Skip to main content

ஶ்ரீ ஜெகதீஷ பண்டிதர்


 ஶ்ரீ ஜெகதீஷ பண்டிதர்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஜெகதீஷ பண்டிதரைப் பற்றிய விளக்கங்கள் சைதன்ய பாகவதம் ஆதி காண்டம், அத்தியாயம் ஆறு, மற்றும் சைதன்ய சரிதாம்ருதம், ஆதிலீலை, அத்தியாயம் 14ல் காணப்படுகிறது. இவர் சாகதஹ இரயில் நிலையத்திற்கு அருகில் நதீயா மாவட்டத்திலுள்ள யஷடா என்னும் ஊரைச் சார்ந்தவர். அவரது தந்தையான கமலாக்ஷர், பட்ட நாராயணன் என்பவரின் மகனாவார். ஜெகதீஷருடைய தாய், தந்தையர் இருவரும் பகவான் விஷ்ணுவின் சிறந்த பக்தர்களாவர். அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு ஜெகதீஷர், அவருடைய மனைவி துக்கினி, சகோதரர் மகேஷர் ஆகிய மூவரும் சொந்த ஊரைவிட்டு ஶ்ரீ மாயாபூருக்கு  வந்தனர். அங்கே ஶ்ரீ ஜகந்நாத மிஸ்ரர் மற்றும் இதர வைஷ்ணவர்களின் சங்கத்தில் அவர்கள் வாழ தொடங்கின்ர். சைதன்ய மகாபிரபு ஜெகதீஷரை ஜகந்நாத புரிக்குச் அழைத்துச் செல்லுமாறும் ஹரி நாம ஸங்கீர்த்தன இயக்கத்தை பிரச்சாரம் செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். ஜகந்நாத புரியிலிருந்து திரும்பிய பின்னர், பகவான் ஜகந்நாதரின் கட்டளைக்கிணங்க, அவர் யஷடா கிராமத்தில் ஜகந்நாதரின் விக்ரஹங்களை  பிரதிஷ்டை செய்தார். ஜெகதீஷ பண்டிதர் ஜகந்நாதரின் விக்ரகத்தினை யஷடா கிராமத்திற்குக்  கொண்டு வந்தபோது, வலுவான அந்த விக்கிரகத்தினை ஒரு குச்சியில் கட்டி கொண்டுவந்தார் என்று கூறப்படுகிறது. ஜெகதீஷ பண்டிதர் ஜகந்நாத விக்ரஹத்தைக் கொண்டுவருவதற்கு உபயோகித்த அக்குச்சியினை கோயிலின் பூஜாரிகள் இன்றும் காண்பிக்கின்றனர்.


( ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / ஆதிலீலை / 11.30 )



ஜெகதீஷர் மற்றும் ஹிரண்யரின் இல்லத்தில் ஏகாதசி நாளன்று விஷ்ணுவின் பிரசாதத்தினை மகாப்பிரபு ஏற்றுக் கொண்ட சம்பவம், சைதன்ய பாகவதம், ஆதி காண்டம், ஆறாவது அத்தியாயத்தில் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது. ஏகாதசியன்று விரதமிருப்பது பக்தர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட போதிலும், பகவான் விஷ்ணுவுக்கு விரதம் ஏதும் கிடையாது என்பதால், அவருக்கு ஏகாதசியன்றும் பொதுவான பிரசாதமே அர்ப்பணிக்கப்படுகிறது. ஒருமுறை ஏகாதசி நாளன்று ஜெகதீஷர் மற்றும் ஹிரணிய பண்டிதரின் இல்லத்தில், பகவான் விஷ்ணுவுக்குச் சிறப்பான பிரசாதத்தினைச் சமைப்பதற்கான ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. ஸ்ரீசைதன்ய மஹாபிரபு தமக்கு உடல் நலம் சரியில்லை என்று காரணம் கூறி, விஷ்ணுபிரசாத்தினை  அவர்களிடம் கேட்குமாறு தனது தந்தையிடம் வேண்டினார். ஜெகதீஷர் மற்றும் ஹிரண்ய பண்டிதரின் இல்லமானது ஜகநாத மிஸ்ரரின் இல்லத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் இருந்தது. ஜகந்நாத மிஸ்ரர், ஸ்ரீசைதன்ய மஹாபிரபு வின் வேண்டுகோளின்படி ஜெகதீஷர் மற்றும் ஹிரண்யரிடம் பிரசாத்த்தினை  கேட்கச் சென்றபோது, அவர்கள் சற்று வியப்புற்றனர், "பகவான் விஷ்ணுவிற்கு விசேஷமான பிரசாதம் தயாரிக்கப்படுவதே இந்த சிறுவன் எவ்வாறு தெரிந்து கொண்டான் ? " நிமாயிடம் இயற்கைக்கு அப்பாற்பட்ட யோக சித்திகள் இருக்க வேண்டுமென்று அவர்கள் உடனடியாக முடிவு செய்தனர். இல்லாவிடில், அவர்கள் சிறப்பான பிரசாரதத்தினை தயாரிக்கின்றனர் என்பதை அவரால் எவ்வாறு புரிந்து கொள்ள முடிந்தது ? எனவே, அவர்கள் உடனடியாக ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவிற்கு அவரது தந்தை ஜகநாத மிஸ்ரரின் மூலமாக உணவைக் கொடுத்து அனுப்பினர். நிமாய் உடல்நிலை சரியில்லாததைப் போல இருந்தார். ஆனால் விஷ்ணு பிரசாதத்தை உண்ட மாத்திரத்தில் குணமடைந்தார். பிரசாதத்தினை தம்முடன் விளையாடிக் கொண்டிருந்தவர்களுக்கும் விநியோகம் செய்தார்.


(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / ஆதிலீலை / 14.42 / பொருளுரை )



 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...