Skip to main content

ஸ்ரீ கேவலாஷ்டகம்


 

ஸ்ரீ கேவலாஷ்டகம்

*****************************************************************************

பதம் – 1

மதுரம் மதுரேப்யோ அபி

மங்களேப்யோ அபி மங்களம்

பாவனம் பாவனேப்யோ அபி

ஹரேர் நாமைவ கேவலம்

மொழிபெயர்ப்பு

இனியவை அனைத்திலும் மிகவும் இனியது. மங்களம் அனைத்திலும் மிகவும் மங்களகரமானது. புனிதப்படுத்துவதில் அனைத்திலும் உன்னதமான புனிதப்படுத்துவது. அனைத்தும் பகவான் ஸ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே

 

பதம் – 2

ஆபிரஹ்மா ஸ்தம்ப பர்யந்தம்

ஸர்வம் மாயா மயம் ஜகத்

ஸத்யம் ஸத்யம் புன : ஸத்யம்

ஹரேர் நாமைவ கேவலம்

மொழிபெயர்ப்பு

முழு பிரபஞ்சத்திலும் உயர்ந்தவரான பிரம்மா முதல் அற்பமான புல் வரையிலும் பரமபுருஷருடைய ஜடசக்தியின் மாயப் படைப்புகளே ஆகும். ஒன்றே ஒன்று மட்டும் உண்மை, முழு உண்மை மீண்டும் நான் சொல்கிறேன் முழு உண்மை அனைத்தும் பகவான் ஸ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே.

 

 

பதம் – 3

குரு : ஸபிதா அபி

ஸா மாதா பந்தவோ அபி :

சிக்ஷயேக் சேத் சதா ஸ்மர்தும்

ஹரேர் நாமைவ கேவலம்

மொழிபெயர்ப்பு

ஒரு நபர் உண்மையான ஆசானோ அல்லது உண்மையான தந்தையோ ஒரு உண்மையான தாய் மற்றும் உண்மையான நண்பன் யாராக இருந்தாலும் அவர்கள் கற்பிப்பதும், எப்பொழுதும் நினைவில் கொள்வதும் அனைத்தும் பகவான் ஸ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே

 

பதம் – 4

நி : ஸ்வாஸே நாஹி விஸ்வாச

கதா ருத்தோ பவிஷ்யதி

கீர்த்தனிய மதோ பால்யாத்

ஹரேர் நாமைவ கேவலம்

மொழிபெயர்ப்பு

இறுதி மூச்சு எப்போது வரும் என்று ஒருவராலும் நிச்சயமாக கூற முடியாது. பெருகிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரது திட்டங்களும் தீடீரென்று அப்பொழுது துண்டிக்கப்படும். எனவே அறிவுடையவர்கள் அனைவரும் சிறுகுழந்தை பருவத்திலேயே ஜபிக்க பழக வேண்டுயது, அனைத்தும் பகவான் ஸ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே

 

 

 

பதம் – 5

ஹரி : ஸதா வஸேத் தத்ர

யத்ர பாகவதா ஜனா :

காயந்தி பக்தி பாவேன

ஹரேர் நாமைவ கேவலம்

மொழிபெயர்ப்பு

பிரபு ஹரி நித்யமாக வசிக்குமிடமானது, எங்கென்றால் பெருமகிழ்வுடன் நித்தம் தம் புகழ்பாடும் ஆன்மீக முன்னேற்றம் அடைந்த பக்தர்களிடமே. தூய பக்தித் தொண்டின் பாவத்தில் அவர்கள் பாடுவது அனைத்தும் பகவான் ஸ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே

 

பதம் – 6

அஹோ து:கம் மஹா து:கம்

து:காத் து:காதரம் யத :

காச்சார்தம் விஷ்மிருதம் ரத்ன

ஹரேர் நாமைவ கேவலம்

மொழிபெயர்ப்பு

அஹோ ! என்ன ஒரு துக்கம் என்ன ஒரு பெருந்துக்கம் இவ்வுலகில் உள்ள அனைத்து துன்பத்திலும் மிகவும் துன்புறுத்தக் கூடியது மக்கள் தமது அறியாமையினால் சிறு கண்ணாடி துண்டுக்காக மறந்துவிட்ட இந்த ரத்தினம் அனைத்தும் பகவான் ஸ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே.

 

 

 

பதம் – 7

தீயதாம் தீயதாம் கர்ணோ

நீயதாம் நீயதாம் வச :

கீயதாம் கீயதாம் நித்யம்

ஹரேர் நாமைவ கேவலம்

மொழிபெயர்ப்பு

ஒருவருடைய காதுகளால் மீண்டும் மீண்டும் கேட்கப்பட வேண்டியதும். ஒருவருடைய குரலால் திரும்ப திரும்ப பேசப்பட வேண்டியதும் அன்புடன் அடிக்கடி பாடி பாடி மகிழ வேண்டியதும. அனைத்தும் பகவான் ஸ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே

 

பதம் – 8

த்ருணீ க்ருத்ய ஜகத் ஸர்வம்

ராஜதே ஸகலோபரி

சித் ஆனந்த மயம் சுத்தம்

ஹரேர் நாமைவ கேவலம்

மொழிபெயர்ப்பு

அகில உலகமும் ஒரு  புல்லை போன்று அற்பமானதே ஆகும். பரம புருஷருடைய ஆதிக்கத்தினால்  தான் அவை புகழப்படுகின்றன. எப்பொழுதும் நித்யமானது தெய்வீக பரவச உணர்வுடையதும் புனிதத்திலும் புனிதமானது அனைத்தும் பகவான் ஸ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...