Skip to main content

Posts

ஹரி நாமாம்ருதம்

கிருஷ்ண உணர்விலுள்ள பக்தர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு மந்திரத்தை சொல்லிப் பயிற்சி செய்வது அவசியமாகும். மகா - மந்திரமான ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஒருவர் நிச்சயமாக ஜபிக்க வேண்டும். மேலும் சிந்தாமணி - ப்ரகர - ஸத்மஸு எனும் மந்திரத்தையோ அல்லது (இதோ ந்ருஸிம்ஹ: பரதோ நருஸிம்ஹோ யதோ யதோ யாமி ததோ ந்ருஸிம்ஹ:) என்ற நரசிம்ஹ ஸ்தோத்திரத்தையோ ஒருவர் பாடிப் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்தரும் ஏதேனும் ஒரு மந்திரத்தை பக்குவமான முறையில் பாடிப் பயிலவேண்டும். இதனால், இப்பிறவியில் அவர் ஒரு மிருகமாகப் பிறக்க நேர்ந்தாலும் கிருஷ்ண உணர்வை அவர் மறந்துவிடமாட்டார். இப்பிறவியிலேயே ஒருவர் தனது கிருஷ்ண உணர்வை பக்குவப் படுத்த முயல வேண்டும். ஏனெனில், கிருஷ்ணரையும் தன் உபதேசங்களையும் புரிந்து கொள்வதாலேயே, இவ்வுடலை உகுத்தபின் ஒருவரால் பரமபதத்தைச் சென்றடைய முடியும். ஒருவர் விழ நேர்ந்தாலும், கிருஷ்ண உணர்வுப் பயிற்சி ஒருபோதும் வீணாவதில்லை. உதாரணமாக, அஜாமிளன் தனது சிறு பிராயத்தில், தன் தந்தையின் உபதேசத்தின்படி, நாராயண எனும் நாமத்தை உச்சரிக்கும் பயிற்சியை மேற் கொண்டான். ஆனால் பிறகு, அவன் தன் வாலிபப் பருவத்தில் ஒரு குடிகாரனாகவும்...

பயம்

 

பயம்

 

அச்சம் தவிர்

பகவத்கீதைக் கூறுகிறது: ஆன்மீக வளர்ச்சியடைய விரும்பும் ஒருவன் முதலில் அச்சத்தை விட வேண்டும். “அபயம் ஸத்த்வ ஸம்ஸீத்தி:” (ப.கீ.16.1) பௌதீக ஈடுபாட்டினாலேயே அச்சம் உண்டாகிறது. இதனை ஸ்ரீமத் பாகவதமும் (11.2.37) குறிப்பிடுகின்றது: “பயம்த்விதீயாபினி வேஸத: ஸ்யாத்:” உடலியற் கருத்துடைய வாழ்க்கையே அச்சத்தினை உருவாக்குகின்றது. ஒருவன் தன்னை இழந்த ஜடவுடல் என்று நினைக்கும்வரை அவனுக்கு அச்சம் என்பது இருக்கும், இச் ஜடக்கருத்தினின்று ஒருவன் வெளிவரும் பொழுது அவன் பிரம்மபூத அல்லது தன்னுணர்வு பெற்றவனாகிறான் உடனடியாக அவன் அச்சமற்றவனாகிறான். ப்ரஹ்ம பூத: ப்ரஸன்னாத்மா (ப.கீ.18.54) அச்சமுடையோன் ஆனந்தம் அடைவதில்லை. பக்தர்கள் அச்சமில்லாதவர்கள். அவர்கள் எப்பொழுதும் ஆனந்த முடையோராயிருக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் பகவானின் தாமரைத் திருவடிகளிடத்துத் தொடர்ந்து பக்தித் தொண்டில் ஈடுபடுவதே காரணமாகும். இது மேலும் கூறப்படுகிறது: ஏவம் ப்ரஸன்ன - மனஸோ பகவத் - பக்தி - யோகத: பகவத் - தத்த்வ - விஞ்ஞானம் முக்த - ஸங்கஸ்ய ஜாயதே (பாக.1.2.20) பகவத் பக்தி யோகத்தினைப் பயிற்சி செய்வதின் மூலம் ஒருவன் அச்சமற்றவனாகவும் ஆனந்தமுடையவனாகவும் ஆகிற...

நாம் செய்யும் செயல் நம்மை அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டும் அப்படி உயர்த்தவில்லை எனில் ..

