Skip to main content

சீமந்தத்வீபத்தில் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் திவ்ய சரித்திரம் (பாகம் 1)


 சீமந்தத்வீபத்தில் வீற்றிருக்கும் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் திவ்ய சரித்திரம்


வழங்கியவர் :- உயர் திரு பங்கஜாங்கிரி தாஸ்

பாகம் 1

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஏழாம் நூற்றாண்டின் வரலாறு



ஸ்ரீ சீமந்தத்வீப்பில் இருக்கும் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதர், ஸ்ரீ நீலாசல தாமின் (ஶ்ரீ ஜெகன்னாத புரியின்) எஜமானரும் வேறல்ல. இந்த உண்மையை வரலாற்றின் அடிப்படையில் ஸ்ரீல பக்திவினோத் தாகூரால் "ஸ்ரீ நவத்வீப் தாம மஹாத்மியம்தில் கீழ் கண்ட கதை விளக்கப்பட்டுள்ளது.

ஏழாம் நூற்றாண்டில், ரக்தபாகு என்ற யவன அரசன் ஒரிசா என்ற மாநிலத்தில் தோன்றினான். அவன் மிகுந்த பாவியாகவும், நாத்திகவாதியாகவும் இருந்து பல நாச காரியங்களில் ஈடுபட்டு, கோயில்களை உடைத்து, ஒரிசாவில் உள்ள நன்மக்களுக்கு அச்சத்தை விளைவித்தான். புரியில் உள்ள பகவான் ஜெகந்நாதரின் பக்தர்கள் ரக்தபாகுவின் அட்டகாசத்தை அறிந்த பொழுது மிகவும் அஞ்சினர் அவர்கள் உடனடியாக பகவான் ஜெகந்நாதரை அணுகி, வழிபாட்டிற்குரிய பகவானே! ரக்தபாகு அனைத்து கோயில்களையும் உடைத்து, அங்கு உள்ள விக்ரஹங்களை அழித்து வருவது எங்களுக்கு மிகுந்த கவலையை இருக்கிறது. அவன் தற்போது இந்த திசையை நோக்கி வருகிறான். அவன் எந்த சமயத்திலும் இங்கு வந்து உனது இந்த கோயிலை தாக்கலாம். அவ்வாறு நடந்தால் நாங்கள் எங்களது உயிரை விட்டுவிடுவோம். ஏனெனில் எங்களால் உங்களுக்கு எதிராக நடக்கும் காரியங்களை கண்டு சகித்துக் கொள்ள முடியாது. தயவு செய்து தாங்கள் தங்களது விக்கிரகத்தையும், கோவிலையும் காப்பாற்ற போதுமான ஏற்பாடுகளை செய்து கொண்டு எங்களையும் இந்த அபாயத்திலிருந்து காப்பாற்றவேண்டும் “ என்று பெறும் பதட்டத்துடன் மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.

பக்தர்களின் பிரார்த்தனையை ஏற்று அவர்களது அச்சத்தை போக்கும் விதமாக அன்று இரவு பகவான் ஜகந்நாதர் தலைமை பூஜாரியின் கனவில் தோன்றி கீழ்கண்டவாறு கூறினார்.“ எனது அருமை பூசாரியே பக்தர்களாகிய நீங்கள் என் மீது கொண்டுள்ள அன்பையும், பக்தியையும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அனைவரும் உங்களை விட என்னை அதிகமாக நேசிக்கிறார்கள். இதுவே புனித பக்தர்களின் அடையாளம். உண்மையில் எனது விக்ரஹத்திற்கோ, கோயிலுக்கோ யாராலும் எந்தவித தீங்கையும் விளைவிக்க முடியாது நீங்கள் நிச்சயமாக அதனை பற்றி கவலை பட தேவையில்லை.எனது சக்தியால், அனைத்து நாசக்காரர்களையும் எனது பிரியமான பக்தர்களிடமிருந்து தொலைவில் பிரித்து வைக்க முடியும். ஆனால் எனது பக்தர்களை ஆசீர்வாதம் செய்யும் பொருட்டு, தனது அன்பை அவர்களுக்கு வெளிபடுத்துவதற்காகவும் இது போன்ற இன்னல்களை நானே ஏற்று கொள்கிறேன். இதன் மூலம் எனது பக்தர்களின் அன்பும் பற்றுதலும் பல மடங்காக அதிகரிக்கிறது. இது அவர்களது விருப்பம் ஆதலால் அவர்கள் என் மீது கொண்டுள்ள அன்பை மிக முக்கிய வழியில் வெளிப்படுத்த போகிறேன். தயவு செய்து நாளை என்னுடைய விக்கிரகத்தையும், பலராமர் மற்றும் சுபத்ரா தேவி விவரத்தையும் வங்காளத்திற்கு எடுத்து செல்லவும், எங்களை காட்டின் வழியாக எடுத்துச் செல்ல வேண்டும், ஏனெனில் ரக்தபாகு பிரதான சாலை வழியாக வருகிறான். அதற்காக நீங்கள் அஞ்ச வேண்டாம் நான் உங்களை எப்பொழுதும் பாதுகாப்பேன் என்றார்.

