Skip to main content

Posts

வசந்த பஞ்சமி - சரஸ்வதி தேவி தோன்றிய நன்நாள்

  வசந்த பஞ்சமி சரஸ்வதி தேவி தோன்றிய நன்நாள்  🍁🍁🍁🍁🍁🍁 வசந்த பஞ்சமி, வட இந்தியாவில் கொண்டாடப்படும் சிறப்பு நாட்களில் ஒன்றாகும். வசந்த பஞ்சமி நாளை ரிஷி பஞ்சமி என்றும் ஸ்ரீ பஞ்சமி என்றும் அழைப்பர். வட இந்தியாவில், மக (மாசி) மாதம் (ஜனவரி - பிப்ரவரி) சுக்ல பட்ச (வளர்பிறை) ஐந்தாம் நாளான (பஞ்சமி) வசந்த பஞ்சமியன்று, சரஸ்வதி பூஜையை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி எனப் பலபெயர்களால் அழைக்கப்படும் சரஸ்வதி தேவி தோன்றிய நாளாக வசந்த பஞ்சமி கருதப்படுகிறது. வட இந்தியாவில் வசந்த பஞ்சமி திருநாளை வீடுகளிலும், கோயில்களிலும், பொது இடங்களிலும், சமுதாயத் திருநாளாகக் கொண்டாடப்படுகிற்து. மேற்குவங்கம், ஶ்ரீ தாம் மாயாப்பூாில் உள்ள ராதா மாதா  அஷ்ட சகி திருக்கோயிலில் வசந்த பஞ்சமி நாளான்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணா் மற்றும் அஷ்ட சகி விக்கிரகங்களுக்கு மஞ்சள்பொடி பூசப்பட்டு, மஞ்சள் நிற ஆடைகள், மஞ்சள்மலா் மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. கருவறை மண்டபங்கள் அனைத்துமே மஞ்சள் நிறமலா்களால் அலங்காிக்கப்படுகின்றன. இந்த சிருங்கார தரிசனத்தை காண இரு கண்கள் போதாது. இந்தக் க...

வசந்த பஞ்சமி

  வசந்த பஞ்சமி இந்தியாவில் (வட அரைக்கோளத்தில்) வசந்த காலத்தின் முதல் நாள் அதாவது வளர்பிறையின் ஐந்தாவது நாளில், இந்த வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, விருந்தாவனத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல விதமான பழங்கள், இலைகள், மலர்கள் மற்றும் முளை கட்டும் பயிர்கள் ஆகியவற்றை அர்ப்பணம் செய்ய வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் புது உயிர் மற்றும் வளர்ச்சியை குறிக்கும். வ்ரஜ வாசிகளை பின்பற்றும் விதமாக, பகவான் கிருஷ்ணரின் உடலில் பல விதமான வர்ணங்களை கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும்; பின்னர் பகவானுக்கு சிறப்பு ஆராதனை செய்ய வேண்டும். மஞ்சள் நிற மலர்களை அர்பணிப்பது மிகவும் நல்லது. இந்த நாளில் வசந்த ராகத்தை பாட வேண்டும். விருந்தவனத்தில் இருக்கும் பகவானுடைய விக்ரஹங்களுக்கு இந்த நாளில் மஞ்சள் அல்லது மஞ்சள் மற்றும் பச்சை கலந்த வஸ்திரம் அணிவிக்கப்படும்.  விருந்தாவனம், ஶ்ரீதாம் மாயாப்பூர், ஜெகந்தாத பூரி ஷேத்திரம் மற்றும் உடுப்பியில் - பெண்களும் மஞ்சள் நிறத்தில் ஆடைகளை அணிந்திருப்பர்.    பெண்கள் குல விருத்திக்காகவும்   பயிர்கள் மற்றும் பசுக்களின் விருத்திக்காகவும். பல சடங்குகள் இந்த நன...

