Skip to main content

ஜீவராசிகளின் நிலையும்.மற்றும் பகவானின் கருணையும்




பௌதிகத்தில் ஆழ்ந்துள்ள ஜீவராசிகளின் துன்பத்திற்கான மூலகாரணம், அதிலிருந்து விடுபடுவதற்கான பரிகாரம் மற்றும் அடையப்பட வேண்டிய முடிவான பூரணத்துவம் ஆகிய அனைத்தும் இப்பதத்தில் கூறப்பட்டுள்ளன. ஜீவராசி அவனுடைய இயற்கையான அமைப்புப்படி, சிறைப்பட்டுள்ள ஜட வாழ்விற்கு மேற்பட்டவனாவான். ஆனால் இப்போது அவன் பகிரங்க சக்தியினால் சிறைப்படுத்தப்பட்டு உள்ளான். இதனால் தன்னை அவன் ஜட சக்தியின் ஒரு விளைபொருள் என்று எண்ணிக் கொள்கிறான். புனிதமற்ற இத்தொடர்பினால், தூய ஆன்மீகத் தன்மையைக் கொண்ட ஜீவன், ஜட இயற்கைக் குணங்களின் கீழ் பௌதிக துன்பங்களை அனுபவிக்கிறான். தான் பௌதிகத்தின் ஒரு விளைபொருள் என்று ஜீவராசி தன்னை தவறாக புரிந்துகொள்கிறான். தற்போது பௌதிக சூழ்நிலைகளின் கீழ் அவன் கொண்டுள்ள முறைகேடான எண்ணம், உணர்வு மற்றும் விருப்பம் ஆகியவை அவனுக்கு இயற்கையானவை அல்ல என்பதையே இது குறிக்கிறது. ஜீவராசி அவனுடைய பந்தப்படாத நிலையில் சிந்தனை, விருப்பம் மற்றும் உணர்வு ஆகிய இயல்பான சக்திகளைக் கொண்டுள்ளான். பந்தப்பட்ட நிலையில் அவனது அறிவு அறியாமையால் மூடப்பட்டுவிடுகிறது. இவ்வாறாக ஜீவராசி, பூரண அருவ பிரம்மாவாக இருக்கிறான் என்ற தத்துவம் இங்கு தவறென நிரூபிக்கப்படுகிறது. ஏனெனில், ஜீவராசி அவனுடைய ஆதியான பந்தப்படாத நிலையிலும் அவனுடைய சுயமான சிந்திக்கும் ஆற்றலைக் கொண்டவனாகவே இருக்கிறான். தற்போதுள்ள பந்தப்பட்ட நிலைக்கு பகிரங்க சக்தியின் ஆதிக்கமே காரணம். அதாவது, பரம புருஷர் விலகியிருக்கும்போது, மாயா சக்தி தைரியமாக அதன் காரியத்தைத் துவங்குகிறது. பகிரங்க சக்தியினால் ஜீவராசி மாயைக்கு உட்பட்டிருப்பதை பகவான் விரும்பவில்லை. பகிரங்க சக்தித்கு இவ்வுண்மை தெரியும். இருப்பினும் அவள் மறதியுள்ள ஆத்மாக்களை மாயையின் பிடியில் வைத்திருக்கும் நன்றியற்ற பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான். பந்தப்பட்ட ஆத்மாக்களை திருத்துவதற்கு மாயா சக்தியின் இத்தகைய செயலும் தேவைப்படுவதால், மாயா சக்தியின் செயல்களில் பகவான் குறுக்கிடுவதில்லை. பாசமுள்ள தந்தையொருவர், தனது குழந்தைகள் மற்றவர்களால் தண்டிக்கப்படுவதை விரும்பமாட்டார். என்றாலும் அவருக்குக் கீழ்ப்படியாத குழந்தைகளை திருத்துவதற்காக, ஒரு கடுமையான மனிதனின் கண்காணிப்பில் அவர்களை விட்டு வைக்கிறார். ஆனால் அதேசமயம் பூரண பாசம் கொண்டவரான சர்வ சக்தி படைத்த தந்தை (பகவான்), பந்தப்பட்ட ஆத்மாக்கள் மாயா சக்தியின் பிடியிலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்றும் விரும்புகிறார். அரசர் கீழ்ப்படிய மறுக்கும் பிரஜைகளை சிறைக்குள் அடைத்துவிடுகிறார். ஆனால் கைதியை விடுவிக்கும் எண்ணத்துடன், சில சமயங்களில் அரசர் தாமாகவே சிறைக்கூடத்திற்கு சென்று, தன்னை திருத்திக் கொள்ளும்படி அவனுக்கு அறிவுரை கூறுகிறார். அரசர் அவ்வாறு செய்ததும் கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். அதைப் போலவே, பகவான் தமது ஆன்மீக உலகிலிருந்து பௌதிக உலகிற்கு இறங்கிவந்து, பகவத் கீதையின் வடிவில் ஜீவராசிகளின் துன்பத்தை அகற்றுகிறார். மாயா சக்தியை வெல்லுவது மிகவும் கடினம் என்றாலும், பகவானின் தாமரைப் பாதங்களில் சரணடைபவர் உடனே விடுவிக்கப்படுகிறார் என்று கீதையில் அவர் அறிவுறுத்துகிறார். மாயா சக்தியின் குழப்பமான செயல்முறைகளிலிருந்து விடுபடுவதற்கு இந்த சரணடையும் முறைதான் சரியான பரிகாரமாகும். இம்முறை நல்ல சகவாசத்தினால் முழுமையடைகிறது. ஆகவே பரம புருஷ பகவானை உண்மையாக உணர்ந்துள்ள புண்ணிய புருஷர்களின் சொற்பொழிவுகளால் தூண்டப்பட்டு, பகவானின் உன்னத அன்புத் தொண்டில் மக்கள் ஈடுபடுகின்றனர் என்று பகவான் கூறுகிறார். பந்தப்பட்ட ஆத்மா பகவானைப் பற்றி கேட்பதில் ஒரு சுவையைப் பெறுகிறான். இத்தகைய கேட்கும் முறையினால் மட்டுமே, பகவானிடம் மரியாதை, பக்தி மற்றும் பற்று ஆகியவற்றை ஏற்படுத்திக் கொள்ளும் நிலைக்கு அவன் படிப்படியாக உயர்த்தப்படுகிறான். சரணாகதி முறையினால் அனைத்தும் முழுமை அடைகின்றன. வியாசதேவரின் உருவில் அவதரித்த பகவான் இந்த இடத்திலும் அதே அறிவுரையைத்தான் கூறுகிறார். அதாவது, பந்தப்பட்ட ஆத்மாக்கள் இரு வழிகளில் பகவானால் திரும்ப அழைத்துக் கொள்ளப்படுகின்றனர். பகவானின் பகிரங்க சக்தியால் தண்டிக்கப்படும் முறை ஒரு வழியாகும். பகவான் தாமாகவே உள்ளும், புறமும் ஆன்மீக குருவாக இருந்து ஜீவன்களை அழைத்துக் கொள்வது மற்றொரு வழியாகும். ஒவ்வொரு ஜீவராசியின் இதயத்திற்குள்ளும் பகவான், பரமாத்மாவின் வடிவில் ஆன்மீக குருவாக இருக்கிறார். மேலும் அவர் சாஸ்திரங்கள், முனிவர்கள் மற்றும் தீட்சை குரு ஆகியோரின் வடிவில் வெளியிலுள்ள ஆன்மீக குருவாகவும் இருக்கிறார். இது அடுத்த சுலோகத்தில் இன்னும் தெளிவாக்கப்படுகிறது.


( ஸ்ரீமத் பாகவதம் 1.7.5 / பொருளுரை  )


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...