Skip to main content

குவலயாபீடம் யானையின் முற்பிறவி


 குவலயாபீடம் யானையின் முற்பிறவி

ஆதாரம் :- ஸ்ரீ கர்க ஸம்ஹிதை


    பஹுலாஸ்வன மன்னர் .நாரதரிடம், நாரதரே! குவலயாபீடம் யானை முற்பிறவியில் யாராக இருந்தது? எப்படி யானைப் பிறவியை அடைந்தது? எந்தப் புண்ணியத்தால் ஸ்ரீ கிருஷ்ணனுடன் கலந்தது ? என்று கேட்டார்.

    நாரதர் கூறினார், மகாபலி சக்ரவர்த்திக்கு மந்தமதி என்ற ஒரு புதல்வன் இருந்தான். பேருருவம் கொண்ட பலசாலியானஅவன் லக்ஷ் யானை பலத்தோடு திகழ்ந்தான்.

    ஒருமுறை அவன் ஸ்ரீ ரங்கநாத க்ஷேத்திரத்திற்கு யாத்திரை கிளம்பினான். க்ஷேத்திர தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் இடையில் மந்தமதி ஒரு யானையைப் போல வேகத்தோடு கைகளை அசைத்து கொண்டு மக்களை நசுக்கியவாறு சென்று கொண்டிருந்தான். அவன் கைகளின் வேகத்தால். யாத்திர்களிடைய சென்று கொண்டிருந்த வயதான த்ரித முனிவர் , அவன் கையசைவின் வேகத்தால் கீழே விழுந்துவிட்டார். கோபமடைந்த அவர் பலிகுமாரனுக்கு சாபமளித்தார்.

    த்ரித முனிவர் கூறினார்: " ஸ்ரீ ரங்கநாத க்ஷேத்திரத்திற்கு பகவான் ஶ்ரீரங்கநாதரை தரிசிக்க வந்த யாத்திரீகர்களை மதங்கொண்ட யானையை போல நீ அனைவரையும் நசுக்கியவாறு சென்று கொண்டிருக்கிறாய். முட்டாளே, துர்புத்தியுடையவனே நீ யானையாககடவாய் என்று சபித்து விட்டார். இவ்விதம் சபிக்கப்பட்ட உடனேயே மந்தமதி ஒளியிழந்து அவனது உடல் பாம்பு தோலைப்போல விடுபட்டு கீழே விழுந்துவிட்டது. முனிவரின் பிரபாவத்தை அறிந்துகொண்ட அரக்கன் உடனே கைகுவித்து வணங்கினான்
    
    மந்தமதி, முனிவரை வலம்வந்து வணங்கி " முனிவரே/க்ருபாசிந்தோ (கருணைக்கடலே) தாங்கள் பிராமண சிரோமணியான யோகீந்திரர். இந்த யானைப் பிறவியிலிருந்து எனக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்பதைக் கூறுங்கள். இன்று முதல் தங்களைப் போன்ற மகாத்மாக்களை ஒருபோதும் அவமதிக்க மாட்டேன். தேவா தங்களைப் போன்ற முனிவர்கள் சாபம், வரம் இரண்டையும் அளிக்க வல்லவர்கள் ஆகவே தயை கூர்ந்து கருணை காட்டுங்கள் என்று வேண்டினான்.

