Skip to main content

கோபத்தை கையாலும் முறை

 

துருவ மன்னர் ஒர் முக்தியடைந்த ஆத்மா, ஆதலின் அவர் யாரிடத்தும் சினங்கொள்வதில்லை. ஆயினும் அவர் ஒர்நாட்டை ஆளும் மன்னராதலின் சட்டம் ஒழுங்கை காப்பதற்காக அவர் சில நேரம் ஆத்திரமடைவது அவரது கடமையாகிறது. எந்தவிதக் குற்றமும் செய்யாத அவர் சகோதரன் உத்தமன் ஓர் யக்ஷனால் கொல்லப்பட்டான். அதனால் அக்குற்றவாளியைக் கொல்வது (உயிருக்குப்பதில் உயிர்) துருவரின் கடமையாகிறது. ஏனெனில் அவர் ஓர் அரசர். போட்டி என்று வந்தவுடன் துருவ மன்னர் தீவிரமாகப் போராடி யக்ஷர்களைப் போதுமான அளவிற்குத் தண்டித்தார். ஆனால் சினமானது நாம் அதிகப்படுத்தினால் அது அளவின்றி அதிகமாகும் தன்மை உடையதாகும். துருவரின் ஆத்திரம் கரை மீறாத வண்ணம் அவர் தாத்தா மனுவினால் அன்புடன் அமைதிப்படுத்தப்பட்டார். துருவரும் தனது தாத்தாவின் எண்ணம் என்ன என்பதைப்புரிந்து கொண்டதினால் போரை உடனே நிறுத்தினார். சுலோகத்திலுள்ள "ஸ்ருதேன பூயஸா" அதாவது "தொடர்ந்து கேட்பதினால்" என்றும் சொல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாகும். பக்தித் தொண்டைப் பற்றித் தொடர்ந்து கேட்பதின் மூலம் பக்தித் தொண்டிற்குத் தீங்கிழைக்கும் ஆத்திரத்தினை அடக்குதல் கூடும். ஸ்ரீல பரீக்ஷித்து மகாராஜா, பகவானின் திருவிளையாடல் களைப் பற்றித் தொடர்ந்து கேட்பது என்னும் சஞ்சீவியானது அனைத்து நோய்களையும் நீக்கும் என்று கூறுகிறார். ஆகையினால் ஒவ்வொருவரும் முழுமுதற் கடவுளைப் பற்றித் தொடர்ந்து கேட்டல் வேண்டும். இவ்வாறு கேட்பதினால் ஒருவன் சமநிலையில் எப்போதும் இருப்பதோடு அவனது ஆன்மீக வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் எந்தவித ஊறும் நேராது.

துஷ்டர்களிடம் கோபம் கொண்ட துருவ மன்னரின் செயலானது சரியானதே. இது தொடர்பாக நாரதரின் உபதேசத்தினால் பக்தனாகிய ஒரு பாம்பின் கதை இருக்கிறது. பக்தி வாய்ந்த ஒரு பாம்பிடம், இனிமேல் யாரையும் கடிக்கக் கூடாது என்று நாரதர் கூறியிருந்தார். பாம்பின் குணம் பிற உயிரைக் கடிப்பது தான். இந்தப்பாம்பு அவ்வாறு செய்யாதிருந்தது. பாம்பின் இந்த நற்செயலைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் குறிப்பாகச் சிறுவர்கள் அதன் மீது கல் வீசித் தாக்கினார்கள். ஆனால் அது அதன் ஆன்மீகக் குருவின் கட்டளைப்படி யாரையும் கடிப்பதில்லை . சிறிது காலத்திற்குப் பின் அது தனது ஆன்மீக குருவான நாரதரைச் சந்தித்த பொழுது "நான் பிற உயிர்களைக் கடிப்பது என்னும் எனது துஷ்ட குணத்தை விட்டு விட்டேன். அதனால் கண்டபலன், ஒரு சிறுவன் என்னிடம் அச்சங்கொள்ளாது என்மீது கல் வீசித் தாக்குகிறான்" என்று புகார் செய்தது. அதற்கு நாரத முனிவர் "கடிக்கக் கூடாது என்பது உண்மைதான்; ஆனால் உனது படத்தை விரித்துக் கொண்டு கடிப்பது போல் சீறு அப்போது அவர்கள் அஞ்சி ஓடுவர்" என்று மீண்டும் அறிவுறுத்தினார். இதுபோல் ஒரு பக்தன் எப்போதும் அஹிம்சாவாதியாகவே இருத்தல் வேண்டும்; அனைத்து நற்குணங் களும் உடையவனாகவும் இருத்தல் வேண்டும். ஆயினும் பொதுவாக பிறர் தவறு செய்தால் அவர்களிடம் ஆத்திரம் கொள்ளாதிருக்கக் கூடாது. குறைந்தபட்சம் அத்துஷ்டர்களை விரட்டுவதற்காக வேனும் அந்நேரம் ஆத்திரங் கொள்ளலாம்.

( ஶ்ரீமத் பாகவதம் 4.11.31 / பொருளுரை )



மனு தன் பேரன் துருவ மஹாராஜா விற்கு செய்த உபதேசம்

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

ஸம்யச்ச ரோஷம் பத்ரம் தேப்ரதீபம் ஸ்ரேயஸாம் பரம்
ஸ்ருதேன பூயஸா ராஜன்ன் அகதேன யதாமயம்


மொழிபெயர்ப்பு


அன்பார்ந்த மன்னனே, நோய்தீர்க்கும் மருந்தாக விளங்கும் நான் சொன்ன கருத்துக்களைச் சிந்திப்பாயாக. சினம் ஒழி, ஆன்மீக உணர்வுப் பாதையில் முன்னேற விடாதுதடுக்கும் மோசமான எதிரி இச்சினமேயாகும். உனக்கு அனைத்துச் சிறப்புகளும் உண்டாவதாக.எனது அறிவுரைகளைப் பின்பற்றுவாயாக.


ஶ்ரீமத் பாகவதம் 4.11.31






🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...