நேஹ யத்கர்ம தர்மாய ந விராகாய கல்பதே ந தீர்த்தபதஸேவாயை ஜீவந்நபி ம்ருதோ ஹி ஸ: மொழிபெயர்ப்பு யாருடைய பணி மத வாழ்வுக்கு அவனை உயர்த்தவில்லையோ, யாருடைய மதச் சடங்குகள் அவனைத் துறவுக்கு உயர்த்தவில்லையோ, துறவில் உள்ளவனை எது பரம புருஷ பகவானின் பக்தித் தொண்டுக்கு அழைத்துச் செல்லவில்லையோ, அவன் சுவாசித்துக் கொண்டிருந்தாலும் இறந்தவனாகக் கருதப்பட வேண்டும். பொருளுரை தேவஹூதியின் கூற்று என்னவென்றால், அவள் புலன் நுகர்ச்சிக்காக அவள் கணவருடன் வாழ்வதற்கு பற்றுடையவளாக இருந்தாலும், அது உலகப் பிடிப்பிலிருந்து விடுதலைக்கு அழைத்துச் செல்லாவிட்டால், அவள் வாழ்வு வீணானதாகும். ஒருவர் செய்யும் வேலை அவரை மத வாழ்வு நிலைக்கு அழைத்து செல்லாவிட்டால், அது பயனற்ற செயல் ஆகும். எல்லாரும் இயற்கையால் ஏதாவது வேலை செய்ய விருப்பம் கொள்வர், அந்த வேலை ஒருவரை மத வாழ்வுக்கு அழைத்துச் சென்றால், அந்த மத வாழ்வு ஒருவரைத் துறவு நிலைக்கு அழைத்துச் சென்றால், அந்த துறவு நிலை ஒருவரை பக்தித் தொண்டிற்கு அழைத்துச் சென்றால், ஒருவர் அந்த வேலையின் நிறைவை அடைகிறார். பகவத் கீதையில் குறிப்பிட்டிருப்பதுபோல, எந்த வேலை ஒருவரை பக்தித் தொண்டின் நிலைக்கு இறு...

பிரேமையின் சுபாவம்

 

பகவானின் திருநாமத்தை தொடர்ந்து உச்சரிப்பதால் உண்டாகும் உத்தம லக்ஷணங்கள்

  ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது சிக்ஷாஷ்டகத்தில் பிரார்த்தனை செய்கிறார்: யுகா யிதம் நிமேஷேண சக்ஷுஷா ப்ராவ்ருஷாயிதம் ஷூன்யாயிதம் ஐகத் ஸர்வம் கோவிந்த -விரஹேண மே 'கோவிந்தரே! உம்முடைய பிரிவு ஒரு கணம் என்றாலும் அதனை நான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உணர்கின்றேன்.கண்களில் கண்ணீர் பெருகி மழைபோல பொழிகிறது, தாங்களின்றி இந்த உலகையே நான் சூன்யமாகக் கருதுகின்றேன்." தனது கண்களில் கண்ணீர் நிரம்பி, குரல் தழுதழுத்து,இதயத்துடிப்பு அதிகமான நிலையில் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை உச்சரிக்க வேண்டும் என்பது ஒரு பக்தனின் ஏக்கமாகும். பகவானின் திருநாமத்தை உச்சரிப்பதில் இவை நல்ல அறிகுறிகளாகும். பரவசத்தின் காரணத்தினால், கோவிந்தர் இல்லாத முழுவுலகையும் வெற்றிடமானதாக ஒருவன் கருத வேண்டும். இதுவே கோவிந்தருடைய பிரிவின் அறிகுறியாகும். ஜடவுலகில் நாம் அனைவரும் கோவிந்தரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளோம், பௌதிகப் புலனுகர்ச்சியில் மூழ்கியுள்ளோம். எனவே, ஒருவன் ஆன்மீகத் தளத்தில் அறிவொளி பெறும்போது, அவன் கோவிந்தரைச் சந்திப்பதற்குப் பேராவல்கொள்கிறான், கோவிந்தரின்றி முழுவுலகமும் வெற்றிடமாவதை உணர்கிறான். (ஶ்ரீ சைதன்ய சரிதாம்ர...

புனித நாமம்

 

