Skip to main content

ஆன்மீக உலகமே தனது நித்யமான வாசஸ்தலம் என்று அறியாத கட்டுண்ட ஜீவராசிகள்.

 


பொதுவாக மக்கள் வீடுபேறு பெற்று முழுமுதற்கடவுளை அடைவது என்னும் தங்கள் வாழ்க்கை நலனை அறியாதிருக்கின்றனர். ஆன்மீக உலகிலுள்ள தங்கள் உண்மை வீட்டினைப்பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆன்மீக உலகில் பல வைகுண்ட லோகங்கள் உள்ளன. அவற்றுள் மிகச் சிறந்ததாக இருப்பது கிருஷ்ண லோகம் எனப்படும் கோலோக பிருந்தாவனமேயாகும். சமுதாயத்தின் முன்னேற்றம் அபரிதமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டாலும் இங்கு ஆன்மீக உலகிலுள்ள வைகுண்ட லோகத்தைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. இன்றைய தினம் நாகரீகத்தில் முன்னேறியிருப்பதாகச் சொல்லும் மனிதர்கள் பிறஉலகங்களுக்குச் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குத் தாங்கள் இருப்பதிலேயே மிகவும் உயர்ந்த உலகமான பிரம்ம லோகத்திற்குச் சென்றாலும் கூட மீண்டும் இப்பூமிக்கு திரும்பி வேண்டியதிருக்கும் என்பது பற்றி ஒன்றும் தெரியாது. இதனை பகவத்கீதை (8.16) உறுதி செய்கின்றது:


ஆப்ரஹ்ம-புவனால் லோகா:

புனர் ஆவர்தினோ (அ)ர்ஜுன

மாம் உபேத்ய து கௌந்தேய

புனர் ஜன்ம ந வித்யதே


“குந்தியின் மகனே! உலகில் உயர்ந்த தேவலோகத்திலிருந்து தாழ்ந்தபாதாள லோகம் வரை உள்ள எல்லா லோகங்களும் பிறப்பு இறப்புக்குரிய இடங்களேயாகும். ஆனால் எனது இடத்தையடைந்தவன், மீண்டும் பிறப்பதில்லை”.


இப்பிரபஞ்சத்திலுள்ள உயர்ந்த உலகத்திற்கு ஒருவன் போனால் கூட அவனது புண்ணியச் செயல்கள் தீர்ந்தவுடன் மீண்டும் இங்கே வந்துவிடுகிறான். விண்கலங்கள் வானில் உயரே உயரே பறந்தாலும் எரிபொருள் தீர்ந்தவுடன் மீண்டும் பூமிக்குத் தரை இறங்க வேண்டியதிருக்கிறது. இச்செயல்கள் அனைத்தும் மாயையில் செய்யப்படுகின்றன. இப்பொழுது உண்மையான முயற்சியாக இருக்க வேண்டியது வீடுபேறு பெற்று முழுமுதற்கடவுளை அடைவதற்குரியதாகவே இருத்தல் வேண்டும். இச்செயல்முறை பகவத்கீதையில் “யாந்தி மத் யாஜினோ (அ)பி மாம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. முழுமுதற்கடவுளின் பக்தித்தொண்டில் ஈடுபட்டிருப்பவனே வீடுபேறு பெற்று முழுமுதற்கடவுளையடைகிறான். மனித வாழ்க்கை கிடைத்தற்கரியதாகும். இதனைப் பிறஉலகங்களைத் தேடிப் பயணம் செல்வது போன்ற வீண்வேலைகளில் கழிக்கவேண்டாம். முழுமுதற்கடவுளிடம் திரும்பிச் செல்வதற்கான புத்தியுடையவனாக ஒருவன் இருத்தல் வேண்டும். ஆன்மீக வைகுண்ட லோகங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஒருவன் ஆர்வமுடையவனாக இருத்தல் வேண்டும். அதிலும் குறிப்பாகக் கோலோக பிருந்தாவனம் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டவேண்டும். அதன்பிறகு அங்கு செல்வதற்குரிய எளிமையான முறையாகவும், கேட்பதில் தொடங்கும் (ஷ்ரவணம்கீர்தனம் விஷ்ணோ:) பக்தித் தொண்டுக் கலையினைக் கற்றல்வேண்டும் இதுவும் கூட ஸ்ரீமத் பாகவதத்தில் (12.3.51) உறுதி செய்யப்பட்டிருக்கிறது.


கலேர் தோஷ-நிதே ராஜன்ன

அஸ்தி ஹி ஏகோ மஹான் குண:

கீர்தனாத் ஏவ க்ருஷ்ணஸ்ய

முக்த-ஸங்க: பரம் வ்ரஜேத்


பரலோகத்திற்கு (பரம்வ்ரஜேத்) ஒருவன் ஹரே கிருஷ்ண மந்திரத்தினை ஓதுவதன் மூலம் எளிதில் செல்ல முடியும். இக்கால மக்களுக்குரிய எளிய வழி இதுவேயாகும் (கலேர் தோஷ நிதே) ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஓதுவதின்மூலம் ஒருவன் அனைத்து உலகியல் மாசுக்களிலிருந்தும் தூய்மையடைந்து வீடுபேறு பெற்று முழுமுதற்கடவுளை அடையமுடியும் என்பது இக்காலத்திற்கான சிறந்தவரமாகும். இதில் எந்த விதமான ஐயத்திற்கும் இடமில்லை.


(ஸ்ரீமத்-பாகவதம் 4.29.48  / பொருளுரை )



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆





ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

ஹரே கிருஷ்ண🙏

🍁🍁🍁🍁🍁🍁🍁


மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

Telegram

🍁🍁🍁🍁🍁

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


ஆன்மீக கதைகளை படிக்க 👇


Whatsapp :- 

🍁🍁🍁🍁🍁


உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏


Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...