Skip to main content

ஹஸ்தினாபுரத்திலுள்ள பெண்களின் பிரார்த்தனைகள்



ஸ்ரீமத்-பாகவதம்

காண்டம் 1 / அத்தியாயம் 10 / பதம் 21- 25

*************************************************************************

பதம் 21

வை கிலாயம் புருஷ: புராதனோ
ஏக ஆஸீத் அவிசேஷ ஆத்மனி
அக்ரே குணேப்யோ ஜகத்-ஆத்மனீஸ்வரே
நிமீலிதாத்மன் நிசி ஸுப்த-சக்திஷு

மொழிபெயர்ப்பு

அவர்கள் கூறினர்: நம் சிந்தனையில் தெளிவாக உள்ள அந்த மூல முழுமுதற் கடவுள் இதோ இருக்கிறார். ஜட இயற்கைக் குணங்கள் தோன்றுவதற்கு முன் அவர் மட்டுமே இருந்தார். மேலும் அவர் பரம புருஷர் என்பதால், எல்லா ஜீவராசிகளும், சக்தி முடக்கப்பட்டு, இரவில் உறங்குவதைப் போல் அவருக்குள் ஐக்கியமாகிவிடுகின்றன.

 

பதம் 22

ஏவ பூயோ நிஜ-வீர்ய-சோதிதாம்
ஸ்வ-ஜீவ-மாயாம் ப்ரக்ருதிம் ஸிஸ்ருக்ஷதீம்
அனாம-ரூபாத்மனி ரூப-நாமனீ
விதித்ஸமானோனுஸஸார சாஸ்த்ர-க்ருத்

மொழிபெயர்ப்பு

பரம புருஷர் அவரது அங்க உறுப்புக்களான ஜீவராசிகளுக்கு மீண்டும் பெயர்களையும் உருவங்களையும் அளிக்க விரும்பி, அவற்றை ஜட இயற்கையின் வழிகாட்டலின் கீழ் வைத்தார். அவரது சுய ஆற்றலால், மறுபடியும் சிருஷ்டியைச் செய்ய ஜட இயற்கைக்கு சக்தியளிக்கப்படுகிறது.

 

 

பதம் 23

வா அயம் யத் பதம் அத்ர ஸுரயோ
ஜிதேந்ரியா நிர்ஜித-மாதரிஸ்வன:
பஸ்யந்தி பக்தி-உத்கலிதாமலாத்மனா
நன் ஏஷ ஸத்வம் பரிமார்ஷ்டும் அர்ஹதி

மொழிபெயர்ப்பு

அசையாத பக்தித் தொண்டாலும், உயிர் மற்றும் புலன்கள் ஆகியவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தியதாலும், பௌதிக உணர்விலிருந்து முற்றிலும் தூய்மை அடைந்துள்ள சிறந்த பக்தர்கள் பகவானின் திவ்யமான உருவத்தை அனுபவிக்கின்றனர். அதே பரம புருஷ பகவான் இதோ இருக்கிறார். இந்த பக்திதான் வாழ்வை தூய்மைப்படுத்துவதற்கான ஒரே வழியாகும்.

 

பதம் 24

வா அயம் ஸகி அனுகீத-ஸத்-கதோ
வேதேஷு குஹ்யேஷு குஹ்ய-வாதிபி:
ஏக ஈசோ ஜகத்-ஆத்ம-லீலயா
ஸ்ருஜதி அவதி அத்தி தத்ர ஸஜ்ஜதே

மொழிபெயர்ப்பு

அன்புத் தோழிகளே, வேத நூல்களின் அந்தரங்கமான பகுதிகளில், பகவானின் கவர்ச்சியானதும், அந்தரங்கமானதுமான லீலைகள் அவரது சிறந்த பக்தர்களால் விவரிக்கப்பட்டுள்ளன. அதே பரம புருஷ பகவான் இதோ இருக்கிறார். இவர் ஜடவுலகைப் படைத்து, காத்து, அழிப்பதுடன், அதனால் பாதிப்படையாமலும் இருக்கிறார்.

 

பதம் 25

யதா ஹி அதர்மேண தமோ-தியோ ந்ருபா
ஜீவந்தி தத்ரைஷ ஹி ஸத்வத: கில
தத்தே பகம் ஸத்யம் ருதம் தயாம் யசோ
பவாய ரூபாணி ததத் யுகே யுகே

 

 

மொழிபெயர்ப்பு

எப்போதெல்லாம் அரசர்களும், நிர்வாகிகளும் மிருகங்களைப் போல் மிகத்தாழ்ந்த குணங்களில் வாழ்கிறார்களோ, அப்போது உன்னத உருவிலுள்ள பகவான் அவரது பரம சக்தியை, வெளிப்படுத்துகிறார். மேலும் பக்தியுள்ளவர்களுக்கு விசேஷ கருணையைக்காட்டும் அவர், அற்புதச் செயல்களை நிகழ்த்துவதுடன், வேறுபட்ட காலங்களுக்கும், யுகங்களுக்கும் தேவையான அதே திவ்ய ரூபங்களையும் தோற்றுவிக்கிறார்.

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...