலைகிறான். பொருளுரை அறிவ...

ராமசந்த்ராய ஜனக (மங்களம்)

ராமசந்த்³ராய ஜனக (மங்கள³ம்) ராமசந்த்³ராய ஜனகராஜஜா மனோஹராய மாமகாபீ⁴ஷ்டதா³ய மஹித மங்கள³ம் ॥ கோஸலேஶாய மந்த³ஹாஸ தா³ஸபோஷணாய வாஸவாதி³ வினுத ஸத்³வரத³ மங்கள³ம் ॥ 1 ॥ சாரு குங்குமோ பேத சந்த³னாதி³ சர்சிதாய ஹாரகடக ஶோபி⁴தாய பூ⁴ரி மங்கள³ம் ॥ 2 ॥ லலித ரத்னகுண்ட³லாய துலஸீவனமாலிகாய ஜலத³ ஸத்³ருஶ தே³ஹாய சாரு மங்கள³ம் ॥ 3 ॥ தே³வகீபுத்ராய தே³வ தே³வோத்தமாய சாப ஜாத கு³ரு வராய ப⁴வ்ய மங்கள³ம் ॥ 4 ॥ புண்ட³ரீகாக்ஷாய பூர்ணசந்த்³ரானநாய அண்டஜ³ாதவாஹனாய அதுல மங்கள³ம் ॥ 5 ॥ விமலரூபாய விவித⁴ வேதா³ந்தவேத்³யாய ஸுஜன சித்த காமிதாய ஶுப⁴க³ மங்கள³ம் ॥ 6 ॥ ராமதா³ஸ ம்ருது³ல ஹ்ருத³ய தாமரஸ நிவாஸாய ஸ்வாமி ப⁴த்³ரகி³ரிவராய ஸர்வ மங்கள³ம் ॥ 7 ॥ 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண🙏 🍁🍁🍁🍁🍁🍁🍁 மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.             சுத்த   பக்தி   வாட்ஸப்   க்ரூப்   சுத்த   பக்தி   டெலிகிராம்   க்ரூப்   உத்வேக ...