Skip to main content

பக்தி தொண்டின் மகிமை

 



பரம புருஷ பகவான், மிகவும் தூய்மையானவரும், மேலானவரும், பரம சக்தியமுமாவார் என்று பகவத் கீதை கூறுகிறது. அவரிடத்தில் அணுவளவு பௌதிகத் தன்மையும் இல்லை. இதனால் மிகச்சிறிய பௌதிக பற்று உள்ளவரும்கூட அவரை அணுக முடியாது. குறைந்தது ரஜோ மற்றும் தமோ குணங்களில் இருந்தாவது ஒருவர் விடுபட்டிருக்க வேண்டும். அந்த நிலையில்தான் பக்தித் தொண்டின் ஆரம்பமே துவங்குகிறது. காமத்திலிருந்தும், பேராசையிலிருந்தும் விடுபட்டிருப்பதே ரஜோ மற்றும் தமோ குணங்களில் இருந்து ஒருவர் விடுபட்டிருப்பதற்கான அறிகுறியாகும். அதாவது, புலனின்ப ஆசைகளிலிருந்தும், புலனுகர்வுக்கான பேராசைகளில் இருந்தும் ஒருவர் விடுபட்டிருக்க வேண்டும். சமநிலையிலுள்ள இயற்கைக் குணம் சத்வகுணமாகும். எல்லா பௌதிக களங்கங்களில் இருந்தும் விடுபட்டிருப்பதென்பது, சத்வகுணத்திலிருந்தும் விடுபட்டிருப்பதாகும். தனிமையாக ஒரு காட்டில் பகவானின் தரிசனத்தை தேடுவதென்பது சத்வகுணத்திலுள்ள ஒரு செயலாகும். ஆன்மீக பூரணத்துவத்தை அடைய ஒருவர் காட்டிற்குப் போகக்கூடும். இதனால் அவர் பகவானை அங்கு நேரடியாகக் காண முடியும் என்பது பொருளல்ல. ஒருவர் எல்லா பௌதிகப் பற்றுகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்டு, தெய்வீகமான படியில் நிலைபெற்றிருக்க வேண்டும். இந்நிலை மட்டுமே பரம புருஷ பகவானுடன் பக்தன் நேரடியாக தொடர்புகொள்ள உதவும். பகவானின் உன்னதமான வடிவம் வழிபாடு செய்யப்படும் இடத்தில் வசிப்பதுதான் இதற்கு மிகச்சிறந்த வழியாகும். பகவானின் ஆலயம் ஒரு தெய்வீகமான இடமாகும். ஆனால் காடோ பௌதிக வாழ்வுக்கேற்ற நற்குணம் பொருந்திய ஓரிடமாகும். புதிய பக்தனொருவன், காட்டிற்குச் சென்று பகவானைத் தேடியலைவதைவிட, பகவானின் விக்கிரக வழிபாட்டில் எப்பொழுதும் ஈடுபட வேண்டுமென்று சிபாரிசு செய்யப்படுகிறது. ஸ்ரீ நாரதரின் தற்போதைய வாழ்வு எல்லா பௌதிக ஆசைகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்டதாகும். இந்நிலையில், ஒவ்வொரு இடத்திற்கும் செல்வதாலேயே அந்த இடத்தை நாரதரால் வைகுண்டமாக மாற்றிவிட முடியும் என்றாலும், அவர் காட்டிற்குச் செல்வதில்லை. மக்கள், தேவர்கள், கின்னரர்கள், கந்தர்வர்கள், ரிஷிகள், முனிவர்கள் முதலான மற்றெல்லோரையும் பகவானின் பக்தர்களாக மாற்றுவதற்காக அவர் ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்திற்கு பிரயாணம் செய்கிறார். அவரது இத்தகைய செயல்களால், பிரகலாத மகாராஜனையும், துருவ மகாராஜனையும் போன்ற பலரை அவர் பகவானின் உன்னத அன்புத் தொண்டில் ஈடுபடுத்தி இருக்கிறார். ஆகவே, பகவானின் தூய பக்தரொருவர், நாரதரையும், மற்றும் பிரகலாதனையும் போன்ற சிறந்த பக்தர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ‘கீர்த்தனம்என்ற முறையினால் பகவானை போற்றிப் புகழ்வதற்காக தனது முழு நேரத்தையும் ஈடுபடுத்தி விடுகிறார். இத்தகைய பிரசார முறை எல்லா பௌதிக குணங்களுக்கும் மேற்பட்டதாகும்.


ஶ்ரீமத் பாகவதம் 1.6.21 / பொருளுரை

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...