Skip to main content

பிரசாதத்தை கால்களால் மிதிக்கக்கூடாது




 பிரசாதத்தை கால்களால் மிதிக்கக்கூடாது


( நரசிம்ம புராணம், இருபத்தி எட்டாவது அத்தியாயம் )



நரசிம்ம புராணத்தின் இருபத்தி எட்டாவது அத்தியாயத்தில் ஸ்ரீல சூத கோஸ்வாமி பரத்வாஜ முனிவரிடம், நாரத மகரிஷி மற்றும் ஸந்தனு மன்னருக்கிடையே நடைபெற்ற உரையாடலை கீழ்க்கண்டவாறு விளக்குகின்றார்:

ஸந்தனு மஹாராஜா பகவான் நரசிம்மதேவரின் பக்தராக இருந்தார். மேலும் நாரத முனிவரின் வழிகாட்டுதலின்படி, ஸந்தனு மன்னர் பகவானை வழிபட்டுவந்தார். ஒருமுறை கவனக்குறைவாக நிர்மால்யத்தை, அதாவது நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களை கால்களால் மிதித்துவிட்டார். இத்தகைய குற்றத்தின் பலனாக, அவர் அக்கணமே தனது பலத்தை இழந்து, தேவர்களால் தனக்கு வழங்கப்பட்டிருந்த ரதத்தில் ஏற முடியாமல் தடுமாறினார். இதனைக் கண்டு அதிசயித்த மன்னர், “எதனால் நான் எனது சக்தியை இழந்து, நகரவும் முடியாமல் இருக்கின்றேன்?” என்று எண்ணினார்.

மன்னர் கவலையுடன் இருப்பதைக் கண்ட நாரதர், “என்னவாயிற்று அரசரே?” என்று வினவினார்.

அதற்கு ஸந்தனு, “நாரதரே, என்ன காரணத்தினால் நான் எனது பலம் அனைத்தையும் இழந்து நகரவும் முடியாமல் தவிக்கின்றேன் என்று தெரியவில்லை” என்றார்.

இதனைக் கேட்ட நாரதர், இதற்கான காரணத்தை ஆராய்ந்தார். அதன்பின்னர் அவர் தன்முன்னர் பணிவுடன் நின்ற மன்னரை நோக்கி, “அரசரே, இது நிச்சயமாக தாங்கள் நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களை, நிர்மால்யத்தை மிதித்த குற்றத்தின் விளைவே. அதனால் தான் தங்களால் நகரவும் முடியவில்லை. இது குறித்து புராதன வரலாறு ஒன்றை நான் கூறப்போவதை கவனமாக கேளுங்கள்:

ஒருமுறை, கங்கைக்கும் யமுனைக்கும் நடுவில் அமைந்துள்ள அந்தர்வேதி என்ற இடத்தில் ரவி என்கின்ற புத்திசாலியான பூக்காரர் ஒருவர் இருந்தார். அவர் மிகப்பெரிய துளசி தோட்டம் ஒன்றை அமைத்து அதனை “விருந்தாவனம்” என்றழைத்தார். அந்த தோட்டத்தில், மல்லிகை, முல்லை, ஜாதிப்பூ மற்றும் பகுள எனப்படும் பல்வேறு வகையான மலர் செடிகளையும் வளர்த்து வந்தார். யாரும் உள்ளே நுழையாதபடி தோட்டத்தை சுற்றி மிக உயரமான மதில் சுவற்றை எழுப்பியிருந்தார், தோட்டத்திற்குள்ளேயே அவருடைய வீடும் இருந்தது. தோட்டத்திற்குள் யாரும் நுழையாத முடியாதபடி முன்பகுதியில் வீட்டை கட்டியிருந்தார். பூக்காரர் அந்த தோட்டத்தை மிகவுமே நேசித்தார். தோட்டம் முழுவதும் மலர்களால் நிறைந்திருந்ததால், அந்த பகுதி முழுவதுமே நறுமணத்தால் நிறைந்திருந்தது. அந்த பூக்காரர் தினந்தோறும் தனது மனைவியுடன் இணைந்து மலர்களைப் பறித்து மாலைகள் தொடுப்பார். தொடுத்துவைத்த நிறைய மாலைகளில் சிலவற்றை நரசிம்மருக்கு வழங்குவார், சிலவற்றை பிராமணர்களுக்கு பரிசாக வழங்குவார், மீதி மாலைகளை விற்று, தனது குடும்பத்தை பராமரித்து வந்தார்.

