Skip to main content

கிருஷ்ண பக்தி இயக்கம் ஏன் கிருஷ்ண வழிபாட்டினை மட்டும் பரிந்துரைக்கிறது

 


சில நேரங்களில் இக்கிருஷ்ண பக்தி இயக்கம் பிற தேவ வழிபாட்டினை விலக்கி விட்டு கிருஷ்ண வழிபாட்டினை மட்டும் ஏன் பரிந்துரைக்கிறது என்று சிலர் கேட்கின்றனர். உரிய பதில் இச்சுலோகத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மரத்தில் அடிவேரில் நீர் வார்ப்பது பற்றிக் கொடுக்கப்பட்டிருக்கும் சான்று மிகவும் பொருத்தமுடையதாகும். பகவத் கீதையில்(15.1) “ஊர்த்வ மூலம் அத: ஸாகம்அதாவது இப்பிரபஞ்சம் கீழ்நோக்கி விரிவடைந்திருக்கிறது. அதன் வேராக மேலேயுள்ள முழுமுதற் கடவுள் விளங்குகிறார் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் பகவான் பகவத் கீதையில் (10.8) உறுதி செய்கிறார்,” அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ:” என்று. இதன் பொருள்நானே அனைத்து ஆன்மீக மற்றும் பரு உலகங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்றேன்என்பதாகும். கிருஷ்ணரே அனைத்திற்கும் ஆணி வேராக இருக்கின்றார்; அதனால் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வது (கிருஷ்ண ஸேவா) என்பதற்குப் பொருள் அனைத்துத் தேவர்களுக்கும் தாமாகவே தொண்டு செய்து போன்றதாகும். சில நேரம் கர்மம் மற்றும் ஞானத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றப் பக்தியின் கலவை தேவைப்படுகிறது என்று விவாதம் செய்யப்படுகிறது. அதுபோல் சில நேரம் பக்திக்கும் கூட அது இறுதியில் வெற்றி பெற கர்மமும் ஞானமும் தேவைப்படுகிறது என்றும் கூறுவர். கர்மமும், ஞானமும் பக்தியின்றி வெற்றியடைய முடியாது என்பதே உண்மை. ஆனால் பக்திக்கு கர்மம் மற்றும் ஞானத்தில் உதவி தேவைப்படுவதில்லை. உண்மையில் ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் கூற்றின்படிஅன்யாபிலாஷிதா ஸூன்யம் ஜ்ஞான கர்மாதி அநாங்ருதம்”: பக்தித் தொண்டு கர்மம் மற்றும் ஞானத்தின் தொடர்பினால் தூய்மை கெடக் கூடாது; நவீன சமுதாயம் பல்வேறு வகையான சமுதாய நலப்பணிகள் மற்றும் மனிதாபிமானச் சேவை போன்றவற்றில் ஈடுபடுகிறது. ஆனால் முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணர் இவற்றிற்கு நடுநாயகராக கொண்டு வரப்படாவிட்டால் இச்செயல்கள் ஒரு நா ளும் வெற்றி பெறப் போவதில்லை என்பதை மக்கள் அறிவதில்லை. கிருஷ்ணரை வழிபடுவதற்கும் அவரது பாகங்களான பல்வேறு தேவர்களை வழிபடுவதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்று ஒருவன் கேட்கலாம். இதற்கான பதிலும் இச்சுலோகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் கூறிக் கொள்ள வேண்டியது வயிற்றுக்குச் சோறிடும்பொழுதுஇந்திரியங்கள்அதாவது புலன்கள் அனைத்தும் தாமாகவே திருப்தியுறுகின்றன. ஒருவன் தன் கண்களுக்கு அல்லது காதுகளுக்குத் தனியாக உணவளிக்க முயன்றால் முடிவு பேரழிவாகும். வயிற்றுக்கு உணவிடுவதின் மூலம் நாம் மற்ற எல்லாப் புலன்களையும் திருப்திப்படுத்துகிறோம். ஒவ்வொரு புலனுக்கும் தனித்தனியே சேவை செய்வது செய்யத்தக்கதுமல்ல, தேவையற்றதுமாகும். இதன் முடிவு என்னவென்றால் கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வதின் மூலம் (க்ருஷ்ண ஸேவயா) எல்லாம் நிறைவு பெறுகின்றன. “சைதன்ய சரிதாம்ருதத்தில் (மத்ய 22.62) “க்ருஷ்ணே பக்தி கைலே ஸர்வ கர்ம க்ருத ஹய:” அதாவது ஒருவன் முழுமுதற் கடவுளான பகவானுக்குத் தொண்டு செய்யும் பொழுது எல்லாம் தாமே நிறைவடைகின்றன; என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.


(ஸ்ரீமத்-பாகவதம் 4.31.14  / பொருளுரை )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே


ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram


🍁🍁🍁🍁🍁


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


https://t.me/suddhabhaktitamil


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/udvegakathaigal


Whatsapp :- 


🍁🍁🍁🍁🍁


https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR


உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏




Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...