ரக்தஜனான அர்ஜனனும் , ஸ்வேதஜனான கர்ணனும்

 ரக்தஜனான அர்ஜனனும் ஸ்வேதஜனான  கர்ணனும்  ஆதாரம் :- பத்ம புராணம் / ஸ்ருஷ்டி காண்டம் / அத்தியாயம் 14 வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பீஷ்மர் புலஸ்திய மகரிஷியைப் பார்த்து, "மகா வீரனான அர்ஜுனன் எவ்வாறு மனித ஜென்மம் எடுக்க நேர்ந்தது?  கர்ணனுக்கு கன்னிப் பெண்ணிடம் உற்பத்தி நேர்ந்த காரணம் என்ன? இவர்கள் இருவருக்குமிடையே தீராத பகைமை ஏற்படக் காரணம் என்ன இந்த விஷயத்தில் எனக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. தாங்கள் தயவு செய்து இதன் உண்மையை விளக்க வேண்டும் என்று கேட்டார். புலஸ்திய முனிவர் கூறத் தொடங்கினார். "பூர்வ காலத்தில் சங்கரர் பிரம்மதேவரின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எடுத்து விட்டதால், பிரம்ம தேவருக்கு மிகுந்த கோபம் உண்டாகிவிட்டது, அந்தக் கோபத்தால் அவருடைய நெற்றியில் தோன்றிய வியர்வை துளிகளை வழித்து பூமியின் மேலிட்டார். அந்த வியர்வையில் இருந்து கவசகுண்டலங்களுடனும், வில் அம்புடனும் ஒரு மகாவீரன் தோன்றினான். அவன் எழுந்து நின்று பிரம்ம தேவரை வணங்கி நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். பிரம்மதேவர் அந்த மாவீரனிடம். ருத்திரனைக் அடையாளம் காட்டி  நீ உன்னுட...

புண்டரீக வித்யாநிதி

 புண்டரீக வித்யாநிதி  🍁🍁🍁🍁🍁🍁 புண்ட ரீக வித் யாநிதி. - பஃட,ஷா.கா, ஜானி ஜா,ர நாம லஞா ப்ரபு, காந்தி லா ஆபனி மொழிபெயர்ப்பு 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 புண்டரீக வித்யாநிதி மூன்றாவது மிகப்பெரிய கிளையாவார். அவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிற்கு மிகவும் பிரியமானவர், அவரது பிரிவில் சில நேரங்களில் ஸ்ரீ சைதன்யர் அழவும் செய்வார் பொருளுரை:  🍁🍁🍁🍁🍁🍁 கௌர கணோத், தேஷதிபிகா (54), ஸ்ரீல புண்டரீக வித்யாநிதியை கிருஷ்ண லீலையில் ஸ்ரீமதி ராதாராணியின் தந்தையாக விளக்குகின்றது. எனவே, சைதன்ய மஹாபிரபு அவரைத் தமது தந்தையைப் போன்று நடத்தினார். புண்டரீக வித்யாநிதியின் தந்தை பாணேஸ்வரர் என்று அறியப்பட்டார், மற்றோர் அபிப்பிராயத்தின்படி சுக்லாம்பர பிரம்மசாரி என்று அறியப்பட்டார், அவரது தாயாரின் பெயர் கங்காதேவி. ஓர் அபிப்பிராயத்தின்படி, பாணேஸ்வரர் ஸ்ரீ சிவராம கங்கோபாத்யாயரின் வம்சத்தில் வந்தவராவார். புண்டரீக வித்யாநிதியின் பூர்வீகம் கிழக்கு வங்காளமாகும் (தற்போது வங்காளதேசம்), டாக்காவிற்கு அருகிலுள்ள பா,கியா என்னும் கிராமத்தில் அவர் பிராமண குலத்தின் வாரேந்திர பிரிவைச் சார்ந்தவராவார். சில நேரங்களில் இந்த வாரேந்திர பி...