“சிறிது காலத்திற்கு பிறகு, இந்திரனின் மகனான ஜயந்தன், ரவியினுடைய அழகான தோட்டத்தைக் கண்டார். அன்றையே இரவே ஜயந்தன் ஸ்வர்க்க லோகத்து மங்கைகளுடன் ரவியினுடைய தோட்டத்திற்கு வந்தார். நறுமண மலர்களினால் கவரப்பட்டு, அவைகள் அனைத்தையும் தனது பெண் தோழிகளுக்கு வழங்குவதற்காக பறிக்கத் தொடங்கினார். நாளடைவில் செடிகளில் மலர்களே இல்லாமல் இருப்பதைக் கண்டு ரவி குழப்பம் அடைந்தார். “எனது வீட்டிற்குள் நுழையாமல் தோட்டத்திற்குள் நுழையவே முடியாது. தாண்டிவரமுடியாதபடி தோட்டத்தின் மதில் சுவர்களும் மிக உயரமாக உள்ளன. நிச்சயமாக மனிதர்களால் இரவு நேரத்தில் இவ்வளவு மலர்களை பறிக்கவேமுடியாது, எனவே இதனை மறைந்திருந்து கண்காணிக்க வேண்டும்” என்று முடிவு செய்தார்.

எனவே அந்த பூக்காரர் தோட்டத்திற்குள் யாரும் காணாதவாறு ஒளிந்துகொண்டார். ஜயந்தனும் எப்போதும் போலவே தோட்டத்திற்குள் நுழைந்து மலர்கள் அனைத்தையும் பறித்தார். பூக்காரர் ஜயந்தனைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவரால் அவரைத் தடுக்க முடியவில்லை. மனவேதனையுடன் அவர் தோட்டத்திலேயே உறங்கிவிட்டார். அப்போது அவருடைய கனவில் நரசிம்மதேவர் தோன்றி, “மகனே கவலைப்படாதே, உடனடியாக எனது நிர்மால்ய மலர்களைக் பெற்று, அதனை தோட்டம் முழுவதும் போட்டு வைப்பாயாக. இந்திரனின் மகனை இங்கு வரவிடாமல் தடுப்பதற்கு இதைத்தவிர வேறு வழியில்லை” என்றார்.

கனவிலிருந்து விழித்தெழுந்த ரவி, உடனடியாக நரசிம்மதேவர் கூறியபடி நிர்மால்ய மலர்களை பெற்றுவந்து, தோட்டம் முழுவதும் போட்டுவைத்தார்.

“அன்று இரவும் கண்களுக்கு புலப்படாத தனது இரதத்தில் வந்திறங்கிய ஜயந்தன் மலர்களைப் பறிப்பதில் மும்முரமாக இருந்தார். அப்போது கவனக்குறைவாக, அந்த தோட்டத்தில் போட்டு வைக்கப்பட்டிருந்த பகவான் நரசிம்மரின் நிர்மால்ய பிரஸாதத்தை கால்களால் மிதித்துவிட்டார். உடனடியாக தனது பலத்தை இழந்த ஜயந்தன் ரதத்தில் ஏறமுடியாமல் தடுமாறினார். இதனைக் கண்ட ரதசாரதி, “நரசிம்ம தேவரின் நிர்மால்ய மலர்களை கால்களால் மிதித்த காரணத்தினால், தாங்கள் இப்போது ரதத்தில் ஏறுவதற்கான தகுதியை இழந்துவிட்டீர்கள். எனவே நான் ஸ்வர்க்க லோகத்திற்கு திரும்பிச் செல்கிறேன். தாங்கள் இனி பூமியில் தான் இருந்தாக வேண்டும். எனவே ரதத்தில் ஏறுவதற்கு முயற்சிக்க வேண்டாம்” என்றார்.

அதற்கு இந்திரனின் மகன் சாரதியிடம், “சாரதியே, ஸ்வர்க்க லோகத்திற்கு திரும்பிச் செல்லும்முன்னர், நான் இழைத்துள்ள குற்றங்களிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறையை கூறிவிட்டு, அதன்பின்னர் எனது தந்தையின் பேரரசிற்கு திரும்பிச் செல்லுங்கள்” என்றார்

சாரதியும், “குருக்ஷேத்ர புண்ணிய பூமியில், பெரும் முனிவரான பரசுராமர் பன்னிரெண்டு வருடங்களுக்கு தொடரும் யாகத்தை மேற்கொண்டுள்ளார். நீ அங்கு சென்று, தினந்தோறும் பிராமணர்களின் உச்சிஷ்டத்தை சுத்தப்படுப்பத்தும் சேவையை மேற்கொள்வாயாக. யாக அரங்கினை சுத்தப்படுத்துவதின் மூலமாக உனது குற்றங்களிலிருந்து விடுபடலாம்” என்று அறிவுறுத்தினார். அதன்பிறகு அந்த சாரதி தேவ லோகத்திற்கு கிளம்பிவிட்டார்.

