Skip to main content

ஸ்ரீ சைதன்யரின் பிறப்பு, மற்றும் குழந்தையாகப் புரிந்த லீலைகளில் சில



ஶ்ரீ கிருஷ்ண சைதன்யரின் லீலைகள்

வழங்கியவர் :- தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கொடிகட்டி பறந்த தருணம்; இஸ்லாமிய பிரச்சார அழுத்தம், தவறாக ஊக்குவிக்கப்பட்ட இந்து உயர் ஜாதியினரின் கொடுமை முதலிய சமூக சூழ்நிலைக்கு மத்தியில், பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு மக்களிடையே பக்தி உணர்வை போதிப்பதற்காக அவதரித்தார்.

ஸ்ரீ சைதன்யரின் பிறப்பு
🍁🍁🍁🍁🍁🍁🍁

வங்காளத்தின் கங்கைக் கரையில் அமைந்திருந்த நவத்வீபம் என்ற ஊரில், வைஷ்ணவ சமூகத்திற்குத் தலைவராகத் திகழ்ந்த ஸ்ரீ அத்வைத ஆச்சாரியர் பகவான் கிருஷ்ணர் இவ்வுலகில் மீண்டும் தோன்றி கலி யுக மக்களை விடுவிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காக அவர் துளசியையும் கங்கை நீரையும் கொண்டு பகவான் கிருஷ்ணரை வழிபட்டார். அச்சமயத்தில் நவத்வீபத்தின் மாயாபுரில் ஜகந்நாத மிஸ்ரர், ஸச்சி தேவி என்ற பிராமண தம்பதியர் பக்தியுடன் வாழ்ந்து வந்தனர். அத்வைத ஆச்சாரியரின் பிரார்த்தனையின் பலனாக பகவான் கிருஷ்ணர் ஸச்சி தேவியின் கருப்பையில் பிரவேசித்தார். அவளது கருவுற்ற தன்மை பதிமூன்று மாதங்கள் நீடித்தது.
அதன்படி, புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர், 1407 ஷகாப்த வருடம் (கி.பி. 1486, பிப்ரவரி 18) பால்குன மாதத்தின் பௌர்ணமி நாளன்று மாயாபுரில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றினார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பூரண சந்திர கிரகணத்தின்போது தோன்றினார். நவத்வீப இந்துக்கள் கிரகணத்தின்போது கங்கை நதியில் நின்று ஹரி நாமத்தை உச்சரிப்பது வழக்கம், அன்றைய தினத்திலும் அவர்கள் ஹரி நாமத்தை பலமாக உரைத்தனர். அவர்கள் அவ்வாறு ஹரி! ஹரி!” என்று உச்சரிப்பதைக் கேட்ட முஸ்லீம்கள் பலரும், விளையாட்டாக அவர்களைப் போல் பரிகாசம் செய்தனர். நவத்வீபம் முழுவதும் ஸ்ரீ ஹரியின் நாமம் ஒலித்துக் கொண்டிருந்த சமயத்தில், கௌரஹரி எனப்படும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தோன்றினார்.
பெயர் சூட்டுதல்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
புதிதாகப் பிறந்த குழந்தையைக் காண வந்த அத்வைத ஆச்சாரியரின் மனைவி ஸ்ரீமதி சீதாதேவி, இந்த அழகிய பொன்னிறக் குழந்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு உரிய அங்க இலட்சணங்களைக் கொண்டுள்ளார் என்றும், உண்மையில் கிருஷ்ணர்தான் வேறு மேனி நிறத்துடன் உள்ளார் என்றும் உறுதியாகக் கண்டு கொண்டாள். குழந்தை வேப்ப மரத்தடியில் பிறந்த காரணத்தாலும், ஸச்சிமாதாவின் பிற குழந்தைகள் பெரும்பாலும் அகால மரணமடைந்த காரணத்தாலும், வேப்ப மரம் தீய ஆவிகளின் தாக்கத்தை (வெளிப்புற ரீதியில்) எதிர்ப்பதில் திறனுடையது என்று அறியப்பட்டிருந்ததாலும், சீதாதேவி, குழந்தையைப் பாதுகாக்கும் பொருட்டு, நிமாய்” என்று பெயரிட்டாள்.
பகவான் சைதன்யரின் தாய்வழித் தாத்தாவான நீலாம்பர சக்ரவர்த்தி கற்றறிந்த ஜோதிடராவார். தமது பேரனின் ஜாதகக் குறிப்புகளை அமைக்கும்பொழுது, இக்குழந்தை சாக்ஷாத் புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் என்பதை அவர் கண்டறிந்தார்; இருப்பினும், அந்த இரகசியமான உண்மையினை மறைமுகமாக வைத்தார். குழந்தைக்கு அவர் விஸ்வம்பரர் (உலகங்களை இரட்சிப்பவர்) என்று பெயரிட்டார், நிமாய் என்பது இரண்டாவது பெயராகத் தொடர்ந்தது.