விஷ்ணுபிரியாதேவி

  விஷ்ணுபிரியாதேவி 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 விஷ்ணுபிரியாதேவி அவதார தினம் வழங்கியவர் :- ஜீவன கெளரஹரி தாஸ் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒருநாள் அன்னை ஸச்சிதேவி ராஜ பண்டிதரான ஸநாதன மிஸ்ரரின் மகளான விஷ்ணுபிரியாவை தமது மகனுக்கு மணமுடிக்கும் விருப்பத்தை காசிநாத பண்டிதரிடம் தெரிவித்தார். காசிநாத பண்டிதர் உடனடியாக ஸநாதன மிஸ்ரரை அணுகி அவரது மகளை நிமாயிக்கு மணமுடிக்க முன்மொழிந்தார். நிமாய் பண்டிதரின் புகழை நன்கறிந்த ஸநாதன மிஸ்ரர் திருமணத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்தார். இச்செய்தியைக் கேட்டு நிமாய் பண்டிதரின் அண்டை வீட்டுக்காரரான புத்திமந்தகான் திருமணத்திற்கான மொத்த செலவையும் தாமே ஏற்பதாகவும், திருமணத்தை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யலாம் என்றும் தெரிவித்தார். நிமாய்-விஷ்ணுபிரியா திருமணம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 நிமாய்-விஷ்ணுபிரியா திருமணம் தேவலோகவாசிகளையே வியப்பூட்டும் வகையில் ஆடம்பரமாக அமைந்தது. லக்ஷ்மிபிரியா திருமணத்தைப் போல இத்திருமணத்திலும் தேவர்கள் மனித ரூபத்தில் கலந்து கொண்டனர். பிராமணர்கள் வேத மந்திரங்களை ஓத, நிமாய் வைஷ்ணவர்களின் மத்தியில் கம்பீரமாக அமர்ந்திருந்தார். யோக மாயையின் சக்தியினால் நவத்வீப மக்க...

இறைவனின் திருநாட்டிற்கும் பக்தித் தொண்டிறாகும் வேறுபாடு இல்லை

 

பகவானுக்கு சமமானவரோ அவரைவிட உயர்வானவரோ யாரும் இல்லை

 

நாரதமுனி , அந்தணர் மற்றும் செருப்பு தைக்கும் தொழிலாளி

நாரதமுனி , அந்தணர் மற்றும் செருப்பு தைக்கும் தொழிலாளி வழங்கியவர்கள் - சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒருமுறை நாரதமுனி வைகுந்ததிற்க்கு பகவான் நாரயணரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார், வழியில் வேதங்கள் அனைத்தையும் பயின்ற ஆச்சாரமான ஒரு அந்தணரைச் சந்தித்தார். நாரதரை வணங்கிய அந்தணர், “தாங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என அடியேன் அறிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார். அதற்க்கு, “நிச்சயமாக, நான் பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பார்க்கச் சென்று கொண்டிருக்கிறேன்!!” என பதிலுரைத்தார். “அப்படியா, மிக்க மகிழ்ச்சி!!  எனக்கு ஒரு உதவி தங்களிடமிருந்து வேண்டுமே?” “தாரளமாக என்னவென்று சொல்லுங்கள், என்னால் இயன்றால் செய்கிறேன்!!” “தாங்கள்  பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பார்க்கும் பொது, அடியேன் எப்போது வீடு பேரு அடைவேன் என்று கேட்டுச் சொல்கிறீர்களா?” “நிச்சயமாக” என்று நாரதர் பதிலளித்துவிட்டு அங்கிருந்து பயணத்தை மேலும் தொடர்ந்தார்.  சற்று தொலைவு சென்ற பின்னர், ஒரு ஆலமரத்தடியில்  ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியைச் சந்தித்தார்.   நாரதர் எங்கு செல்கிறார் என்பதையறிந்த அவரும் அதே வ...

