Skip to main content

Posts

மனம் எப்போதும் நம்மிடம் இதைச் செய், அதைச் செய் என்று கூறிக்கொண்டிருக்கிறது எனவே . . .

ப்ராருத்வ்யம் ஏனம் தத் அதப்ர - வீர்யம் உபேக்ஷயாத்யேதிதம் அப்ரமத்த குரோர் ஹரேஸ் சரணோபா ஸனாஸ்த்ரோ ஜஹி வ்யவீகம் ஸ்வயம் ஆத்ம - மோஷம் மொழிபெயர்ப்பு அடக்க முடியாத இந்த மனமே உயிர் வாழியின் ஆற்றல் மிகுந்த பகைவனாவான் . ஒருவன் இதனைப் புறக்கணித்தாலோ அல்லது இதற்குச் சந்தர்ப்பம் அளித்தாலோ , இது மேலும் மேலும் வளர்ந்து வெற்றி பெறும் நிலையினை எய்துகிறது . உண்மையன்று என்ற போதிலும் இது மிகவும் வலிவுடையதாகும் . இது ஆத்மாவின் சட்டபூர்வ நிலையினை மறைத்திருக்கிறது . ஒ , மன்னனே ! ஆன்மீக குரு மற்றும் முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளுக்குத் தொண்டு செய்வது என்னும் ஆயுதத்தினால் இம் மனத்தை மிகுந்த கவனமுடன் வெற்றி கொள்ள முயல்வாயாக . இதனைச் செய்வாயாக . பொருளுரை மனிதனை வெல்லவோ புறக்கணிக்கவோ ஒரே ஒரு எளிமையான கருவிதான் இருக்கிறது . மனம் எப்போதும் நம்மிடம் இதைச் செய் , அதைச் செய் என்று கூறிக்கொண்டிருக்கிறது . எனவே மனதின் கட்டளைகளுக்குப் பணியாதிருக்க நாம் மிக்க தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் . படிப்படியாக மனம் ஆத...

பக்தி தொண்டு

 

பக்குவமான கிருஷ்ண உணர்வு

  சேதஸா ஸர்வ – கர்மாணி மயி ஸன்ன்யஸ்ய மத் – பர : பு த் தி – யோக ம் உபாஷ் ரித்ய மச் – சித்த : ஸததம் ப வ மொழிபெயர்ப்பு எல்லாச் செயல்களிலும் என்னையே சார்ந்து , எனது பாதுகாப்பின் கீழ் எப்போதும் செயல்படுவாயாக . இத்தகு பக்தித் தொண்டில் என்னைப் பற்றிய உணர்வில் ஆழ்ந்துவிடு . பொருளுரை :  கிருஷ்ண உணர்வில் செயல்படுபவன் , உலகின் எஜமான னைப் போன்று செயல்படுவதில்லை . அவன் ஒரு சேவகனைப் போன்று , பரம புருஷரின் முழுமையான வழிகாட்டுதலின் கீழ் செயல்பட வேண்டும் . சேவகனுக்குத் தனிப்பட்ட சுதந்திரம் ஏதும் கிடையாது . அவன் எஜமானரின் கட்டளைப்படி மட்டுமே செயல்படுகின்றான் . உன்னத எஜமானருக்காகத் தொண்டு செய்யும் சேவகன் , இலாப நஷ்டங்களினால் பாதிக்கப்படுவ தில்லை . அவன் தனது கடமையை பகவானது கட்டளையின்படி நம்பிக்கை யுடன் நிறைவேற்றுகிறான் . அர்ஜுனன் கிருஷ்ணருடைய சொந்த வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருந்தான் , ஆனால் கிருஷ்ணர் இல்லாதபோது ஒருவன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தற்போது விவாதிக்கலாம் . இந்தப் புத்தகத்தில் கிருஷ்ணரால் ...