குழந்தையாகப் புரிந்த லீலைகளில் சில
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

குழந்தை நிமாயை அளவின்றி நேசித்த அண்டை வீட்டுப் பெண்கள் அவரைக் காண அடிக்கடி வருவர். அவர்களிடம் நிமாய் விளையாடும் விளையாட்டு என்னவெனில், அழுகை: அவர் அழத் தொடங்குவார், பெண்கள் ஹரி! ஹரி!” என்று பாடினால் மட்டுமே தமது அழுகையை நிறுத்துவார். இவ்வாறாக இவர் தமது அண்டைவீட்டினர் அனைவரையும் நாள் முழுவதும் பாடச் சொல்லித் தூண்டியதால், கிருஷ்ணரின் திருநாமம் ஜகந்நாத மிஸ்ரரின் வீட்டில் இடையறாது எதிரொலித்துக் கொண்டிருந்தது.
ஒருநாள், நிமாய் ஒரு பெரிய பாம்புடன் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட ஸச்சிமாதாவும் ஜகந்நாத மிஸ்ரரும் திகைப்புற்றனர். அவர்களுக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. ஆனால் சற்று நேரத்தில், அப்பாம்பு பகவானின் சரீரத்தைச் சுற்றி ஊர்ந்து, தீங்கின்றி நழுவிச் சென்றது. உண்மையில் பகவான் விஷ்ணுவின் படுக்கையான அனந்த தேவரே அப்பாம்பின் வடிவில் வந்திருந்தார்.
ஒரு முறை நிமாய் இருந்த பகுதியில் இரண்டு திருடர்கள் நுழைந்தனர். குழந்தைகளைக் கடத்தி அவர்களிடமிருந்து நகைகளைத் திருடுவது இவர்களின் தொழில். நிமாயைக் கண்ட இத்திருடர்கள், அவரைத் தூக்கிக் கொண்டு ஓடினர். தமது அன்பிற்குரிய நிமாயைக் காண இயலாததால் மிகுந்த கலக்கமுற்ற ஸச்சிதேவி, குழந்தையைத் தேடு வதற்காக அண்டை வீட்டிலுள்ளோரை அழைத்தாள். இதற்கிடையில் இறைவனின் மாயைச் சக்தியின் தாக்கத்தினால் குழப்பமுற்ற வஞ்சகர்கள், ஒரு முழு வட்டமடித்து மீண்டும் ஜகந்நாத மிஸ்ரரின் வீட்டிற்கே வந்து சேர்ந்தனர். மக்கள் பலர் குழந்தையைத் தேடுவதைக் கண்டு, உடனே நிமாயை வேகமாக கீழே இறக்கிவிட்டு அவர்கள் தப்பி ஓடினர்.
ஒருமுறை நிமாய் மண் சாப்பிடுவதைக் கண்ட அவரது தாய், நான் இப்போதுதானே உனக்கு அருமையான இனிப்புகளைக் கொடுத்தேன், ஏன் மண் சாப்பிடுகிறாய்?” என்று வினவினாள். என்ன வித்தியாசம்? இவையனைத்தும் ஒன்றே. இனிப்புகள் பூமியிலிருந்தே உருவாக்கப்படுவதால், நான் இனிப்பைச் சாப்பிட்டாலும் மண்ணைச் சாப்பிட்டாலும் இரண்டும் ஒன்றே,” என்று நிமாய் பதிலளித்தார். ஸச்சிமாதா ஒரு கற்றறிந்த வைஷ்ணவ பிராமணரின் மனைவி என்ற காரணத்தினால், நிமாய் தவறான கொள்கையான பூரண அருவவாதத்தை (அத்வைத வாதத்தை) விவரிக்கின்றார் என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. ஸச்சிமாதா உதாரணம் கொடுத்தாள்: மண் பானையானது நிலத்தின் ஒருவகை மாற்றமே என்றாலும், வெறும் களிமண் கட்டியை பானையைப் போன்று உபயோகிக்க இயலாது. நிலம் பானையாக மாற்றமடைந்த பின்னரே அதில் நீரைத் தேக்கி வைக்க இயலும். அதுபோலவே இனிப்புகள் பூமியிலிருந்து தயாரிக்கப்பட்டாலும் பண்படாத மண்ணானது இனிப்புகளைப் போல உடலுக்கு சக்தியளிக்க இயலாது.” நடைமுறைக்கு ஒவ்வாத அருவவாதத்தின் தன்மையை ஒப்புக்கொண்ட விஸ்வம்பரர், இனிமேல் எனக்கு இனிப்புகளைக் கொடுக்கவும், ஒருபோதும் மண் சாப்பிட மாட்டேன்,” என்று முன்மொழிந்தார்.
தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்த பிராமணர் ஒருவர் நவத்வீபத்திற்கு வந்தபொழுது, ஜகந்நாத மிஸ்ரர் அவரை வரவேற்று, அவரது சாலக்ராம சிலாவிற்கு சமைப்பதற்காக, அரிசி மற்றும் இதரப் பொருட்களை அளித்தார். அப்பிராமணரும் உணவு தயாரித்து நைவேத்தியம் செய்தார். உடனே அங்கு வந்த நிமாய் சிறிது சாதத்தை உட்கொண்டார். அவர் மீண்டும் சமைக்க, நிமாய் மீண்டும் உண்ண என மூன்று முறை அவரது நைவேத்தியம் தடைபட்டது. அதனால், பிராமணர் கண்ணீரில் மூழ்கினார். அப்போது நிமாய் அவரிடம் உரைத்தார், யாருக்காக நீ தினமும் நைவேத்தியங்களைத் தயாரிக்கின்றாயோ, அந்த பகவான் விஷ்ணு நானே என்பது உனக்குத் தெரியவில்லையா?” அதனைத் தொடர்ந்து, நிமாய் நான்கு கரங்களுடைய தமது விஷ்ணு ரூபத்தை அப்பிராமணருக்குக் காண்பித்தார். தன்னைத் தொந்தரவு செய்த குழந்தை தனது அன்பிற்குரிய இறைவனே என்பதை உணர்ந்து கொண்ட அப்பிராமணர் தெய்வீகப் பேரானந்தத்தினால் மூர்ச்சையடைந்தார்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

நாளை
சிறுவனாகப் புரிந்த லீலைகளில் சில
தொடரும் . . .

( "இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com")

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...