கிருஷ்ணர் சர்வ வல்லமை உடையவர்

 

ஜீவாத்மா, பரமாத்மா , பகவான்

 

ஜீவாத்மா

  ஜீவாத்மா  🍁🍁🍁🍁🍁🍁🍁 பகவத் கீதையிலிருந்து நாம் கற்றுக்கொள்வது ஒரு ஜீவாத்மா என்ற உணர்வு நிலைக்கு நம்மை கொண்டு வருவதே ஆகும். இந்நிலைக்கு நாம் வந்துவிட்டால், இன்னொரு முறை “நான் இந்த உடல்” என்ற உணர்வின் மட்டத்திற்கு தள்ளப்பட மாட்டோம். இதனால் இந்த உடல் அழியும் தருவாயில் நாம் பௌதிகக் களங்கங்களில் இருந்து விடுபட்டு, நம்முடைய ஆன்மீக வாழ்க்கை புதுப்பிக்கப்பட்டு விடும். இத்தகைய நிலையில் நாம் இந்த உடலை விட்டு நீங்கிய பிறகு நம்முடைய அடுத்த பிறவியில் அடையும் வாழ்க்கையானது முழுமையான, நித்தியமான ஆன்மீக வாழ்க்கையாகி விடுகிறது. இந்த உடல் அழிக்கப்பட்டவுடன் உணர்வு அழிந்துவிடுவதில்லை. மாறாக இன்னொரு உடலுக்கு அது மாற்றப்படுகிறது. மீண்டும் இன்னொரு முறை அதற்கு வாழ்க்கையின் பௌதிக கொள்கை உணர்த்தப்படுகிறது. இதுவும் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. நாம் இறக்கும் தருவாயில் நம்முடைய உணர்வு தூய்மையானதாக இருக்குமாயின், நாம் நிச்சயமாக கூறலாம், நம்முடைய அடுத்த வாழ்க்கையானது பௌதிகமாக அல்லாமல் ஆன்மீகமானதாகவே இருக்கும். நம்முடைய உணர்வு மரணத் தருவாயில் தூய்மையாக இல்லாத பட்சத்தில் நாம் இந்த உடலை விட்ட பிறகு மீ...

மனு ( மனித குலத்தின் உண்மையான தந்தை)

  மனு வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 மனு என்பவர் மனித குலத்தின் உண்மையான தந்தை ஆவார்.  இதன் காரணமாகவே மனிதகுலம் "மனுஷ்யா" என்று அழைக்கப்படுகிறது.  உலகத்தின் முழு நிர்வாகப் பொறுப்பும் பகவானிடம் திரும்பிச் செல்வதற்கான முறைக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரம்மதேவர் முழுமுதற்கடவுள் பகவான் கிருஷ்ணரின் பிரதிநிதி ஆவார்.  மனு என்பவர் பிரம்மதேவரின் மகனாவார்.  அதுபோலவே பிரபஞ்சத்தின் வெவ்வேறு கிரகங்களில் உள்ள மன்னர்கள்,  அரசர்கள் யாவரும் மனுவின் பிரதிநிதிகளாவர்.  பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர், எவ்வாறு மனுக்கள் உன்னதமான அறிவை தமக்கு போதித்தவர்களிடமிருந்து நம்பிக்கையோடு பெற்றனர் என்பதையும், எவ்வாறு  அவர்கள் நம்பிக்கையோடு தமது சந்ததியினருக்குக் அதனை கற்றுக் கொடுத்தனர் என்பதையும் விளக்குகிறார். பிரபஞ்ச படைப்பின் முதல்  உயிர் வாழி, ஸ்வாயம்புவ மனு மற்றும் அவரது மனைவி சதரூபாவையும் உருவாக்கிய பிரம்ம தேவர் ஆவார். இங்கு காட்டப்பட்ட பிரம்மதேவர் மற்றும் மனு இடையிலான தந்தை மகன் உறவை அவர்கள் கையாளும் விதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். த...

தூய பக்தித்தொண்டு பாவ விதைகளை வேருடன் பிடுங்கியெறிய முடியும்.