Skip to main content

பாகவத-தர்மத்தில், “உன் நம்பிக்கை”, “என் நம்பிக்கை” என்ற கேள்விக்கே இடமில்லை. அனைவரும் பரமபுருஷரில் நம்பிக்கைக் கொண்டு அவரது உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும்.

 


பாகவத-தர்மத்தில் எந்த முரண்பாடும் இல்லை. “உன் மதம்”, “என் மதம்” என்ற வாசனைகூட பாகவத-தர்மத்தில் இல்லை. ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று பகவத்கீதை கூறுவதுபோல், பாகவத தர்மம் என்பது பரமபுருஷராகிய பகவானால் கொடுக்கப்பட்ட உத்தரவுகளைப் பின்பற்றுவதாகும். கடவுள் ஒருவரே. அவர் அனைவருக்கும் உரியவர். ஆகவே அனைவரும் கடவுளிடம் சரணடைய வேண்டும். அதுவே சமயம் என்பதன் உண்மையான கருத்தாகும். எதைக் கடவுள் கட்டளையிடுகிறாரோ அதுவே தர்மம் எனப்படும் (தர்மம் து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம்). பாகவத-தர்மத்தில், “உன் நம்பிக்கை”, “என் நம்பிக்கை” என்ற கேள்விக்கே இடமில்லை. அனைவரும் பரமபுருஷரில் நம்பிக்கைக் கொண்டு அவரது உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும். ஆனுகூல்யேன க்ருஷ்ணானுசீலனம்: எதையெல்லாம் கிருஷ்ணர் கூறுகிறாரோ, எதையெல்லாம் கடவுள் கூறுகிறாரோ-அதையெல்லாம் நேரடியாக நிறைவேற்ற வேண்டும். அதுவே தர்மம் (மதம்) எனப்படும்.


ஒருவன் உண்மையில் கிருஷ்ண உணர்வினனாக இருப்பின், அவனுக்கு எதிரிகள் இருக்க முடியாது. கிருஷ்ணரிடம், அல்லது கடவுளிடம் சரணடையும்படி மற்றவர்களைத் தூண்டுவதுதான் அவரது ஒரே ஈடுபாடு என்பதால், அவருக்கு எவ்வாறு எதிரிகள் இருக்க முடியும்? ஒருவன் இந்து மதத்தையோ, முஸ்லிம் மதத்தையோ, கிருஸ்துவ மதத்தையோ, இந்து மதத்தையோ அல்லது அந்த மதத்தையோ பரிந்து பேசுவனாயின் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கடவுளைப் பற்றிய தெளிவான கருத்தில்லாத சமய முறைகளைப் பின்பற்றுபவர்களுக்கிடையில் சண்டைகள் நிகழ்ந்துள்ளதை சரித்திரம் காட்டுகிறது. மனித வரலாற்றில் இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. ஆனால் பரமனுக்குச் சேவை செய்வதில் மனதைக் குவிக்காத சமய முறைகள் தற்காலிகமானவையாகும். அவற்றில் பொறாமை நிறைந்திருப்பதால் அவற்றினால் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க முடியாது. எனவே, “என் நம்பிக்கை”, “உன் நம்பிக்கை” என்ற எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும். அனைவரும் கடவுளிடம் நம்பிக்கைக் கொண்டு அவரிடம் சரணடைய வேண்டும். அதுவே பாகவத-தர்மமாகும்.


ஶ்ரீமத் பாகவதம் 6.16.41 / பொருளுரை



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...