Skip to main content

ஸ்ரீ சைதன்யர் சிறுவனாகப் புரிந்த லீலைகளில் சில

 


ஶ்ரீ கிருஷ்ண சைதன்யரின் லீலைகள்
வழங்கியவர் :- தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

பாகம் 3
சிறுவனாகப் புரிந்த லீலைகளில் சில

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலப்போக்கில் நிமாய்க்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியை நடத்திய ஜகந்நாத மிஸ்ரர், அவரை கங்காதாஸ பண்டிதரின் பள்ளிக்கு அனுப்பினார். நியாயம், இலக்கணம் மற்றும் தத்துவத்தில் விரைவாகப் புலமை பெற்று, சிறந்த பண்டிதர் என்று நிமாய் விரைவில் புகழ் பெற்றார். எனினும், அச்சமயத்தில் நிகழ்ந்த தமது தந்தையின் திடீர் மறைவினால் ஆழ்ந்த துக்கத்தை அனுபவித்தார். அதன் பிறகு, அவரது குறும்புத்தனமான நடத்தைகள் தணிந்தன. சமஸ்கிருதம் கற்றுக் கொடுப்பதற்காக ஒரு பள்ளியைத் திறந்தார்; அப்பள்ளி மாணவர்கள் உயர் நியமங்களுடன் இருக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்.

ஒருமுறை நிமாய் ஒரு ஜோதிடரைக் காண நேர்ந்தபோது, தமது முற்பிறவி வாழ்வைப் பற்றிய விவரங்களைக் கூறுமாறு வினவினார். ஜாதகத்தைக் கணக்கிட்ட ஜோதிடர், தமது தியானத்தின் மூலம், இந்த அழகிய இளம் பிராமணர் அனைத்து பிரபஞ்சங்களுக்கும் மூலமான பூரண சத்தியம் என்பதைக் கண்டார். திகைப்புற்ற அவர், நீர் புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள், அனைவரையும் கட்டுப்படுத்தக்கூடிய எஜமானர்,” என்று பயபக்தியுடன் மொழிந்தார். நிமாயோ, நீங்கள் நல்ல ஜோதிடர் அல்ல. எனக்குத் தெரியவந்தது யாதெனில் எனது முந்தைய வாழ்வில் நான் ஓர் இடையர் குலச் சிறுவனாக இருந்தேன்,” என்று பதிலளித்தார்

கிழக்கு வங்காளப் பயணம்
🍁🍁🍁🍁🍁🍁🍁

லக்ஷ்மிபிரியா என்னும் பெண்ணை நிமாய் திருமணம் செய்து கொண்டார். சீரிய மனைவியாகத் திகழ்ந்த லக்ஷ்மிபிரியா குடும்பப் பொறுப்புக்களை விசுவாசத்துடன் செயலாற்றினாள். தாய் ஸச்சியிடம் எப்போதும் மரியாதையுடன் நடந்து கொண்டாள். தன்னைக் கணவனுக்கு அர்ப்பணித்த லக்ஷ்மிபிரியா, தமது எஜமானருக்காகத் தளிகை செய்து அவரது விருந்தினர்களுக்கும் மகிழ்ச்சியுடன் பரிமாறுவாள்.

ஆசிரியர் தொழிலின் மூலம் தமது குடும்பத்திற்குச் சிறிது வருமானம் ஈட்டுவதென்னும் வெளிக்காரணத்துடன் நிமாய் கிழக்கு வங்காளத்திற்குச் செல்ல முடிவு செய்தார். அங்கு திருநாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதே அவருடைய உண்மையான குறிக்கோளாகும். கிழக்கு வங்காளத்தில் அவர் வசித்த குறுகிய காலகட்டத்தில், அங்கே அவரைக் காண பலரும் வருவர். ஜொலிக்கின்ற அவரது பொன்னிற மேனியைக் கண்டும் அவரது அருமையான சாஸ்திர வியாக்கியானங்களைக் கேட்டும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தபன மிஸ்ரர் என்ற ஒரு பிராமணர் கிழக்கு வங்காளத்தில் வசித்து வந்தார். வாழ்வின் பொருளையும் அதை எவ்வாறு அடைவது என்பதையும் அறியும் ஆவலுடன் தபன மிஸ்ரர் பல புத்தகங்களைப் படிப்பது வழக்கம். ஆனால் அவர் அதிகம் படிக்கப் படிக்க அதிக குழப்பமுடையவரானார். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய தெய்வீக நபர், மிஸ்ரரே, நீங்கள் ஏன் பல்வேறு புத்தகங்களைப் படித்துக் கொண்டுள்ளீர்? நிமாய் பண்டிதர் அருகில் உள்ளார். அவரை அணுகுங்கள்,” என்று வழிகாட்டினார். மறுநாள் காலை நிமாயை அணுகிய தபன மிஸ்ரர் தமது நிலையை எடுத்துரைத்தார்.

புத்தகப் புழுவாக மாறுவதால் வாழ்வின் பொருளைக் கண்டறிய இயலாது என்றும், இக்கலி யுகத்தில் பகவானின் திருநாமத்தை உச்சாடனம் செய்வதே போதுமானது என்றும் நிமாய் விளக்கினார். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே, என்னும் மஹா மந்திரத்தை உச்சரிக்கும்படி தபன மிஸ்ரரை நிமாய் அறிவுறுத்தினார்.

நிமாய் கிழக்கு வங்காளத்தில் இருந்தபோது, அவரது பிரிவினால் லக்ஷ்மிபிரியாவிற்கு ஏற்பட்ட ஆழ்ந்த உணர்வுகள், ஒரு பாம்பின் ரூபத்தை எடுத்து அவளைக் கடித்து, அவளது வாழ்வை எடுத்துக் கொண்டது. குவித்து வைத்த பெரும் செல்வத்துடன் நவத்வீபத்திற்கு நிமாய் திரும்பினார்; தாயை சமாதானப்படுத்தி, அவளின் வேண்டுகோளுக்கிணங்கி விஷ்ணுபிரியா என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

நாளை . .

கேசவ காஷ்மீரியைத் தோற்கடித்தல்

தொடரும் . . .

( "இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com")

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...