    நாரதர் கூறுகிறார்: "மன்னா! அந்த அரக்கனால் மகிழ்விக்கப்பட்ட முனிவர் த்ரிதரின் கோபம் தணிந்து, பின்னர் அந்த அரக்கனிடம் கூறினார் 'அரக்கனே என் சொல் பொய்யாக முடியாது. இருந்தாலும் உன் பக்தியால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். ஆகவே தேவர்களுக்கு அரிதான ஒரு திவ்ய வரமளிக்கப் போகிறேன். கவலைப் படாதே. ஸ்ரீஹரியின் நகரமான மதுராபுரியில் ஸ்ரீ கிருஷ்ணன் கையால் உனக்கு முக்தி கிடைக்கும், ஐயப்படாதே. என்று கூறினார். மேலும் அதே மந்த மதி எனும் அரக்கனே விந்திய மலை மீது குவலயாபீடம் என்னும் பெயரில் பிரசித்திபெற்ற யானையாக இருந்தான் தனியாக இவன் ஒருவனே பத்தாயிரம் யானைகளுக்குச் சமமானவனாக இருந்தான். அவனை ஜராசந்தன் லக்ஷம் யானைகள் மூலம் பிடித்தான். அரசே பின் அந்த யானையை கம்சனுக்கு வரதட்சணையாக அளித்துவிட்டான்.

பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் குவாலயபீட யானையை கொல்லுதல்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கம்சனை வதம் செய்ய மதுராபுரிக்கு வந்தார் மல்யுத்த களத்தில் ஒலித்த பறைகளின் ஓசையை கேட்டு கிருஷ்ணரும் பலராமரும் வேடிக்கை பார்க்க அங்கு சென்றனர். மல்யுத்த மண்டபத்தின் வாயிலில் குவலையாபீட என்ற மாபெரும் யானை ஒன்று, பணியாளர்களின் கவனிப்பில் நிறுத்தப்பட்டிருந்தது. வழியை வேண்டுமென்றே மறைக்கும் நோக்கத்தில் யானை நிறுத்தப்பட்டிருப்பதை உணர்ந்த கிருஷ்ணர், கர்ஜிக்கும் குரலில், யானையின் காவலரிடம், "கயவனே, வழியை மறித்தால் உன்னையும் உன் யானையையும் யமலோகம் அனுப்புவேன்" என்று கூறினார்.

    கிருஷ்ணரால் அவமதிக்கப்பட்ட காவலன், கோபமடைந்து தன் திட்டப்படி, கிருஷ்ணரை தாக்கும்படி யானைக்கு உத்தரவிட்டான். தவிர்க்க முடியாத மரணத்தை போல யானை கிருஷ்ணரை நோக்கி முன்னேறி, தன் துதிக்கையால் அவரை பிடிக்க முயற்சித்தது. கிருஷ்ணர் சாமர்த்தியமாக யானையின் பின் பக்கம் சென்று தப்பித்து கொண்டார். இதேபோல் யானையின் ஒவொரு தாக்குதல்களுக்கும் கிருஷ்ணர் தப்பிப்பதும் பதில் தாக்குதல் செய்வதுமாக இருந்தார். தம் சிறு வயதில் கன்றுகளின் வாலை பிடித்து இழுத்தது போல யானையின் வாலையும் பிடித்து இப்படியும் அப்படியும் இழுத்தார். யானை மிகவும் அலைக்கழிக்கப்பட்டு கோபமுடன் இருந்தது. பாகன் மேலும் விரட்டியதால் ஆவேசத்துடன் கிருஷ்ணரை நோக்கி பாய்ந்தது. கிருஷ்ணர் யானையின் துதிக்கையை பிடித்து இழுத்து, யானையையும் பாகனையும் கீழே வீழ்த்தினார். பின்பு யானையின் மீது ஏறி தாவி குதித்து யானையையும் பாகனையம் கொன்றார். முனிவர் கூறியபடி யானையின் ஜீவன் ஶ்ரீ கிருஷ்ணரில் கலந்து விட்டது.

    யானையை கொன்ற பிறகு கிருஷ்ணர் அதன் ஒரு தந்தத்தை எடுத்து தோளின் மேல் வைத்து கொண்டார். பலராமர் அதன் மற்றோரு தந்தத்தை எடுத்து தன் தோளின் மீது வைத்துக்கொண்டு. நண்பர்கள் புடை சூழ அவர்கள் மல்யுத்த களத்தினுள் பிரவேசித்தார்கள்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண🙏


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...