Skip to main content

புண்டரீக வித்யாநிதி


 புண்டரீக வித்யாநிதி 


🍁🍁🍁🍁🍁🍁


புண்ட ரீக வித் யாநிதி. - பஃட,ஷா.கா, ஜானி

ஜா,ர நாம லஞா ப்ரபு, காந்தி லா ஆபனி


மொழிபெயர்ப்பு


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


புண்டரீக வித்யாநிதி மூன்றாவது மிகப்பெரிய கிளையாவார். அவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிற்கு மிகவும் பிரியமானவர், அவரது பிரிவில் சில நேரங்களில் ஸ்ரீ சைதன்யர் அழவும் செய்வார்


பொருளுரை: 


🍁🍁🍁🍁🍁🍁


கௌர கணோத், தேஷதிபிகா (54), ஸ்ரீல புண்டரீக வித்யாநிதியை கிருஷ்ண லீலையில் ஸ்ரீமதி ராதாராணியின் தந்தையாக விளக்குகின்றது. எனவே, சைதன்ய மஹாபிரபு அவரைத் தமது தந்தையைப் போன்று நடத்தினார். புண்டரீக வித்யாநிதியின் தந்தை பாணேஸ்வரர் என்று அறியப்பட்டார், மற்றோர் அபிப்பிராயத்தின்படி சுக்லாம்பர பிரம்மசாரி என்று அறியப்பட்டார், அவரது தாயாரின் பெயர் கங்காதேவி. ஓர் அபிப்பிராயத்தின்படி, பாணேஸ்வரர் ஸ்ரீ சிவராம கங்கோபாத்யாயரின் வம்சத்தில் வந்தவராவார். புண்டரீக வித்யாநிதியின் பூர்வீகம் கிழக்கு வங்காளமாகும் (தற்போது வங்காளதேசம்), டாக்காவிற்கு அருகிலுள்ள பா,கியா என்னும் கிராமத்தில் அவர் பிராமண குலத்தின் வாரேந்திர பிரிவைச் சார்ந்தவராவார். சில நேரங்களில் இந்த வாரேந்திர பிராமணர்கள் ராடிய பிராமணர்கள் என்று அழைக்கப்படும் மற்றொரு பிரிவினருடன் சர்ச்சைகளில் ஈடுபட்டனர். எனவே, புண்டரீக வித்யாநிதியின் குடும்பம் அச்சமயத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது, அவர்கள் மதிப்பிற்குரிய குடும்பமாக வாழவில்லை .


ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் தமது அனுபாஷ்ய உரையில் எழுதுகிறார், "இக்குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவர் தற்போது விருந்தாவனத்தில் வாழ்கிறார், அவரது பெயர் ஸரோஜானந்த கோஸ்வாமி இக்குடும்பத்தின் ஒரு சிறப்பம்சம் யாதெனில், இதன் ஒவ்வோர் உறுப்பினர்களும் ஒரே ஒரு மகனைக் கொண்டிருந்தனர் அல்லது மகனேயின்றி இருந்தனர்; எனவே, இக்குடும்பம் மிகவும் விரிவானதல்ல. கிழக்கு வங்காளத்தின் சட்டகிராம மாவட்டத்தில் ஹாத-ஹாஜாரி என்று அறியப்படும் இடம் ஒன்று உள்ளது, அதிலிருந்து சற்று தொலைவில் மேக,லா-கிராமம் என்று அறியப்படும் ஊர் ஒன்று உள்ளது, அங்கே புண்டரீக வித்யாநிதியின் முன்னோர்கள் வசித்தனர். மேகலா-கிராமத்திற்கு சட்டகிராமத்திலிருந்து மாட்டு வண்டி, குதிரை வண்டி அல்லது படகில் செல்லலாம் இங்குள்ள விசைப்படகு நிலையம் அன்னபூர்ணார படித்துறை என்று அறியப்படுகிறது. இப்படித்துறையிலிருந்து இரண்டு மைல் தென்மேற்கில் புண்டரீக வித்யாநிதியின் பிறப்பிடம் உள்ளது அங்கு புண்டரீக வித்யாநிதியினால் கட்டப்பட்ட கோயில் தற்போது மிகவும் பழையதாகி புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது பழுதுபார்க்காவிடில் அக்கோயில் விரைவிலேயே இடிந்துவிடும். அக்கோயிலின் கற்களில் இரண்டு கல்வெட்டுகள் பொறுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை மிகவும் பழமையாக இருப்பதால் அவற்றைப் படிக்க இயலாது. இருந்தும், இந்தக் கோயிலுக்கு இருநூறு அடி தெற்கில் மற்றொரு கோயில் உள்ளது, சிலர் அதுவே புண்டரீக வித்யாநிதியினால் கட்டப்பட்ட பழைய கோயில் என்று கூறுகின்றனர்


ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு புண்டரீக வித்யாநிதியை "தந்தை" என்று அழைப்பார், அவர் அவருக்கு "பிரேமநிதி" என்னும் பட்டத்தினையும் வழங்கினார். பிற்காலத்தில் புண்டரீக வித்யாநிதி கதாதர பண்டிதரின் ஆன்மீக குருவானார், ஸ்வரூப தாமோதரரின் நெருங்கிய தோழராகவும் இருந்தார். கதாதர பண்டிதர் முதலில் புண்டரீக வித்யாநிதியை பணத்தில் ஆர்வம் கொண்ட ஒரு சாதாரண மனிதரென தவறாகப் புரிந்து கொண்டார்.


ஆனால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவினால் திருத்தப்பட்ட பின்னர், கதாதரர் புண்டரீகரின் சீடரானார். புண்டரீக வித்யாநிதியின் வாழ்வில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில், அவர் ஜகந்நாதர் கோயிலில் உள்ள பூஜாரிகளை இழிவாக உரைத்தார். அதற்காக ஜகந்நாத பிரபு தாமே நேரடியாக அவருடைய கன்னங்களில் அறைந்து அவரைக் கண்டித்தார். இது ஸ்ரீ சைதன்ய பாகவதத்தின் அந்திய காண்டத்தின் பத்தாவது அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஹரகுமார ஸ்மிருதிதீர்த்தர், ஸ்ரீ கிருஷ்ணகிங்கர வித்யாலங்காரர் என்னும் பெயர் கொண்ட புண்டரீக வித்யாநிதியின் வம்சத்தினர் இருவர் தமது காலத்தில் வாழ்ந்து வந்ததாக ஸ்ரீ பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் குறிப்பிடுகிறார். மேலும் அதிகமான தகவல்களைப் பெறுவதற்கு வைஷ்ணவ-மஞ்ஜுஷா என்னும் தொகுப்பினை அணுக வேண்டும்



( ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / 1.10.14 )

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...