கிருஷ்ணருக்கு இடையறாது சேவை செய்யும் மனப்பான்மை

க்ரிஷ்ண நாம-மஹா-மந்த்ரேர ஏஇ த' ஸ்வபாவ  ஜேஇ ஜபே, தார க்ரிஷ்ணே உபஜயே பாவ மொழிபெயர்ப்பு "'ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபிப்பவர் உடனடியாக கிருஷ்ணருக்கான அன்புப் பரவசத்தினை வளர்த்துக்கொள்கிறார். இதுவே அந்த மஹா மந்திரத்தின் சுபாவமாகும். பொருளுரை: ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிப்பவன் பாவ அல்லது பரவசம் எனப்படும் நிலையை வளர்த்துக்கொள்வதாக இந்த ஸ்லோகத்தில் விளக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில்தான் கிருஷ்ணர் தம்மை வெளிப்படுத்தத் தொடங்குகிறார். இஃது ஒருவனது உண்மையான கிருஷ்ண பிரேமையை வளர்ப்பதன் ஆரம்பநிலையாகும். பகவான் கிருஷ்ணர் இந்த பாவ நிலையினை பகவத் கீதையில் (10.8) குறிப்பிடுகிறார்:  அஹம் ஸர்வஸ்ய ப்ரப வோ மத்த: ஸர்வம்' ப்ரவர்ததே  இதி மத்வா பஜந்தே மாம்' புதா பாவ-ஸமன்விதா: "ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு இதயபூர்வமாக என்னை வழிபடுகின்றனர்." ஓர் ஆரம்பநிலை சீடன், ஸ்ரவணம், கீர்த்தனம், பக்தர்களின் சங்கம், விதிமுறைகளைப் பயிற்சி செய்தல் என பக்தித் தொண்டினைத் தொடங்குகிறான்; இ...

கோபியர்களின் கார்த்தியாயினி விரதம்

     துர்கா தேவி, ஜட மூலகங்களாலான ஜடவுலகத்தினை மேற்பார்வையிடும் தேவதையாவாள். தேவர்கள், பௌதிகச் செயல்களின் துறைகளை நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ள வெவ்வேறு நிர்வாகிகளே ஆவர், அவர்களும் அந்த ஜட சக்தியின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளனர். ஆனால், கிருஷ்ணருடைய அந்தரங்க சக்திகள் இந்த பெளதிகப் படைப்புடன் தொடர்புகொள்வதில்லை. ஆன்மீக உலகமும் எல்லா ஆன்மீகச் செயல்களும் அந்தரங்கமான ஆன்மீக சக்தியின் வழிகாட்டுதலின் கீழ் உள்ளன. அந்தச் செயல்கள் யோகமாயை எனப்படும் ஆன்மீக சக்தியால் நிறைவேற்றப்படுகின்றன. யோகமாயை என்பது பரம புருஷ பகவானின் ஆன்மீக அல்லது அந்தரங்க சக்தியாகும். ஆன்மீக உலகத்திற்கு ஏற்றம் பெற்று பகவானின் தொண்டில் ஈடுபட விரும்புபவர்கள் யோகமாயையின் கட்டுப்பாட்டின் கீழ் ஆன்மீகப் பக்குவத்தினை அடைகின்றனர். பௌதிகத்தில் உயர்வு பெற விருப்பம் கொண்டவர்கள் புலனுகர்ச்சியை அதிகரிப்பதற்கான சமயச் சடங்குகளிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஈடுபடுகின்றனர். அவர்கள் இறுதியில் பகவானின் அருவ தோற்றத்தினுள் ஐக்கியமாக முயல்கின்றனர். அத்தகு மக்கள் பொதுவாக அருவவாதிகளாக மாறுகின்றனர். அவர்கள் சிவபெருமான் அல்லது துர்கையை வழி...

இதுவும் கடந்து போகும்

மன்னன் ஒருவர் தன் அரசவை அறிஞர்களிடம், “நான் எனக்காக ஒரு மோதிரம் செய்யப் போகிறேன். இக்கட்டான கட்டத்தில் படித்தால், எனக்கு உதவக்கூடிய ஒரு சுருக்கமான செய்தியை அதில் வைத்திருக்க விரும்புகிறேன். அப்படி ஒரு செய்தி வேண்டும்” என்று கேட்டார். பலமுறை முயன்றும் அரசவை அறிஞர்களால் இக்கட்டான கட்டத்தில் படித்தால் மன்னருக்கு உதவக்கூடிய ஒரு சுருக்கமான செய்தியைக் கண்டு பிடிக்க முடியவில்லை. மன்னரிடம் ஒரு வயதான வேலையாள் இருந்தார். மன்னர் அவரை ஒரு வேலையாளாகக் கருதுவதில்லை. வயதின் நிமித்தம் அவரிடம் மிகவும் மரியாதை வைத்திருந்தார். அந்த வயதானவர் மன்னருக்கு உதவ முன் வந்தார். அவருக்கு ஞானி ஒருவர் கொடுத்த (இக்கட்டான கட்டத்தில் படித்தால் உதவக்கூடிய) செய்தியை மன்னருக்குக் கொடுத்தார். கொடுக்கும்போது “இதைப் படிக்க வேண்டாம். மோதிரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாமே முடிந்து விட்டது, வேறு வழியேயில்லை எனும் சமயத்தில் இதைத் திறந்து பாருங்கள்” என்றார். அந்த இக்கட்டான கட்டம் வந்தது. நாட்டின்மீது படையெடுப்பு நடந்தது. மன்னர் நாட்டைப் போரில் இழந்து, தனது குதிரையில் தப்பித்து ஓடினார். பின்னால் எதிரிப் படையினர் துரத்தி வந்து ...