Skip to main content

நம்முடைய அற்பமான புத்தி கூர்மையைக் கொண்டு “கிருஷ்ணருடைய கனபரிமாணங்களை அளவிட முடியாது”


 நம்முடைய அற்பமான புத்தி கூர்மையைக் கொண்டு “கிருஷ்ணருடைய கனபரிமாணங்களை அளவிட முடியாது”


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

பெரும்பாலான ஞானிகளும், யோகிகளும், பொது வாழ்வில் அருவவாதிகளாகவே விளங்குகின்றனர். ஆன்மீக விண்வெளியில், பிரகாசமான பிரம்ம ஜோதியில் கலப்பதின் மூலம் அவர்கள் தற்காலிக மோட்சத்தைப் பெறுகின்றனர். இருந்த போதிலும், ஸ்ரீமத் பாகவதத்தின் கண்ணோட்டத்தின்படி, அவர்களுடைய அறிவு தூய்மையானதாகக் கருதப்படுவதில்லை. கடும் தவம், தியானம், வேள்விகள் ஆகியவற்றினை புரிவதன் மூலம் அவர்கள் பிரம்ம ஜோதி நிலைக்கு தம்மை உயர்த்திக் கொள்கின்றனர். ஆயினும் ஏற்கனவே குறிப்பிட்டப்படி இறைவனான கிருஷ்ணருடைய திரு உருவ நிலையை அவர்கள் பொருட்படுத்தாததால் மீண்டும் ஜட உலகில் விழுகின்றனர். கிருஷ்ணருடைய தாமரைப் பாதங்களைச் சேவிக்காவிடின் சந்தேகமின்றி எவரும் மீண்டும் ஜட உலக வாழ்க்கைக்குத் திரும்பியே ஆக வேண்டும். “நான் என்றும் உம்முடைய சேவகன். எவ்வாறாயினும் உம்முடைய சேவையில் ஈடுபட எனக்கு அருள் புரிவீராக” என்று நினைப்பதே மிகச் சிறந்த மனப்பாங்காகும். ‘வெற்றி காண முடியாதவர்’ என்று பொருள் பட ‘அஜித’ என அழைக்கப்படுகிறார். ஆகையினால், இறைவனை ஒருவராலும் வெற்றி காண முடியாது ஆனால் ஸ்ரீமத் பாகவதத்தின் படி, மேற்கூறிய மனப்பாங்கை ஒருவர் அடைவாராயின் அவர் மிக எளிதில் இறைவனை வெற்றி காண்கிறார். இறைவனை அளவிட்டு மதிப்பிடும் வீணான பழக்கத்தை நாம் விட்டுவிட வேண்டும் என்றும் ஸ்ரீமத் பாகவதம் நமக்கு சிபாரிசு செய்கின்றது ஆகாயத்தைக் கூட நம்மால் அளவிட முடிவதில்லை. இறைவனைப் பற்றி என்ன கூறுவது? நம்முடைய அற்பமான புத்தி கூர்மையைக் கொண்டு “கிருஷ்ணருடைய கனபரிமாணங்களை அளவிட முடியாது” என்ற முடிவுக்கு வருபவரே உண்மையில் புத்திசாலி என்று வேத நூல்கள் உரைக்கின்றன. நாம் இந்த பிரபஞ்சத்தின் மிக அற்பமான அம்சமே என்ற உண்மையை தாழ்மையுடன் புரிந்துக்கொள்ள வேண்டும். நம்முடைய மன கற்பனைகளின் மூலமாகவோ அல்லது மிகச் சிறிய புத்தி கூர்மையாலோ இறைவனை புரிந்துகொள்ள முயற்சிப்பதை அறவே விட்டுவிட்டு பகவத்கீதை போன்ற அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களின் மூலமாகவோ அல்லது இறைவனைப் பூரணமாக உணர்ந்த மகாத்மாக்களின் வாயிலாக மிகத் தாழ்மையுடன் கேட்பதின் மூலமாகவோ இறைவனை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

பகவத் கீதையில் அர்ச்சுனன் இறைவனைப் பற்றி ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து நேரடியாகவே கேட்கின்றான். இவ்வாறாக, பணிவன்புடன் இறைவனைப் பற்றி கேட்க வேண்டும் என்ற நியதிக்கு உதாரணமாக அர்ச்சுனன் விளக்குகிறான். பகவத் கீதையை அர்ச்சுனனிடமிருந்தோ, அல்லது குருவிடமிருந்தோ பெறுவதே நமது நிலைமையாகும். அவ்வாறு கேட்டு அறிந்த பிறகு, அத்தகைய அறிவை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்துவதும் அத்தியாவசியமாகும். “எனது அன்புக்குறிய பிரபோ, நீர் எவராலும் ஆட்கொள்ளப்படாதவர். இருப்பினும், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளிடமிருந்து உம்மைப்பற்றிய விவரிப்புகளை கேட்கின்ற இந்த முறையின் மூலம் நீர் ஆட்கொள்ளப்படுகிறீர்” என்றே பக்தன் இறைவனிடம் துதிக்கின்றான். இறைவனை ஒருவராலும் வெற்றி காண முடியாது. ஆனால், எல்லாவித மனக் கற்பனைகளையும் நிராகரித்து, அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் இருந்து கவனத்துடன் கேட்கும் பக்தரால் இறைவன் வெற்றி கொள்ளப்படுகிறார்.

(பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பால் / அத்தியாயம் 3)

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...