சாரதியின் அறிவுரையின்படி இந்திரனின் மகன், சரஸ்வதி நதிக்கரையில் அமைந்துள்ள குருக்ஷேத்ரத்திற்கு சென்றார். அங்கே அவர் பிராமணர்களின் உச்சிஷ்டத்தை சுத்தப்படுத்துவதின் மூலமாக பரசுராமரின் யாக அரங்கை சுத்தப்படுத்தினார். பன்னிரெண்டு வருட யாகம் நிறைவடைந்தபின்னர், ஜயந்ததின் நடவடிக்கையால் மகிழ்ந்த பிராமணர்கள் அவரிடம், “மேன்மைக்குரியவரே, நாள் தவறாமல் தாங்கள் எங்களுடைய எச்சங்களை சுத்தப்படுத்தி, யாக அரங்கை சுத்தமாக வைத்திருந்தீர்கள். இவ்வளவு காலமும் தாங்கள் எதுவுமே சாப்பிடவில்லை. இதுகுறித்து எங்களுக்கு கவலையாக இருக்கிறது. தாங்கள் யார் என்பதை கூறுங்கள்” என்றனர். பிராமணர்களால் கேட்டுக்கொள்ளப்பட்ட ஜயந்தன் நடந்தவைகளை விளக்கிவிட்டு, தனது தந்தையின் லோகத்தை சென்றடைந்தார்.

இதனையடுத்து நாரதமுனிவர் அரசரிடம், “தாங்களும் பரசுராமரின் பன்னிரெண்டு வருட யாகத்தில் பிராமணர்களின் உச்சிஷ்டங்களை சுத்தப்படுத்தி யாக அரங்கை சுத்தப்படுத்தும் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். ஒருவருடைய பாவங்களை போக்கிக் கொள்வதற்கு பிராமணர்களுக்கான சேவையைத் தவிர வேறுஎதுவும் உயர்ந்தது இல்லை. அரசரே, எனது வழிநடத்துலைப் பின்பற்றினால் மிக எளிதாக தேவர்களால் வழங்கப்பட்ட ரதத்தை திரும்பப் பெறலாம். இனிமேல், நரசிம்மருக்கு அல்லது விக்ரஹங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களை காலால் மிதித்துவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்” என்றார்.

நாரதமுனிவரின் அறிவுரையின்படி ஸந்தனு மன்னர் பன்னிரெண்டு வருடங்கள் பிராமணர்களின் உச்சிஷ்டங்களை சுத்தப்படுத்தும் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதன்மூலமாக அவர் ரதத்தில் ஏறுவதற்கு தான் இழந்திருந்த சக்திகளை மீண்டும் திரும்பப்பெற்றார்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


(ஜெகந்நாத புரியின் உள்ளூர் வழக்கப்படி, ஜெகந்நாதரின் மஹாபிரஸாத்தை கால்களினால் மிதித்து குற்றமிழைப்பவர், நாள்பட்ட நோயான யானைக்கால் வியாதியால் அவதிப்படுவர் என்று கூறப்படுகிறது.” )

ஒருவன் திருமூர்த்ததிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களைத் தாண்டவோ, கால்களினால் மிதிக்கவோ கூடாது என்று ஸ்ரீல பிரபுபாதர் பக்தி ரஸாம்ருத சிந்து என்னும் நூலில் எட்டாம் அத்யாயத்திற்கான பொருளுரையில் விளக்குகிறார் .

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

இது ஸனாதன கோஸ்வாமியாலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது:
க்ஞேயா: பரே ‘பி பஹவோ ‘பராதா: ஸத்-அஸம்மதை:
ஆசரை: ஷாஸ்த்ர-விஹித-நிஷித்தாதி-க்ராமதிவிஹி
தத்ராபி ஸர்வதா-க்ருஷ்ண நிர்மால்யம் து ந லங்கயேத்

அத்துடன் எண்ணற்ற விதிமுறைகள் இருப்பதாக சாஸ்திரங்களும் வைஷ்ணவர்களும் விவரிக்கின்றனர். உதாரணமாக, கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களைத் தாண்டவோ, கால்களினால் மிதிக்கவோ கூடாது.

( ஹரி-பக்தி-விலாஸம் 8.470 )
ஹரே கிருஷ்ண!.

 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...