நரசிம்ம அவதாரம் வழங்கியவர் - சுத்தபக்தி குழு 🍁🍁🍁🍁🍁🍁🍁 தன்னுடைய சகோதரனின் மரண செய்தியை கேட்ட ஹிரண்யகசிபு, மிகுந்த கோபம் கொண்டான். விண்ணை நோக்கி, "எனதன்பு அசுர நண்பர்களே! நான் தேவர்களை தோற்கடித்து இந்த அண்டம் முழுவதையும் எனதாக்குவேன். விஷ்ணுவின் சிரம் கொய்து அவனை கொல்வேன்", என்று ஓலமிட்டான். சாகாவரம் பெற எண்ணிய ஹிரண்யகசிபு, ஒரு தனிமையான இடத்திற்கு சென்றான். தன் பாதத்தின் நுனியில் நின்றவாறு, கைகளை சிரஸிற்கு மேல் கூப்பி தன்னுடைய பார்வையை விண்ணை நோக்கி நிலை நிறுத்தினான். இவ்வாறு நூற்றி இருபத்தி ஐந்து வருடங்கள் இருந்தான். இந்த காலம் முழுவதும் உண்ணவும் இல்லை, உறங்கவும் இல்லை. எறும்புகள் அவனை சுற்றி புற்று கட்டி, அவனுடைய உடலையும் அரித்திருந்தது. அவனுடைய சிரத்திலிருந்து வந்த நெருப்பு ஜுவாலை, சமுத்திரத்தின் நீரை வற்ற செய்தது. மூவுலகங்களும் வெட்பத்தால் தகித்தது. பிரம்ம தேவர் உடனடியாக ஹிரண்யகசிபுவின் முன் தோன்றினார். "அசுரர் குலத்தின் அரசே! உன் உறுதியை கண்டு நான் வியக்கிறேன்! உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்", என்று கூறினார். அதேசமயம், அவனுடைய உடலின் மீது சிறிது ஜலத்தை...