Skip to main content

முத்து மூக்குத்தி


 முத்து மூக்குத்தி


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒரிசா தேசத்தில் பரம பாகவதரான புருஷோத்தம தேவர் என்னும் மஹாராஜா ஆட்சி செய்து வந்தார். அவர் விஜயநகரத்து ராஜகுமாரியை மணம் செய்து கொள்ள விரும்பித்தன் விருப்பத்தை வெளியிட்டார். இதற்கு விஜயநகர அரசன் சம்மதிக்கவில்லை. ஏனெனில் வருடாவருடம் வரும் மாபெரும் ஜெகன்நாதரின் தேர்திருவிழாவில் மன்னர் ஜெகன்நாதரின் தேரின் முன் துடைப்பத்தால் சுத்தம் செய்வது மரபு

( பகவான் ரதத்திற்கு எடுத்துச் செல்லும் சமயத்தில் மன்னர் பிரதாபருத்ரர் தங்கக் கைப்பிடி கொண்ட துடைப்பத்தைக் கொண்டு தாமே தமது கையினால் வீதியினை சுத்தம் செய்யும் சேவையில் ஈடுவார். மன்னர் வீதியில் சந்தன நீரைத் தெளிப்பார்.. அவர் ராஜ சிம்மாசனத்தின் உரிமையாளராக இருந்தபோதிலும் பகவான் ஜகந்நாதரின் திருப்திக்காக துச்சமான சேவையில் ஈடுபட்டார். மன்னர் மிகவும் மதிக்கத்தக்க நபராக இருந்தபோதிலும், அவர் பகவானுக்காக துச்சமான சேவையினை ஏற்றுக் கொண்டார் எனவே, பகவானின் கருணையைப் பெறுவதற்கு அவர் முழு தகுதியுடைய நபரானார்.

மன்னர் இந்த மாதிரி சேவையில் ஈடுபடுவதை கேள்விப்பட்ட விஜயாநகர மன்னர் தன் மகளை கோயில் பெருக்குகிறவனுக்குத் தரமாட்டேன் என்று கூறினார். இதனால் கோபமடைந்த மஹாராஜா புருஷோத்தம தேவர் விஜயநகரத்தின் மீது படையெடுத்தார். பகவான் ஜகன்னாதனின் கிருபையால் விஜய நகரத்தை வென்று தனது ராஜ்யத்தில் சேர்த்துக் கொண்டார். ராஜ கன்னிகையையும் மணந்து கொண்டார். அப்போதுதான் மஹாராஜா சாட்சி கோபாலனை ஜகன்னாதபுரிக்கு எழுந்தருளும்படி பிரார்த்தித்தார். மஹாராஜாவின் பக்தியால் பரவசமான சாட்சி கோபாலன் புரிக்கு எழுந்தருளி ஜகன்னாத பகவானின் கோயிலில் மாணிக்க சிம்மாசனத்தில் சிறிது காலம் வீற்றிருந்தார். பகவான் ஶ்ரீ ஜகன்னாதருக்கும் புதிதாக வந்த சாட்சி கோபாலனுக்கும் சிறிது ப்ரேம கலகம் தோன்றியது மஹாராஜா புருஷோத்தம தேவர் இருவரையும் ஒன்றாக வைத்திருப்பது உசிதமல்ல என்று கருதினார். முடிவில் புரியிலிருந்த மூன்றுகாத தூரத்தில் 'சத்தியவாதி' என்னும் கிராமத்திற்கு அருகில் சாட்சி கோபால பகவானுக்கு கோவில் கட்டுவித்தார்.

இவரது மஹிமை அபாரமானது. ஒருமுறை ஒரிஸ்ஸா தேசத்து மகாராணி கோபாலனை தர்சிக்க வந்தாள் கோபாலனின் மனமோகனமான மூர்த்தியைக் கண்டு அவள் தன்னை மறந்தாள். இந்த பகவானுக்கு மூக்குக் குத்தியிருந்தால் நான் எனது விலையுயர்ந்த முத்து மூக்குத்தியை அணிவித்துப் அலங்கரித்து பார்ப்பேனே என்று ஆசைப்பட்டாள். மறுநாளே மஹாராணியின் ஸ்வப்னத்தில் சாட்சி கோபாலன் வந்து நின்று கொண்டு கூறலானார்- மஹாராணி! நான் உனது விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் எனது மூக்கு குத்தியிருப்பது பூஜாரிகளுக்குத் தெரியவில்லை. என் மூக்கில் துளை இருப்பதை நாளை நீ கவனமாகக் புஜாரிக்கு காட்டு. மகிழ்ச்சியோடு நீ உன் முத்தை அணிவித்து உனது விருப்பத்தைப் பூர்த்தி செய்துகொள்''.என்றார்.

பொழுது புலர்ந்ததும் மஹாராணி மஹாராஜாவிடம் நடந்தைக் கூறினாள். மஹாராஜா அப்போதே அர்ச்சகர்களை அழைத்து பகவானின் மூக்கில் துளையிருப்பதைக் காட்டினான். மஹாராணி மிகுந்த ப்ரியத்தோடு விலை மதிப்பில்லாத தனது முத்து மூக்குத்தியை பகவானது மூக்கில் அணிவித்தாள் ஆனந்தம் கொண்டார்.

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...