கிருஷ்ண உணர்விலுள்ள பக்தர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு மந்திரத்தை சொல்லிப் பயிற்சி செய்வது அவசியமாகும். மகா - மந்திரமான ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஒருவர் நிச்சயமாக ஜபிக்க வேண்டும். மேலும் சிந்தாமணி - ப்ரகர - ஸத்மஸு எனும் மந்திரத்தையோ அல்லது (இதோ ந்ருஸிம்ஹ: பரதோ நருஸிம்ஹோ யதோ யதோ யாமி ததோ ந்ருஸிம்ஹ:) என்ற நரசிம்ஹ ஸ்தோத்திரத்தையோ ஒருவர் பாடிப் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்தரும் ஏதேனும் ஒரு மந்திரத்தை பக்குவமான முறையில் பாடிப் பயிலவேண்டும். இதனால், இப்பிறவியில் அவர் ஒரு மிருகமாகப் பிறக்க நேர்ந்தாலும் கிருஷ்ண உணர்வை அவர் மறந்துவிடமாட்டார். இப்பிறவியிலேயே ஒருவர் தனது கிருஷ்ண உணர்வை பக்குவப் படுத்த முயல வேண்டும். ஏனெனில், கிருஷ்ணரையும் தன் உபதேசங்களையும் புரிந்து கொள்வதாலேயே, இவ்வுடலை உகுத்தபின் ஒருவரால் பரமபதத்தைச் சென்றடைய முடியும். ஒருவர் விழ நேர்ந்தாலும், கிருஷ்ண உணர்வுப் பயிற்சி ஒருபோதும் வீணாவதில்லை. உதாரணமாக, அஜாமிளன் தனது சிறு பிராயத்தில், தன் தந்தையின் உபதேசத்தின்படி, நாராயண எனும் நாமத்தை உச்சரிக்கும் பயிற்சியை மேற் கொண்டான். ஆனால் பிறகு, அவன் தன் வாலிபப் பருவத்தில் ஒரு குடிகாரனாகவும்...