Skip to main content

Posts

சீமந்தத்வீபத்தில் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் திவ்ய சரித்திரம் (பாகம் 3 )

  சீமந்தத்வீபத்தில் வீற்றிருக்கும்  பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் திவ்ய சரித்திரம் வழங்கியவர் :- உயர் திரு பங்கஜாங்கிரி தாஸ் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பாகம் 3 பகவான் ஶ்ரீ ஜகந்நாதரின் மறு அவதாரம் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத: த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி ஸோ’ர்ஜுன      “எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ, அவன் இந்த உடலைவிட்ட பின் மீண்டும் இப்பௌதிக உலகில் பிறவி எடுப்பதில்லை. அர்ஜுனா, அவன் எனது நித்திய உலகை அடைகிறான்.” ( ஶ்ரீமத் பகவத்கீதை 4.9)      பகவான் ஜகன்னாதர், பலருக்கும் புரியாத வகையில் தன்னுடையை இனிய விருப்பத்தால் தோன்றி மறைகிறார். யார் ஒருவர் இந்த அற்புதமான லீலைகளை புரிந்து கொள்கிறாரோ அவர்கள் மீண்டும் இந்த ஜட உலகில் பிறப்பதில்லை என்று பகவான் ஜகன்னாதர் (ஶ்ரீ கிருஷ்ணர்) பகவத்கீதையில் கூறுகிறார்.      ஜகதீசகங்குலியின் குடும்பம் மறைந்து பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர், முன்பு பகவான் ஜகன்னாதரின் கோவில் இருந்த இடத்தில் அடர்ந்த புதரின் நடுவில் நிறைய பாம்பு புற...

சீமந்தத்வீபத்தில் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் திவ்ய சரித்திரம் (பாகம் 2)

  சீமந்தத்வீபத்தில் வீற்றிருக்கும் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் திவ்ய சரித்திரம் வழங்கியவர் :- உயர் திரு பங்கஜாங்கிரி தாஸ் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பாகம் 2 பதினாறாம் நூற்றாண்டின் வரலாறு 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆      பகவான் ஶ்ரீ சைதன்ய மகாபிரபுவின் காலத்தில் ஜகதீச கங்குலி என்ற பக்தர் மாயாப்பூரின் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தார்.ஜகதீசர் ஒரு சிறந்த வைஷ்ணவர்.அவர் மிகுந்த வயோதிகராய் இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் 900 கிலோமீட்டர் நடந்து வங்க கடற்கரையில் உள்ள ஶ்ரீ க்ஷேத்திரம் என்னும் ஜகன்நாத புரிக்கு செல்வார். அவர் பக்தர்களுடன், பகவான் ஶ்ரீ சைதன்யரையும், பிரபு ஸ்ரீ ஜகந்நாதரையும், பலதேவர் மற்றும் சுபத்ரா தேவியையும் தரிசிப்பதற்காகவும் ரத யாத்திரை பண்டிகையில் கலந்து கொள்ளவதற்காகவும் செல்வார். பின் நான்கு மாதம் அங்கேயே தங்கி அனைத்து வகையான சேவைகளையும் செய்து பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரை பிரிய மனமில்லாமல் வங்காளத்தில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்புவர்.      காலங்கள் சென்றன. ஜகதீசர் கொடிய நோயினால் பார்வையை இழந்தார். அவரின் மகிழ்ச்சி சிதறியது அ...

சீமந்தத்வீபத்தில் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் திவ்ய சரித்திரம் (பாகம் 1)

  சீமந்தத்வீபத்தில் வீற்றிருக்கும் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் திவ்ய சரித்திரம் வழங்கியவர் :- உயர் திரு பங்கஜாங்கிரி தாஸ் பாகம் 1 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஏழாம் நூற்றாண்டின் வரலாறு ஸ்ரீ சீமந்தத்வீப்பில் இருக்கும் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதர், ஸ்ரீ நீலாசல தாமின் (ஶ்ரீ ஜெகன்னாத புரியின்) எஜமானரும் வேறல்ல. இந்த உண்மையை வரலாற்றின் அடிப்படையில் ஸ்ரீல பக்திவினோத் தாகூரால் "ஸ்ரீ நவத்வீப் தாம மஹாத்மியம்தில் கீழ் கண்ட கதை விளக்கப்பட்டுள்ளது. ஏழாம் நூற்றாண்டில், ரக்தபாகு என்ற யவன அரசன் ஒரிசா என்ற மாநிலத்தில் தோன்றினான். அவன் மிகுந்த பாவியாகவும், நாத்திகவாதியாகவும் இருந்து பல நாச காரியங்களில் ஈடுபட்டு, கோயில்களை உடைத்து, ஒரிசாவில் உள்ள நன்மக்களுக்கு அச்சத்தை விளைவித்தான். புரியில் உள்ள பகவான் ஜெகந்நாதரின் பக்தர்கள் ரக்தபாகுவின் அட்டகாசத்தை அறிந்த பொழுது மிகவும் அஞ்சினர் அவர்கள் உடனடியாக பகவான் ஜெகந்நாதரை அணுகி, வழிபாட்டிற்குரிய பகவானே! ரக்தபாகு அனைத்து கோயில்களையும் உடைத்து, அங்கு உள்ள விக்ரஹங்களை அழித்து வருவது எங்களுக்கு மிகுந்த கவலையை இருக்கிறது. அவன் தற்போது இந்த திசையை நோக்கி வருகிறான்....

