Skip to main content

Posts

வைசியர்களின் கடமை

  விசோ ’ வர்தந்த தஸ்யோர்வோர் லோக - வ்ருத்திகரீர் விபோ : வைஸ்யஸ் தத் - உத்பவோ வார்தாம் ந்ருணாம் ய : ஸமவர்தயத் மொழிபெயர்ப்பு அனைவருக்கும் ஜீவனோபாயமாக உள்ள தானிய உற்பத்தியும் , பிரஜைகளுக்கு அவற்றை விநியோகித்தலும் , பகவானின் பிரம்மாண்ட ரூபத்தின் தொடைகளிலிருந்து உற்பத்தியானது . இதை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுள்ள வர்த்தகப் பிரிவினர் , வைசியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர் . பொருளுரை விவசாயமும் ( விச ), விவசாய உற்பத்திப் பொருட்களை வினியோகிக்கும் தொழிலும்தான் மனித சமூகத்தின் ஜீவனோபாயத்திற்குரிய வழி என்று இங்கு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது . இயந்திரத் தொழில் நுட்பமானது வாழ்க்கைத் தேவைக்குரிய செயற்கையான ஒரு வழிமுறையாகும் . குறிப்பாக பெரிய அளவிலான இயந்திரத் தொழிற் சாலைகள் தான் எல்லா சமூகப் பிரச்சினைகளுக்கும் பிறப்பிடமாக உள்ளன . பசு பராமரிப்பையும் , விவசாயத்தையும் மற்றும் வணிகத் தொழிலையும் கவனித்துக் கொள்ள வேண்டியது வைசியர்களின் கடமை என்று பகவத்கீதை குறிப்பிடுகிறது . மனிதன் தன் வாழ்க்கைத் தேவைகளுக்காக பசுவையும்...

க்ஷத்திரியர்களின் கடமை

  பாஹுப்யோ ’ வர்தத க்ஷத்ரம் க்ஷத்ரியஸ் தத் அனுவரத : யோ ஜாதஸ் த்ராயதே வர்ணான் பௌருஷ : கண்டக - க்ஷதாத் மொழிபெயர்ப்பு அதன்பிறகு பிரம்மாண்டமான விராட் - ரூபத்தின் கரங்களிலிருந்து பாதுகாக்கும் சக்தி உற்பத்தியானது . இத்தகைய சக்தியின் தொடர்பாக க்ஷத்திரியர்களும் தோற்றத்திற்கு வந்தனர் . இவர்கள் க்ஷத்திரியத் தொழில்களைப் பின்பற்றுவதன் மூலம் சமூகத்தை , திருடர்கள் மற்றும் துஷ்டரகள் ஆகியோரின் தொல்லைகளிலிருந்து காப்பாற்றினர் . பொருளுரை உன்னதமான வேத ஞானத்தில் நாட்டம் கொண்டிருப்பதெனும் இத் தகுதியைக் கொண்டு பிராமணர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் . அது போலவே திருடர்களையும் , துஷ்டர்களையும் போன்ற தீயவர்களிடமிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும் சக்தியைக் கொண்டு க்ஷத்திரியர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் . அனுவ்ருத : எனும் சொல் குறிப்பிடத்தக்கதாகும் . சமூகத்தைத் திருடர்களிடமிருந்தும் , துஷ்டர்களிடமிருந்தும் பாதுகாப்பதன் மூலம் க்ஷத்திரியக் கொள்கைகளைப் பின்பற்றும் ஒருவர் க்ஷத்திரியர் என்று அழைக்கப்படுகிறார் , ஒரு க்ஷத்திரிய குடும்பத்தில் பிறந்ததால்...