Skip to main content

Posts

கோபீ சந்தனத்தின் மகிமை

 கோபீ சந்தனத்தின் மகிமை ஆதாரம் - ஶ்ரீ கர்க ஸம்ஹிதை / ஆறாம் காண்டம் / அத்தியாயம் 15  🍁🍁🍁🍁🍁🍁🍁 நாரத முனிவர், பஹூலாஸ்வ மன்னரிடம் கூறினார் .  மன்னா! இனி கோபீபூமியின் மகிமையைக் கேள். இது பாவம் போக்கும் உத்தமமான தீர்த்தமாகும். அதைக் காதால் கேட்ட மாத்திரத்தில் கர்ம பந்தனத்திலிருந்து விடுதலை கிடைத்துவிடுகிறது கோபிகள் அங்கு வாசம் செய்த காரணத்தாலேயே அந்த இடம் கோபி பூமி என்னும் பெயரில் பிரபலமாகி உள்ளது. அங்கு கோபிகளுடைய அங்கப் பூச்சினால் தோன்றிய உத்தமமான கோபிசந்தனம் கிடைக்கிறது. தன் அங்கத்தில் கோபி சந்தனம் தரிப்பவனுக்கு கங்கையில் நீராடிய பலன் கிடைக்கிறது எப்போதும் கோபி சந்தனத்தால் அடையாளமிடப்பட்டவன், அதாவது கோபி சந்தனமுத்திரை திலகமணிபவன் ஒவ்வொரு நாளும் மஹா நதியில் நீராடிய புண்ய பலனை அடைகிறான் அவன் ஆயிரம் அச்வமேதமும் நூறு ராஜசூய யாகமும் செய்தவனாகிறான் எல்லா தீர்த்தங்களின் சேவையும் தான-விரதங்களின் அனுஷ்டானமும் செய்தவனாகிறான். நிச்சயம் அவன் கோபிசந்தனம் தரித்ததினால் மட்டுமே தன்யனாகி விடுகிறான். கங்கையின் மண்ணைக்காட்டிலும் இருமடங்கு புண்ணியம் சித்ரகூட மண்ணுக்கு உண்டு என்று கருதப்பட...

உண்மையான அறிவு

 
 
 

ஓடன சஷ்டி

(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் மத்யலீலை 16.78 முதல் 16.81 ) 💐💐💐💐💐💐💐 குளிர் காலத்தின் தொடக்கத்தில் ஓடன ஷஷ்டி என்று அறியப்படும் விழா ஒன்று உள்ளது. அந்த நாளிலிருந்து பகவான் ஜெகன்நாதருக்கு  குளிர் காலத்திற்கு உகந்த போர்வைகளை அணிவிக்க வேண்டும் என்பதை இந்த விழா சுட்டிக்காட்டுகிறது. அந்த போர்வை நெசவாளர்களிடம் இருந்து நேரடியாக வாங்கப்படுகிறது. அர்ச்சன வழிமுறையின்படி, துணியை முதலில் நன்றாக துவைத்து அதிலுள்ள கஞ்சியை எடுத்து விட வேண்டும், அதன் பின்னரே அதனை பகவானுக்கு போர்த்த வேண்டும் ஆனால் பகவான் ஜெகநாதரின் பூஜாரி அந்த விதியினை புறக்கணித்து கஞ்சியுடன் கூடிய உடைகளை ஜெகநாதருக்கு அணிவித்தார். அதைப் பார்த்த புண்டரீக வித்யாநிதி, பக்தர்களிடம் குற்றம் காண்பதற்கான தனது எண்ணத்தினால், கடும் கோபம் கொண்டார்  பகவான் ஜெகன்நாதருக்கு கஞ்சியுடன் கூடிய ஆடை வழங்கப்பட்டதை கண்டபோது புண்டரீக வித்யாநிதி சற்று வெறுப்படைந்தார். அதனால் அவரது மனம் கலங்கமுற்றது. அன்றிரவில் சகோதரர்களான பகவான் ஜகன்னாதரும் பலராமரும் புண்டரீக வித்யாநிதியிடம் வந்து புன்னகைத்தபடி அவரை அறையத் தொடங்கினர். அறை வாங்கியதால் அவரது கன்னங்கள் ...

வாழைத்தண்டு பச்சடி

வாழைத்தண்டு பச்சடி   தேவையான பொருட்கள் ***************************** வாழைத்தண்டு - 1 (சிறியது) கெட்டி தயிர் - 1 கோப்பை கறிவேப்பிலை - சிறிதளவு வர மிளகாய் - 3 கடுகு - 1/4 தேக்கரண்டி உடைத்து உளுந்து - 1/4 தேக்கரண்டி கடலைப் பருப்பு - 1/4 தேக்கரண்டி பெருங்காயம் - 2 சிட்டிகை எண்ணெய் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை ******************** 1. வாழைத்தண்டை வட்டவட்டமாக நறுக்கி நார்களை நீக்கி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி மோர்த் தண்ணீரில் போடவும். 2. பிறகு இதனை பிழிந்து எடுத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். 3. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உடைத்த உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயம் போட்டு தாளித்து, வேக வைத்த தண்டைப் போட்டு லேசாக வதக்கி இறக்கவும். 4. பிறகு கெட்டித் தயிரில் உப்பு சேர்த்து கலக்கி வேகவைத்து, தாளித்த வாழைத்தண்டில் கொட்டி ஒரு கிளறு கிளறி பரிமாறவும். குறிப்பு ******************** 1. தயிர் கலந்த பின்பு அடுப்பில் வைக்கக் கூடாது. 2. தயிர் தண்ணியாகவும் இருக்கக் கூடாது. 3. வாழைத்தண்டு கறுக்காமல் இருப்பதற்காக மோர் தண்ணீரில் போடவும்.

தேங்காய் பர்பி

தேங்காய் பர்பி  தேவையான பொருட்கள் ****************************** தேங்காய் துருவல் - 1 கப் (நன்கு அழுத்தியது) சர்க்கரை - 1 கப் (200 கிராம்) ஏலக்காய் - 4 (பொடி செய்தது) முந்திரி, பாதாம் - தலா 1 தேக்கரண்டி (பொடியாக சீவியது) நெய் - 1 தேக்கரண்டி (வறுக்க)\ செய்முறை ********************* 1. முதலில் தேங்காய்த் துருவலை லேசாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். 2. அரை கப் தண்ணீரில் சர்க்கரையைக் கொட்டி அடுப்பில் வைத்து கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும். 3. பதம் வந்ததும் தேங்காய்த் துருவலைக் கொட்டி கிளறவும். 4. நன்றாக கிளறி கெட்டி பதம் வந்ததும், வாணலியில் ஒட்டாமல் வரும் போது, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும் 5. ஒரு தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் கொட்டி பரப்பி ஆற வைக்கவும். 6. ஒரு தேக்கரண்டி நெய்யில் சீவிய முந்திரி, பாதாமை போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் கொட்டிய தேங்காய் கலவையில் கொட்டி லேசாக அழுத்தி விடவும். 7. லேசாக சூடு ஆறியதும் கத்தியால் விருப்பமான வடிவில் வில்லைகளாக போட்டு நன்கு ஆற விடவும். குறிப்பு **************** 1. அடுப்பில் தொடர்ச்சியாக வி...