Skip to main content

பகவான் தன்வந்திரியின் தோற்றம் / மோகினீ அவதாரம்


 பகவான் தன்வந்திரியின் தோற்றம்

வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁



இம்முறை, பகவான் விஷ்ணுவின் அம்ச அவதாரமான தன்வந்தரி தோன்றினார். மிகவும் அழகாக காணப்பட்ட அவர், அமிர்தத்தைக் கொண்ட ஒரு கலசத்தை ஏந்தியிருந்தார். அசுரர்கள் உடனே தன்வந்தரியின் கரத்திலிருந்த கலசத்தை வெடுக்கெனப் பிடுங்கிக்கொண்டு ஓடத் துவங்கினர். மிகவும் வருத்தமடைந்த தேவர்கள் விஷ்ணுவைச் சரணடைந்தனர். தன்வந்தரியிடமிருந்து கலசத்தை பிடுங்கிக் கொண்டபின் அசுரர்கள் தங்களுக்கிடையில் சண்டையிட ஆரம்பித்தனர். பகவான் விஷ்ணு தேவர்களுக்கு ஆறுதல் கூறியதால் அவர்கள் போரிடாமல் அமைதியாக இருந்தனர். 


மோகினீ அவதாரம்


🍁🍁🍁🍁🍁🍁🍁

 

அசுரர்களுக்கிடையில் சண்டை நடந்து கொண்டிருக்கும்போது, பிரபஞ்சத்திலேயே மிகவும் அழகிய பெண்ணாகிய மோகினீ அவதாரமாக பகவான் தோன்றினார். அமிர்த கலசத்தை அசுரர்கள் அபகரித்துக் கொண்டபோது, அசாதாரணமான அழகு கொண்ட ஓர் இளம்பெண் அவர்களின் முன் தோன்றினாள். அசுரர்கள் அனைவரும் அந்த இளம் பெண்ணின் அழகில் மயங்கி, அவளுக்கு அடிமைகளாயினர். இப்போது அமிர்தத்தை அடைவதற்காக அசுரர்கள் தங்களுக்கிடையில் சண்டை செய்து கொண்டிருந்ததால், தங்களுடைய சண்டை சச்சரவுகளை தீர்த்து வைப்பதற்குரிய ஒரு மத்தியஸ்தராக அழகிய இப்பெண்ணைத் தேர்ந்ததெடுத்தனர். இவ்விஷயத்தில் அவர்களுக்கு இருந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்ட பரமபுருஷ பகவானின் அவதாரமாகிய மோஹினி, தாம் எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு அவர்கள் சம்மதிக்க வேண்டும் என்று அசுரர்களின் வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டாள். அசுரர்கள் இந்த வாக்குறுதியைச் செய்ததும், அழகுப் பெண்மணியாகிய மோஹினி மூர்த்தி, அமிர்தத்தைப் பகிர்ந்து அளிப்பதற்காக, தேவர்களையும் அசுரர்களையும் இரண்டு வரிசைகளாக அமரச் செய்தாள். அசுரர்கள் அமிர்தத்தைப் பருகும் தகுதியற்றவர்கள் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஆகவே, அவர்களை ஏமாற்றி அமிர்தம் முழுவதையும் அவள் தேவர்களுக்குப் பகிர்ந்தளித்தாள். மோஹினி மூர்த்தியின் இந்த வஞ்சனையைக் கண்ட அசுரர்கள் மௌனமாக இருந்துவிட்டனர். ஆனால் ராகு என்னும் பெயர் கொண்ட அசுரனொருவன் ஒரு தேவரைப் போல் ஆடை அணிந்து கொண்டு, தேவர்களின் வரிசையில் அமர்ந்து கொண்டான். அவன் சூரியனுக்கும், சந்திரனுக்கும் பக்கத்தில் அமர்ந்தான். ராகு ஏமாற்ற முயல்வதை அறிந்த பரமபுருஷர் அந்த அசுரனின் தலையை உடனே துண்டித்து விட்டார். ஆனால், ராகு அமிர்தத்தைச் சுவைத்து விட்டதால், அவனது தலை துண்டிக்கப்பட்டு விட்டாலும், அவன் உயிருடனேயே இருந்தான். தேவர்கள் அமிர்தத்தைப் பருகியபின், பரமபுருஷர் தமது சுய ரூபத்தை ஏற்றார். 



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami


Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...