ரோமஹர்ஷனண் வதம்

  ரோமஹர்ஷனண் வதம் குருவம்சத்தினரின் இரு தரப்பினரான பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமிடையே யுத்தம் நடக்கபோவதாக பகவான் ஶ்ரீ பலராமர் கேள்விப்பட்டார். அதில் பலராமர் மத்தியஸ்தராக இருப்பதென்று முடிவாகியிருந்தது. அது அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே அவர் தீர்த்த யாத்திரை செய்யும் நோக்கத்துடன் துவாரகையிலிருந்து புறப்பட்டார். முதலில் அவர் பிரபாசக்ஷேத்திரம் எனும் இடத்தை அடைந்தார். அங்கு அவர் நீராடி, பிராம்மணர்களைத் திருப்திப்படுத்தி, தேவர்கள், பித்ருக்கள், முனிவர்கள், ஆகியோருக்கு வேத முறைப்படி வந்தனம் செலுத்தினார். இது தீர்த்த யாத்திரை செய்வதற்கு வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள முறை. அதன் பின் மரியாதைக்குரிய சில பிராம்மணர்களுடன் சரஸ்வதி நதியின் கரையிலிருந்த புண்ணியத்தலங்களுக்கு யாத்திரை செய்வதென பலராமர் தீர்மானித்தார். ப்ருதூகரம், பிந்துசரம், திருதகூபம், சுதர்சனதீர்த்தம், விசாலதீர்த்தம், பிரம்மதீர்த்தம், ஆகிய தலங்களுக்கு அவர் விஜயம் செய்தார். அதன் பின் யமுனை, கங்கை நதிகளின் கரைகளிலிருந்த முக்கிய புனிதத்தலங்களுக்கு அவர் சென்று வழிபட்டு, பின் நைமிசாரண்யம் என்ற தலத்தை வந்தடைந்தார். இன்றும் இந்தியாவி...

குவலயாபீடம் யானையின் முற்பிறவி

  குவலயாபீடம் யானையின் முற்பிறவி ஆதாரம் :- ஸ்ரீ கர்க ஸம்ஹிதை      பஹுலாஸ்வன மன்னர் .நாரதரிடம், நாரதரே! குவலயாபீடம் யானை முற்பிறவியில் யாராக இருந்தது? எப்படி யானைப் பிறவியை அடைந்தது? எந்தப் புண்ணியத்தால் ஸ்ரீ கிருஷ்ணனுடன் கலந்தது ? என்று கேட்டார்.      நாரதர் கூறினார், மகாபலி சக்ரவர்த்திக்கு மந்தமதி என்ற ஒரு புதல்வன் இருந்தான். பேருருவம் கொண்ட பலசாலியானஅவன் லக்ஷ் யானை பலத்தோடு திகழ்ந்தான்.      ஒருமுறை அவன் ஸ்ரீ ரங்கநாத க்ஷேத்திரத்திற்கு யாத்திரை கிளம்பினான். க்ஷேத்திர தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் இடையில் மந்தமதி ஒரு யானையைப் போல வேகத்தோடு கைகளை அசைத்து கொண்டு மக்களை நசுக்கியவாறு சென்று கொண்டிருந்தான். அவன் கைகளின் வேகத்தால். யாத்திர்களிடைய சென்று கொண்டிருந்த வயதான த்ரித முனிவர் , அவன் கையசைவின் வேகத்தால் கீழே விழுந்துவிட்டார். கோபமடைந்த அவர் பலிகுமாரனுக்கு சாபமளித்தார்.      த்ரித முனிவர் கூறினார்: " ஸ்ரீ ரங்கநாத க்ஷேத்திரத்திற்கு பகவான் ஶ்ரீரங்கநாதரை தரிசிக்க வந்த யாத்திரீகர்களை மதங்கொண்ட யானையை போல நீ அனைவரையும் நசு...