Skip to main content

தாய்க்கு இயற்கையாகவே குழந்தை மீது பற்று இருப்பது போல, இறைவன் ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் எப்போதும் அளவுகடந்தபாசம் கொண்டவர் ஆவார்

 


அளவற்ற அறிவு மற்றும் முடிவற்ற ஆனந்தம் ஆகியவற்றைக் கொண்ட நித்திய வாழ்வின் உண்மையான இன்பத்தை நம்மில் ஒவ்வொருவரும் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சாராம்சத்தைப் பற்றிய அறிவற்ற மூடர்கள் நிஜ வாழ்வை மாயையில் தேடி அலைகின்றனர். இந்த ஜட உடல் நித்தியமாக நீடித்திருக்காது. மேலும் மனைவி, மக்கள், சமூகம் மற்றும் தேசம் போன்ற இந்த நிரந்தரமற்ற உடலோடு சம்பந்தம் உள்ளவை அனைத்தும் உடல் மாற்றமடையும் பொழுது மாறிவிடுகின்றன. இது பிறப்பு, இறப்பு மூப்பு மற்றும் நோய் ஆகியவற்றின் தொடர்ச்சி அல்லது சம்சாரம் என்றழைக்கப்படுகிறது. வாழ்வின் இப்பிரச்சினைகளுக்கு எல்லாம் ஒரு விடையைக் கண்டுபிடிக்க நாம் விரும்புகிறோம். ஆனால் அதற்குரிய வழி நமக்குத் தெரியவில்லை. வாழ்வின் இத்துன்பங்களாகிய பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய் ஆகியவற்றின் தொடர்ச்சியை ஒரு முடிவுக்கு கொண்டுவர விருப்பமுள்ள எவரும், பிறரை அல்லாது பரமபுருஷரை வழிபடும் முறையைப் பின்பற்ற வேண்டுமென்று இங்கு அறிவுறுத்தப்படுகின்றனர். பகவத் கீதையிலும் (18.65) இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எப்படியாவது நம் பந்தப்பட்ட வாழ்வை நாம் முடித்துக் கொள்ள விரும்பினால், பகவானின் பின்னப் பகுதிகளான ஜீவராசிகளிடம் அவருக்குள்ள இயற்கையான அன்பினால், அனைவரின் இதயத்திலும் வீற்றிருப்பவரான பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும். தாயின் மடியிலுள்ள குழந்தை இயற்கையாகவே தாயிடம் பற்று கொண்டுள்ளது. தாயும் குழந்தையிடம் பற்று கொண்டுள்ளான். ஆனால் குழந்தை வளர்ந்து சூழ்நிலைகளுக்கு அடிமையாகும் பொழுது தாயிடம் அதற்கு இருந்த பற்று மறைந்துவிடுகிறது. வளர்ந்துவிட்ட குழந்தையிடமிருந்து ஏதேனும் சேவையை தாய் எப்பொழுதும் எதிர்பார்க்கிறாள். இவை அனைத்தையும் குழந்தை மறந்துவிட்டாலும், தாய் அவளுடைய குழந்தையிடம் மாறாத அன்பு கொண்டிருக்கிறாள். அதைப் போலவே, நாம் எல்லோரும் பகவானின் பின்னப் பகுதிகளாக இருப்பதால், பகவான் எப்பொழுதும் நம்மீது கருணை கொண்டவராக இருப்பதுடன், அவரது இராஜ்யத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதற்காக எப்பொழுதும் அவர் முயன்றும் வருகிறார். ஆனால் கட்டுண்ட ஆத்மாக்களான நாம் அவரைப் பற்றி அக்கறை கொள்ளாமல், மாயையான உடல் சம்பந்தங்களின் பின்னால் ஓடித்திரிகிறோம். எனவே, நம்மை நாம் உலகின் எல்லா மாயைகளிலிருந்தும் விடுவித்துக் கொண்டு பகவானுக்குத் தொண்டு செய்ய முயற்சிப்பதன் மூலமாக அவருடன் மீண்டும் இணையும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்க வேண்டும். உண்மையில், சேய் தாயைத் தேடுவது போல், நாம் பகவானை ஆசையுடன் தேடிக் கொண்டிருக்கிறோம். முழுமுதற் கடவுளைத் தேடி நாம் வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. ஏனெனில் நம் இதயத்திலேயே அவர் இருக்கிறார். கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் போன்ற வழிபாட்டுக்குரிய இடங்களுக்கு நாம் போகக் கூடாது என்பதை இது வலியுறுத்தவில்லை. பகவான் எங்கும் பரவி இருப்பவர் என்பதால், இத்தகைய வழிபாட்டுக்குரிய இடங்களிலும் அவர் நிறைந்திருக்கிறார். சாதாரண மனிதனுக்கு இப்புண்ணிய ஸ்தலங்கள் பகவானின் விஞ்ஞானத்தை கற்பதற்குரிய மையங்களாக உள்ளன. ஆலயங்கள் செயலற்றவை ஆகும் பொழுது, மக்கள் அத்தகைய இடங்களில் சிரத்தை அற்றவர்களாகி, படிப்படியாக இறை உணர்வற்றவர்கள் ஆகின்றனர். இதன் விளைவு இறைவனற்ற நாகரிகமாகும். நரகம் போன்ற இத்தகைய நாகரிகம் செயற்கையான முறையில் வாழ்வின் பந்தங்களை அதிகரித்துக் கொண்டு போகிறது. இதனால் வாழ்வு அனைவருக்கும் சகிக்க முடியாததாக ஆகிவிடுகிறது. கடவுளற்ற நாகரிகத்தின் முட்டாள் தலைவர்கள், உலகில் அமைதியையும், அபிவிருத்தியையும் ஏற்படுத்த பல்வேறு திட்டங்களைத் தீட்ட முயல்கின்றனர். பகவானற்ற நாகரிகத்தின் இந்த ஒழுங்கற்ற போக்கை ஒரு முடிவுக்குக் கொண்டுவர சிறிதளவேனும் நாம் விரும்பினால், ஸ்ரீமத் பாகவதத்தைப் போன்ற வேத நூல்களின் நியமங்களை நாம் பின்பற்றுவதுடன், ஜட லாபத்தில் ஈர்ப்பற்றவரான ஸ்ரீசுகதேவ கோஸ்வாமியைப் போன்ற ஒருவரின் உபதேசங்களை பின்பற்றுவதும் அவசியமாகும்.


( ஶ்ரீமத் பாகவதம் 2.2.6 / பொருளுரை 


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...