Skip to main content

பல்வேறு கோணத்தில் பல்வேறு கிருஷ்ணர்

 



கிருஷ்ணர் மதுராவிற்கு வந்து, கம்சனின் மல்லர்களுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார். இது தெரிந்த கதை. அந்த அரங்கினுள் அவர் நுழைந்தபோது, அங்கிருந்தவர்கள் அவரை எவ்வாறு கண்டனர் என்பதே தெரியாத தணுக்கு.

அரங்கின் வாயிலில் இருந்த குவலயாபீட என்ற யானையைக் கொன்று தமது சக்தியை அனைவருக்கும் வெளிப்படுத்திய கிருஷ்ணர் தமது அண்ணன் பலராமருடன் அரங்கினுள் நுழைந்தார். அத்தருணத்தில் அந்த அரங்கில் இருந்த ஒவ்வொருவரும் கிருஷ்ணருடனான தத்தமது உறவிற்கு ஏற்ப அவரைக் கண்டனர். அதாவது, ஒரே தருணத்தில் கிருஷ்ணர் அனைவருடனும் பத்து விதமான காப்பியச் சுவையை (ரஸத்தை) வெளிப்படுத்தினார்.

அங்கிருந்த மல்லர்கள் தங்களால் கிருஷ்ணருக்கு மரணம் நிகழப் போகிறது என்று செருக்குடன் இருந்த சமயத்தில், கிருஷ்ணரின் வஜ்ராயுதம் போன்ற திருமேனியைக் கண்டு கடும் சினம் கொண்டனர். அதனால் அவர்கள் அவரை இடியாகக் கண்டனர். (ரௌத்ர ரஸம்-சினஞ்சுவை)

அங்கிருந்த மக்களும் அரசர்களும் கிருஷ்ணரின் திருமேனியில் அற்புதமான அவயங்களைக் கண்டு வியப்புற்றதால், அவரை மனிதகுல மாணிக்கமாகக் கண்டனர். (அத்புத ரஸம்-வியப்புச்சுவை)

அங்கிருந்த இளம் கன்னியர்கள் கிருஷ்ணரின் பேரழகைக் கண்டு வசப்பட்டதால், அவர்கள் அவரை மன்மதனின் ஸ்வரூபமாகக் கண்டனர். (சிருங்கார ரஸம்)

அங்கிருந்த கிருஷ்ணரின் நண்பர்கள் அவரது கரத்தில் ரத்தம் தோய்ந்த யானை தந்தத்தைக் கண்டு சிரிப்பு உண்டானதால், அவர்கள் அவரை தங்களது அன்பிற்கு பாத்திரமான கோபாலனாகக் கண்டனர். (ஹாஸ்ய ரஸம்-நகைச்சுவை)

அங்கிருந்த தீய அரசர்கள் தங்களை அடக்கியாளும் ஒரு சக்தியாக கிருஷ்ணரைக் கண்டனர், அதனால் கிருஷ்ணரின் வீரத்தை உணர்ந்தனர். (வீர்ய ரஸம்-வீரச்சுவை)

பெற்றோர்களின் ஸ்தானத்தில் இருந்த பெரியோர்களின் பார்வையில் கிருஷ்ணர் ஒரு குழந்தையாகத் தோன்றினார். அதனால் அவர்கள் மல்லர்களால் கிருஷ்ணருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விடுமோ என்று அஞ்சினர். அந்த இரக்கத்தினால் கருண ரஸம் (கருணைச்சுவை) தோன்றியது.

கம்சனோ கிருஷ்ணரைத் தன்னைக் கொல்ல வந்துள்ள எமனாகக் கண்டான். அந்த பயத்தினால் அவனில் அச்சச்சுவை (பயானக ரஸம்) தோன்றியது.

அறிவற்றவர்கள் கிருஷ்ணரின் உண்மை ஸ்வரூபத்தை அறியாமல், சிறுவனைப் போலத் தோன்றும் கிருஷ்ணரில் பேராற்றல் உள்ளதே என்ற எண்ணத்தில் ஒரு அருவருப்பை வெளிப்படுத்தினர். (பிபத்ஸ ரஸம்ஶிஇழிவுச்சுவை)

யோகிகள் அவரை பரம்பொருளாகப் பார்த்தனர். (ஸாந்த ரஸம்)

விருஷ்ணி குலத்தவர்கள் கிருஷ்ணரைத் தங்களது இஷ்ட தெய்வமாக பிரேமையுடன் (அன்புடன்) கண்டனர். (பக்தி ரஸம்)

கிருஷ்ணர் அந்த மல்யுத்த அரங்கினுள் நுழைந்த சம்பவம் இத்தகு விசேஷ தன்மையுடன் விளக்கப்பட்டுள்ளது.



ஆதாரம்: ஸ்ரீமத் பாகவதம் 10.43.17. அதற்கான ஸ்ரீல ஸ்ரீதர ஸ்வாமியின் உரை.



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...