பின்னர் பூஜாரியின் கனவிலிருந்து பகவான் மறைந்தார். பூஜாரி கண்விழித்து. அவர் கண்ட கனவை அனைவருக்கும் தெரிவித்தார். இது பக்தர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் அவர்கள் பகவானின் பிரயாணத்திற்கு சரியான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.

ஜகந்நாத் புரியின், பல பிரிவை சார்ந்த பக்தர்கள் பல விதமான சேவைகளை பகவானுக்கு செய்வார்கள். உதாரணமாக பிராமணர்கள் திரு உருவ வழிப்பாட்டிற்கு பொறுப்பு இருப்பார்கள், மற்றவர்கள் பகவானின் இன்பத்திற்காக சமைப்பார்கள். மேலும் சபராக்கள் என்று அழைக்கப்படும் பக்தர்கள், ஸ்ரீ ஜெகந்நாதர்,பலதேவர் மற்றும் சுபத்ரா தேவியை ஸ்நான யாத்திரை, ரத யாத்திரை போன்ற விழாக்களுக்கு அழைத்து செல்லும் சேவையை செய்வார்கள் இது அங்குள்ள பாரம்பரிய வழக்கமாகும்.

பிரபு ஜகந்நாதர் வங்காளம் செல்ல வேண்டும் என்ற விஷயத்தை சபராக்கள் அறிந்தபொழுது, அவர்கள் மறுநாள் காலை புறப்படுவதற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்தார்கள். அவர்கள் நாள் முழுவதும் நடந்து இருள்வதற்கு சற்று முன்பு ஒரு பொருத்தமான இடத்தில் தங்கினார்கள். அங்கு காட்டில் உள்ள பழம், பூ, இலைகளை சேகரித்து பகவானை பூஜித்தார்கள். பிறகு திரு உருவங்களை ஓய்வெடுக்க செய்து பகவானின் மஹாபிரசாதத்தை உண்டு அவர்கள் ஓய்வு எடுத்தார்கள். மறுநாள் காலை காலை விக்ரஹங்களை வழிப்பட்ட பிறகு சபராக்கள் தங்களது சேருமிடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். இவ்வாறாக பதினொரு தினங்கள் கழிந்து பன்னிரெண்டாவது நாள் சீமந்தத்வீப்பை அடைந்தார்கள்.அது நவத்வீபத்தின் ஒன்பது தீவுகளில் ஒன்று ஆகும்.

அன்று இரவு பகவான் ஜகந்நாதர், தலைமை சபராவின் கனவில் தோன்றி, தான் அந்த இடத்திலேயே இருக்க விரும்புவதாகவும், அந்த இடம் எல்லா விதங்களிலும் ஆன்மீகமாக உள்ளது என்றும் கூறினார். உடனடியாக சபரா பக்தர்கள், பகவான் விருப்பத்தை பூர்த்தி செய்யும் பொருட்டு, பகவான் அங்கேயே நிரந்திரமாக தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்கள்.

சபரா வைஷ்ணவர்கள் பல தலைமுறைகளுக்கு பகவானை சேவகம் செய்து வந்தார்கள். அவர்களது தூய அன்பினாலும், பக்தியினாலும் முக்தி அடைந்து, இறுதியாக . ஆன்மீக உலகில் பகவான் ஜகந்நாதரின் நிரந்திர இருப்பிடத்திற்கு சென்றார்கள். இன்றும் ஐகந்நாதர் கோயிலுக்கு அருகே சபரா என்ற கிராமம் உள்ளது.அதை சபரா தங்கா அல்லது சபராக்களின் இருப்பிடம் என்று அழைக்கிறார்கள். காலத்தின் பாதிப்பால், இந்த விக்ரஹமும், கோயிலும் பார்வையிலிருந்து மறைந்தது.இருப்பினும் பகவான் அந்த இடத்தை விட்டு செல்லவில்லை

நாளை . . .

பதினாறாம் நூற்றாண்டின் வரலாறு

தொடரும் . . . . 


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, 
ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண!

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி

🔆🔆🔆🔆🔆🔆🔆

Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇

🔆🔆🔆🔆🔆🔆🔆

சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...